India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சுதந்திர தினம் மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு அதிகளவில் பயணிகள் செல்வதால், ஆம்னி பேருந்துகளை தொடர்ந்து, விமானக் கட்டணமும் இரு மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ₹4,301லிருந்து ₹10,796ஆகவும், மதுரைக்கு ₹4,063லிருந்து ₹11,716ஆகவும், திருச்சிக்கு ₹7,192ஆகவும், கோவைக்கு ₹5,349ஆகவும் உயர்ந்துள்ளது. இதனால், நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பள்ளி பாடப் புத்தகங்களின் விலையை அரசு உயர்த்தியதற்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார் புத்தகங்களை அனைவருக்கும் இலவசமாக அரசால் தரமுடியவில்லை என்றாலும், விலையையாவது ஏற்றாமல் இருக்க வேண்டும் எனக் கூறினார். மேலும், இந்த விலை உயர்வு காரணமாக, மாணவர்களிடம் தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிக்க நேரிடும். எனவே, உயர்த்தப்பட்ட பாடப் புத்தகங்களின் விலை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
100 வந்தே பாரத் ரயில் தயாரிக்கும் ஒப்பந்தப் புள்ளியை ரயில்வே ரத்து செய்துள்ளது. ₹30,000 கோடிக்கு 100 அலுமினிய ரயில்களை கட்டமைத்து, 30 ஆண்டுகளுக்கு பராமரிக்க ஒப்பந்தபுள்ளியை 2022இல் ரயில்வே கோரியது. இதை பிரான்சின் அல்ஸ்டாம் நிறுவனம் எடுத்ததையடுத்து நடந்த பேச்சில், ஒரு ரயில் தயாரிக்க அல்ஸ்டாம் ₹145 கோடி கோரியது. ரயில்வே ₹140 கோடி கூறியதால் பேச்சு தோல்வியடைந்ததால் ஒப்பந்தப்புள்ளி ரத்தானது.
அடுத்தாண்டு ஹஜ் யாத்திரை செல்ல விரும்புவோருக்கு விண்ணப்பப்பதிவு ஆன்லைனில் தொடங்கியுள்ளது. இதற்கு செப்.9 வரை விண்ணப்பிக்கலாம். முதல்முறையாக இந்தாண்டில் https://hajcommittee.gov.in/ இணையதளத்துடன் சேர்த்து, HAJ Suvidha APP என்ற பிரத்யேக செயலி மூலமாகவும் விண்ணப்பப் பதிவு நடைபெறுகிறது. 2025ம் ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு இந்தியாவுக்கு 1,75,025 இடங்களை சவூதி அரேபியா ஒதுக்கியுள்ளது.
சாதி, மதம், இனம், மொழி என சிதறிக் கிடக்கும் 140 கோடி இந்தியர்களை ஒரே ரத்த பந்தத்தில் இணைப்பது நம் மூவர்ணக் கொடி தான். நம் தேசியக் கொடியில் உச்சத்தில் இருக்கும் காவி நிறம், சுதந்திரத்திற்காக ரத்தம் சிந்தியவர்களின் வீரத்தை குறிக்கிறது. நடுவில் உள்ள வெண்மை நிறம், அமைதியை பறைசாற்றுகிறது. கீழே உள்ள பச்சை நிறம் வீரத்தை குறிக்கிறது. நடுவில் உள்ள அசோக சக்கரம் நீதியையும், வளர்ச்சியையும் குறிக்கிறது.
பாஜகவுக்கு விரைவில் புதிய செயல் தலைவர் அறிவிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஜெ.பி. நட்டா பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், அவர் மத்திய அமைச்சரவையிலும் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் புதுத் தலைவரை தேர்வு செய்ய பாஜக, ஆர்எஸ்எஸ் ஆலோசிக்கின்றன. முதல்கட்டமாக செயல் தலைவர் தேர்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது. பெண் (அ) OBC பிரிவினர் தலைவராக தேர்வு செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.
2024-25ல் IND அணி விளையாடும் போட்டிகளுக்கான அட்டவணையில் BCCI மாற்றம் செய்துள்ளது. BANக்கு எதிராக செப்.19ல் முதல் டெஸ்ட், 27ல் 2வது டெஸ்ட் போட்டியும், அக். 6, 9,12ல் 3 T20 போட்டிகளும் நடக்க உள்ளது. முதல் T20 போட்டி தர்மசாலாவுக்கு பதில் குவாலியரில் நடைபெற உள்ளது. 2025 ஜன.22,25,28,31 மற்றும் பிப்.2ல் ENG உடன் 5 T20கள் விளையாடப்படும். பிப். 6, 9, 12ல் மூன்று ODI போட்டிகள் நடைபெறும் எனக் கூறியுள்ளது.
ரஜினியை உச்சத்திற்கு தூக்கிவிட்ட படங்களில் ஒன்று பில்லா. இதில் ரஜனிக்கு ஜோடியாக ஸ்ரீபிரியா நடித்திருப்பார். ஆனால், முதலில் அந்த வாய்ப்பு ஜெயலலிதாவுக்கே கிடைத்திருக்கிறது. ஆனால் அதை அவர் மறுத்துவிட்டார். மேலும், தான் சினிமா வாய்ப்புக்காக காத்திருப்பதாக செய்தி வெளியிட்ட பத்திரிகைக்கு கோபமாக லெட்டர் எழுதிய ஜெயலலிதா, ரஜினிக்கு நாயகியாக நடிக்கும் வாய்ப்பை மறுத்தவள் நான் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு ராணுவம் எவ்வளவு முக்கியமோ அதுபோல சக்திவாய்ந்த உளவு அமைப்புகளும் அவசியமாகும். இதுபோன்ற சக்திவாய்ந்த உலகின் டாப் 10 உளவு அமைப்புகளின் பெயர்களைத் தெரிந்து கொள்வோம். *இஸ்ரேல் – மொசாட் *அமெரிக்கா – C.I.A.*பிரிட்டன் -MI-6 *இந்தியா – R.A.W. *பாகிஸ்தான் – I.S.I. *சீனா -MSS *ரஷ்யா – FIS *பிரான்ஸ் – DGSE *ஆஸ்திரேலியா -ASIS *ஜெர்மனி – BND ஆகியவை ஆகும்.
வோடஃபோன் ஐடியா (VI) நிறுவனத்தின் அதிரடி முடிவுகளால் JIO, AIRTELக்கு பெரும் சவால் காத்திருக்கிறது. FPO மூலம் ஏப். 2024ல் ₹18,000 கோடி நிதி திரட்டிய அந்நிறுவனம், நெட்வொர்க் மேம்படுத்தலுக்காக நவீன சாதனங்களை வாங்க உள்ளது. இதையொட்டி, இன்னும் ஒரு மாதத்தில் நோக்கியா, எரிக்சன், சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களுடன் 5G மற்றும் 4G விரிவாக்கத்திற்கான புதிய நீண்ட கால ஒப்பந்தங்களை அந்நிறுவனம் இறுதி செய்ய உள்ளது.
Sorry, no posts matched your criteria.