India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாளை ஆக. 15-ஆம் நாள். 78வது சுதந்திர தினத்தில் அடியெடுத்து வைக்கிறோம். இதையும் ஒரு விடுமுறை தினமாகவே இன்றைய தலைமுறையினர் கடந்து செல்வதை பார்க்கும் போது மனம் கொதிக்கிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ரத்தம் சிந்தியதால் கிடைக்கப் பெற்றதுதான் நமது சுதந்திரம். இன்று நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக அன்றைக்கு வெள்ளையர்களின் பீரங்கிக்கு நெஞ்சை காட்டிய தியாகிகள் ஏராளம்.
ஆங்கிலேயர்களுக்கு அடிமையாகி விடலாம் என எண்ணிய மக்களை கிளர்ந்தெழச் செய்தது தலைவர்களின் வீர முழக்கங்களே. அவற்றை பார்ப்போம். 1. என்று தணியும் சுதந்திர தாகம்; என்று மடியும் அடிமையின் மோகம் (பாரதியார்). 2. சுதந்திரம் எனது பிறப்புரிமை (பாலகங்காதர திலகர்), 3. சுயமரியாதை இல்லாத வாழ்க்கை பயனற்றது (மதன் மோகன் மால்வியா), 4. என்னை கொன்று விடலாம். எனக்குள் இருக்கும் தீயை அழிக்க முடியாது (பகத் சிங்).
5. சுதந்திரம் கொடுக்கப்படுவது அல்ல; எடுக்கப்படுவது. உங்கள் ரத்தத்தை கொடுங்கள்; நான் சுதந்திரத்தை கொடுக்கிறேன். ஜெய்ஹிந்த் (சுபாஷ் சந்திர போஸ்). 6. செய் அல்லது செத்து மடி (மகாத்மா காந்தியடிகள்), 7. வந்தே மாதரம் (பக்கிம் சந்திர சாட்டர்ஜி). இதுபோன்ற முழக்கங்கள் தான், அன்றைக்கு வீட்டில் பயந்து கிடந்த லட்சக்கணக்கான ஆண்களையும், பெண்களையும் ரத்தம் கொதிக்க வைத்து ஆங்கிலேயர்களை எதிர்க்கச் செய்தது.
தேச ஒற்றுமை பாதுகாக்கப்படும் என்று PM மோடி உறுதியளித்துள்ளார். 1947இல் இந்தியா 2 நாடுகளாக பிரிந்து இன்றுடன் 78 ஆண்டு ஆவதையொட்டி, X பக்கத்தில் மோடி பதிவிட்டுள்ளார். அதில் அவர், பிரிவினை கொடூரங்களால் பாதிக்கப்பட்ட, துன்பத்திற்கு ஆளான எண்ணற்ற மக்களை இந்நாளில் நினைவு கூருவதாக கூறியுள்ளார். தேச ஒற்றுமை, சகோதரத்துவ பிணைப்பை பாதுகாப்போம் என மீண்டும் உறுதியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
அனைத்து பள்ளிகளிலும் தியாகிகளை அழைத்து, சிறந்த முறையில் சுதந்திர தினவிழாவைக் கொண்டாட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்கள், மலர்களால் அலங்கரித்து தேசிய கொடி ஏற்றி விழாவை கொண்டாடலாம். ஆனால், பிளாஸ்டிக் வகையிலான தேசிய கொடியை பயன்படுத்தக் கூடாது. தேசிய கொடியை தலைகீழாகவோ, கிழிந்ததையோ ஏற்றக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி, ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க உள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது. அக்கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் கலந்துகொள்வர் என்று தெரிவித்துள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் இவ்விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. ஆனால், திமுகவின் நிலைப்பாடு குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை.
ராணிப்பேட்டை அருகே 4 வயது சிறுவன் ரேபிஸ் நோய் தாக்கி உயிரிழந்துள்ளான். கடந்த ஜூன் 27ல் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் நிர்மலை, வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் பரவியுள்ளது. தொடர்ந்து, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றபோதும், நோயின் தாக்கம் தீவிரமடைந்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். சமீபமாக நாய்க்கடி சம்பவம் அதிகரித்து காணப்படும் நிலையில், சிறுவனின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டை சேர்ந்த 23 தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காவல் அதிகாரிகள் எஸ்.கண்ணன், ஏ.ஜி.பாபு, காவல் ஆணையர் பிரவீன்குமார், எஸ்பிக்கள் பெரோஸ்கான் அப்துல்லா உள்ளிட்டோருக்கு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும் பொதுத்துறை நிறுவனமான IRCTC நடப்பாண்டின் முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிகர லாபம் 33% உயர்ந்து, ₹308 கோடியாக அதிகரித்துள்ளது. வருவாயைப் பொறுத்தமட்டில், 12% அதிகரித்து, ₹1,120 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டு ₹1,002 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டு ₹290 கோடியாக இருந்த ஆன்லைன் டிக்கெட் வருவாய் ₹329 கோடியாக அதிகரித்துள்ளது.
மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 2.2 கிலோ தங்கத்தை CUSTOMS அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் வந்த பெண் பயணியிடம் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ₹1.53 கோடி மதிப்பிலான 2,291 கிராம் தங்க செயின்களை கடத்தியது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்து அதிகாரிகள் நகைகளை பறிமுதல் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.