India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் G.O.A.T படத்தின் ட்ரெய்லர் குறித்த அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில், G.O.A.T படம் ‘மங்காத்தா’ படத்தைப் போல 100 மடங்கு இருக்க வேண்டும் என அஜித் கூறியதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். நீண்ட நாள்களாக விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என தன்னிடம் கூறிய அஜித், இப்படம் தொடங்கியதுமே வாழ்த்து தெரிவித்ததாக வெங்கட் பிரபு கூறியுள்ளார்.
திருமண பந்தியில் இலை விரித்து, அதோடு மது பாட்டிலையும் விநியோகம் செய்வது போன்ற வீடியோவை ஆளுங்கட்சி எதிர்ப்பாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மதுவால் தமிழ்நாடு சீரழிவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கும் அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு, “அந்த வீடியோ 2023ஆம் ஆண்டு தெலங்கானாவில் எடுக்கப்பட்ட வீடியோ” என்று தெரிவித்துள்ளது.
ICMR, Panacea Biotec இணைந்து இந்தியாவின் முதல் உள்நாட்டு டெங்கு தடுப்பூசியின் (DengiAll) 3ஆம் கட்ட பரிசோதனையை தொடங்கியுள்ளன. முதல் மற்றும் 2ஆம் கட்ட பரிசோதனைகள் 2018-19இல் நிறைவடைந்தன. டெங்கு நோயை எதிர்த்து போராட, ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் சுயசார்பு சுகாதாரத்தை மேம்படுத்த இது ஒரு முக்கிய படியாக பார்க்கப்படுகிறது. இந்த முயற்சி டெங்கு இல்லாத இந்தியாவை உருவாக்குமா?
TNPSC குரூப் 4 முடிவுகள் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 6,244 காலிப் பணியிடங்களுக்காக கடந்த ஜூன் 9ம் தேதி நடந்த இத்தேர்வை 15.8 லட்சம் பேர் எழுதினர். இந்நிலையில், இந்த வாரத்தில் முடிவுகள் வெளியாக உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. முடிவுகளை <
பாடநூல் புத்தக விலை உயர்த்தப்பட்டது ஏன் என்பது குறித்து பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், காகித விலை 63%, மேல் அட்டை 33%, அச்சுக்கூலி 21% உயர்ந்துள்ளதாகவும், இந்த விலையேற்றங்களை ஈடுகட்டவே பாட புத்தக விலை 6 ஆண்டுக்கு பிறகு தற்போது உயர்த்தப்பட்டு உள்ளதாகவும், லாப நோக்கத்துக்காக விலை உயர்த்தப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி, ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது. ஏற்கெனவே, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இவ்விருந்தை புறக்கணிப்பதாகத் தெரிவித்திருந்தன. எனினும், திமுக தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இருந்த நிலையில், தற்போது புறக்கணிப்பதாகக் கூறியுள்ளது. அதேநேரம், இவ்விருந்தில் அதிமுக கலந்துகொள்வதாக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இன்று குமரி, நெல்லை, தென்காசி, சேலம், திருச்சி, கரூர், ஈரோடு, கோவை, தேனி, மதுரை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.
வரியை குறைக்கவே தான் விரும்புவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், நம் நாடு ஏராளமான சவால்களை சந்தித்து வருகிறது. அதனை சமாளிக்க அதிக பணம் தேவைப்படுகிறது. இதை மக்களும் புரிந்துகொள்ள வேண்டும். எனக்கும் வரியை குறைக்க ஆசை தான். ஆனால் முடியவில்லை. எனது வேலை வருமானத்தை அதிகரிப்பதுதான். மக்களை கஷ்டப்படுத்துவது அல்ல எனக் கூறினார்.
திமுக கூட்டணிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு CPM மாநிலத் தலைவர் கே. பாலகிருஷ்ணன் பதிலளித்துள்ளார். தமிழகத்தில் ஆட்சி செய்வது திமுகவே தவிர, கூட்டணி இல்லை என்றும், அரசின் சில விவகாரங்களில் முரண்படும்போது தங்கள் கருத்துக்களை சொல்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார். கூட்டணிக் கட்சி என்பதால் திமுக அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் ஏற்க வேண்டிய கட்டாயம் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹6 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என பினராயி விஜயன் அறிவித்துள்ளார். உடல் உறுப்புகளை இழந்தவர்களுக்கு ₹75,000, காயமடைந்த நபர்களுக்கு ₹50,000, வீடுகளை இழந்தவர்களுக்கு ₹6,000 வாடகை உதவித் தொகை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும், நிலச்சரிவில் இருந்து 233 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது, 118 பேரை காணவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.