India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடந்த 10 ஆண்டுகளில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் PM மோடி பல டிசைன், நிறங்களில் தலைப் பாகைகளை அணிந்திருந்தார். (மேலே படத் தொகுப்பில் காணலாம்). இந்தாண்டு டெல்லியில் நாளை அவர் தேசியக் கொடி ஏற்றவுள்ளார். அப்போது அவர், எந்த நிறம் மற்றும் டிசைன் கொண்ட தலைப்பாகையை அணிய போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். உங்கள் கமெண்டை பதிவிடுங்கள்.
கனிம வளங்கள் மீதான வரி விதிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கு உண்டு என்று SC தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வில் 8 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பை வழங்கினார்.
கனிமவள நிலம் தொடர்பாக ஏராளமான வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், 2005 முதல் மத்திய அரசு வசூலித்த கனிம உரிமைத் தொகையை, 12 ஆண்டுகளுக்கு தவணை முறையில் வசூலித்துக் கொள்ளலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இறந்தவர்களின் பெயரை நீக்குவதில் கவனமுடன் செயல்படுமாறு, ரேஷன் கார்டுதாரர்களை அரசு அறிவுறுத்தியுள்ளது. ஒருவர் இறந்துவிட்டால், அடக்கம் செய்யும்போது இறந்தவரின் ஆதார் கேட்கப்படுகிறது. சிலர் தவறுதலாக இறந்தவரின் ஆதாருக்கு பதிலாக, தங்களின் ஆதாரை வழங்குகின்றனர். மின் ஆளுமை முகமை (e-gov) வாயிலாக ஆதார் எண் அடிப்படையில், ரேஷன் கார்டில் இருந்து அந்த பெயர் நீக்கப்படுவதால் கவனமாக செயல்பட வலியுறுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் கலக்குபவர் ரஷ்மிகா மந்தனா. தமிழில் சுல்தான், விஜய்யின் வாரிசு படங்கள் மூலம் ரசிகர்களை வசப்படுத்தினார். தற்போது அனிமல் படம் மூலம் பான் இந்தியா நாயகியாகவும் உருவெடுத்துள்ளார். இந்நிலையில், ஆரம்பக்காலங்களில் சினிமாவில் நடிக்க முயற்சித்த போது, தான் அழகாக இல்லை என்று பல இயக்குநர்கள் திருப்பி அனுப்பியதாக பேட்டியில் தெரிவித்தார்.
இந்தியாவில் செல்வந்தர்கள் தங்களது கார்களின் மூலமாகவே ஸ்டேட்டஸ் காட்டுவது வழக்கம். ரோல்ஸ் ராய்ஸ், ஃபெராரி, புகாட்டி, லாம்போர்கினி என கப்பல் போன்ற கார்கள் வாங்கி இறக்குமதி செய்வது வாடிக்கை. ஆனால், இந்திய தொழிலதிபர் லட்சுமி மிட்டல் கப்பலையே வாங்கி மாஸ் காட்டியுள்ளார். அதுவும் உலகிலேயே விலை உயர்ந்த சொகுசு கப்பலான அமேவியை (Amevi) வாங்கியுள்ளார். இதன் விலை ஜஸ்ட் 1,048 கோடி ரூபாய் தான்.
கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிபிஐ விசாரணையை தொடங்கியது. இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயை சிபிஐயிடம் கொல்கத்தா காவல்துறை ஒப்படைத்தது. தொடர்ந்து, அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த படுகொலைக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதானி குழுமத்துக்காக இந்தியாவின் ஏற்றுமதிக்கான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக காங்., குற்றம் சாட்டியுள்ளது. ஏற்றுமதி விதிகள் திருத்தத்தால், அதானி குழுமம் வங்கதேசத்துக்கு பதில் இந்தியாவிலேயே மின்சாரம் விற்க சலுகை வழங்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக அங்கு மின்சாரம் விற்பனையில் சிக்கல் எழுந்துள்ளதால், பாஜக அரசு இந்த திருத்தத்தை செய்துள்ளதாக காங்., சாட்டியுள்ளது.
விஜய் கட்சியின் முதல் மாநாடு செப். 22ஆம் தேதி நடைபெறும் என செய்திகள் வெளியாகியுள்ளன. தவெக கட்சியை ஆரம்பித்தது முதல் அவர் எப்போது மாநாடு நடத்துவார் என எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியில் செப்.22ஆம் தேதி நடைபெறும் என மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். தவெக கட்சியின் கொடியை விரைவில் விஜய் வெளியிடுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி, 1,037 பேருக்கு குடியரசுத் தலைவரின் வீர தீர செயல்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் பெற்று நாளையுடன் 78 ஆண்டு ஆகிறது. இதையொட்டி, போலீசார், தீயணைப்புத் துறையினர், ஊர்க்காவல் படை உள்ளிட்டவற்றைச் சேர்ந்த 1,037 பேருக்கு விருதை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அவர்களில் 91 பேர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர். 23 பேர் தமிழக காவல்துறையினர் ஆவர்.
கடந்த ஒரு வாரமாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ₹80 குறைந்து ₹52,440க்கும், கிராமுக்கு ₹10 குறைந்து ₹6,555க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ₹88க்கும், கிலோ வெள்ளி ₹500 குறைந்து ₹88,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.