India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள ‘GOAT’ திரைப்படம் செப்.5ல் வெளியாகிறது. படத்தின் கதை குறித்து மெளனம் கலைத்த வெங்கட் பிரபு, கற்பனைக் கதை என்றாலும், நிஜத்திற்கு நெருக்கமாக எடுக்க முயற்சித்துள்ளதாக கூறினார். RAW அமைப்போடு இணைந்து பணியாற்றிய Special Anti Terrorists Squad குரூப் ஒன்று, ஒரு பிரச்னையில் சிக்குகிறது. அதை அவர்கள் எப்படி ஜெயிக்கிறார்கள் என்பதே கதை என்றார். எப்படி இருக்கு கதை?
சனாதனம் தொடர்பான பல்வேறு மாநில வழக்குகளில் ஆஜராக உதயநிதி ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. அதேநேரம், அனைத்து வழக்குகளையும் தமிழகத்திற்கு மாற்ற மறுப்பு தெரிவித்த நீதிமன்றம், வழக்கில் எதிர்மனுதாரர்கள் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. தன் மீது பல்வேறு மாநிலங்களில் தொடரப்பட்ட வழக்குகளுக்கு எதிராக அவர் முறையிட்டிருந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காண்ட்ராக்ட் ஊழியர்களுக்கும் பேறுகால விடுப்பு உண்டு என்று கர்நாடக HC தீர்ப்பளித்துள்ளது. இதுதொடர்பான மனுவை விசாரித்தபோது, மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதைக்கேட்ட நீதிபதி, அவுட்சோர்சிங், மேன்பவர் ஏஜென்சிகள் மூலம் எடுக்கப்பட்ட காண்ட்ராக்ட் ஊழியர்களுக்கும் விடுப்பு உண்டு என்று தீர்ப்பளித்தார். தமிழ்நாட்டில் காண்ட்ராக்ட் ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்கப்படுகிறதா? உங்கள் கருத்தை பதிவிடுங்க.
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா பதவி விலக முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். ஜப்பானின் 100ஆவது பிரதமராக 2021 அக்டோபரில் அவர் பதவியேற்றார். இதையடுத்து, 3 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில், செப்டம்பரில் பதவி விலக முடிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பணவீக்கம் அதிகரிப்பு உள்ளிட்டவையே அவரின் பதவி விலகல் முடிவுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜி வழக்கில் ED பதிலளிக்க ஐகோர்ட் மேலும் ஒரு வாரம் கால அவகாசம் அளித்துள்ளது. ED வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்த முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில், மீண்டும் அவகாசம் கேட்கக்கூடாது என்ற கட்டுப்பாடுடன் ஒருவாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகலில் ஜாமின் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிறப்பு, இறப்பு பதிவிடும் மத்திய அரசின் CRS இணையதளத்தில் 4 மாதங்களாக தொழில்நுட்பக் கோளாறு நிலவுவதாக பல்வேறு மாநில அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். 2023 அக். முதல் crsorgi.gov.in இணையதளத்தில் பிறப்பு, இறப்பை பதிவிடக்கோரி மத்திய அரசு 2023இல் சட்டம் கொண்டு வந்தது. அதன்படி, அதில் பதிவிட்டபிறகே சான்று அளிக்கப்படும் நிலையில், தற்போது அதில் தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.
சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட 22 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருச்சி எஸ்பி வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்டதாக கூறி 22 பேர் மீது தில்லைநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த கண்ணன், மற்றும் மதுரையை சேர்ந்த திருப்பதி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இவ்வழக்கில் CBIன் கருத்துகளை பெறாமல் இடைக்கால ஜாமின் வழங்க முடியாது என்று கூறிய நீதிமன்றம், ஆக. 23க்குள் சிபிஐ பதிலளிக்க கோரியும் நோட்டீஸ் அளித்துள்ளது. ஜாமின் கோரியும், சிபிஐ கைது நடவடிக்கை சட்டத்துக்கு புறம்பானது என்றும் கெஜ்ரிவால் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி பாஜக சார்பில் இருசக்கர வாகனங்களில் தேசியக் கொடி ஏந்தி பேரணி நடத்த முடிவெடுக்கப்பட்டது. ஆனால், இதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜக மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், பாஜக பேரணிக்கு அனுமதி வழங்குமாறு டிஜிபிக்கு உத்தரவிட்டது. மேலும், வாகனப் பேரணி நடத்துவோர் கண்ணியம் காக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
உங்களது பகுதியில் மின்தடை ஏற்படும் நாள், நேரம் குறித்து முன்கூட்டியே அறிய முடியும்.
<
Sorry, no posts matched your criteria.