India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விஜய்யின் அரசியல் குறித்து இயக்குநர் ஆர்.கே. செல்வமணி பேசியுள்ளார். இயக்குநர்கள், நடிகர்களை எப்போதுமே குழந்தையை போல் பார்ப்பார்கள். ஷூட்டிங் லேட்டாக வந்தாலும் திட்ட மாட்டார்கள். அப்படி பூ மாதிரி இருந்த நடிகர்கள், அரசியலுக்கு வந்தால் யார் யாரோ தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பார்கள். இதை நடிகர்களால் தாங்க முடியாது. இதை தாண்டி விஜய் ஜெயிக்கணும். அந்த பாப்புலாரிட்டி அவரிடம் உள்ளது எனக் கூறினார்.
பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் நாடு முழுவதும் காலியாக உள்ள 200 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஆக.14) கடைசி நாளாகும். இதில் தமிழ்நாட்டில் 10 பணியிடங்கள் உள்ளன. ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் www.lichousing.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
PM சூரிய மின் திட்டத்தின்கீழ், மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு கிராமத்தில் சூரியசக்தி மின்நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் ஒரு கிராமத்திற்கு தேவைப்படும் மின்சாரம் முழுவதும் சூரியசக்தி வாயிலாக விநியோகம் செய்யப்பட உள்ளது. இதற்காக ஒரு கிராமத்திற்கு ₹1 கோடி மத்திய அரசு நிதி வழங்க உள்ளது. 5,000க்கு அதிமான மக்கள் வசிக்கும் கிராமத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமின் மனு, SC-யில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த விவகாரத்தில் ED தொடுத்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு SC கடந்த ஜூலை மாதம் 12இல் இடைக்கால ஜாமின் அளித்தது. எனினும், சிபிஐ தனியே வழக்குப்பதிந்து அவரைக் கைது செய்தது. இதனால் சிறையில் கெஜ்ரிவால் தொடர்ந்து உள்ளார். இதை எதிர்த்தும், ஜாமின் கோரியும் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார்.
போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை ED அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்துள்ளனர். வெளிநாடுகளுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் என்ற பெயரில் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு போதை பொருள் கடத்தியதாக ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கடந்த சில நாட்களாக அவரது தம்பியிடம் ED அதிகாரிகள் விசாரித்து வந்தனர்.
நியூசி., முன்னாள் வீரர் ஜார்ஜ் வோர்க்கர் (34) அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். 2015-18க்கு இடையில் அந்த அணிக்காக 10 ODI போட்டிகளில் விளையாடி 272 ரன்களையும், இரண்டு T20 போட்டிகளில் விளையாடி 90 ரன்களையும் எடுத்துள்ளார். இடது கை பேட்டரான இவர், 169 முதல் தர கிரிக்கெட்டில் விளையாடி 16,601 ரன்களும் எடுத்துள்ளார்.
சுனாமியின் கோரத் தாண்டவத்தை உலக மக்கள் அனைவருமே பார்த்துள்ளனர். சுனாமி எப்படி உருவாகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் சுனாமியின் வேகம் எவ்வளவு தெரியுமா? சுனாமி ஆழ்கடலில் பயணித்து கரை அருகே எழும்பும். அப்படி ஆழ்கடலில் மணிக்கு 800 கி.மீ. வேகத்தில் சுனாமி பயணிக்கும். அதாவது ஒரு ஜெட் வேகத்திற்கு இணையான வேகத்தில் வரும் சுனாமி, ஒரு பெருங்கடலையே ஒரு நாளுக்குள் கடந்து விடுமாம்.
YOU TUBER சவுக்கு சங்கர் மீதான 2வது குண்டர் சட்ட நடவடிக்கைக்கு ADMK கண்டனம் தெரிவித்துள்ளது. ADMK மூத்த தலைவர் ஜெயக்குமார் வெளியிட்ட பதிவில், சுதந்திரத்தை முடக்கி மக்கள் விரோத ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெறுவதாக விமர்சித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ஊடகத்துறையின் மீது அதிகார தாக்குதல் நிகழும். இது ஒட்டுமொத்த பத்திரிக்கை, ஊடகத் துறையினருக்கான அச்சுறுத்தல் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய பேரூராட்சிகளை, நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. இந்த 3 பேரூராட்சிகளும், நகராட்சிகளாவதற்கான தேவையான மக்கள் தொகை அளவுகோலை பூர்த்தி செய்யாவிட்டாலும், சராசரி வருமானம் என்ற அளவுகோலை பூர்த்தி செய்துள்ளது. இதனையடுத்து, உத்தேச நகராட்சிகளின் வார்டுகள் எல்லைகளை வரையறை செய்து, நகராட்சிகளுக்கான அடுத்த சாதாரண தேர்தல் நடத்தப்படும்.
ஒலிம்பிக்ஸ் வழக்கில் தீர்ப்பு <<13846296>>வினேஷ் <<>>போகத்துக்கு சாதகமாக இருக்கும் என WFI துணைத் தலைவர் ஜெய் பிரகாஷ் செளதரி தெரிவித்துள்ளார். எடை அதிகரிப்பால் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்தும், வெள்ளி பதக்கம் கோரியும் தொடுத்த வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கேள்விக்கு, அதிகாரமிக்கவர்கள் தலையிட்டுள்ளனர். போகத்துக்கு பதக்கம் கிடைக்கும் என செளதரி பதிலளித்தார்.
Sorry, no posts matched your criteria.