India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நிதி நிறுவன தலைவர் தேவநாதனை 14 நாள்கள் காவலில் வைக்க, நிதி மோசடிகளுக்கான சிறப்பு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ‘தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட்’ தலைவராக இருக்கும் அவர், மக்களிடம் ₹50 கோடி மோசடி செய்த புகாரில் நேற்று கைதானார். திருச்சியிலிருந்து அழைத்து வரப்பட்டு, சென்னை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த எம்.பி.தேர்தலில் அவர், சிவகங்கையில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து பேசினார். நாட்டின் 78ஆவது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், அவருக்கு பூங்கொத்து கொடுத்து, ராகுல் வாழ்த்து தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவரான பின் ராகுல் காந்தி முதல்முறையாக குடியரசுத் தலைவரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ளது.
பிக்சல் 9 சீரிஸ் ஃபோன்களை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், பழைய சீரிஸ் ஃபோன்களின் விலையை கணிசமாக குறைத்துள்ளது. அதன்படி, பிக்சல் 8(128GB) ₹4,000 Discount உடன் ₹71,999க்கும், 8 pro(128GB) ₹7,000 Discount உடன் ₹99,999க்கும், 8a(128GB) ₹3,000 Discount உடன் ₹49,999க்கும் கிடைக்கும். அதேபோல, 7a(128GB), 8(256GB), 8a(256GB), 8 pro(256GB) ஆகிய மாடல்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளன.
தேசிய வங்கியான, பஞ்சாப் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பொறியியல் படித்த 25 -35 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் <
நடுக்கடலில் நாகை ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மீனவர்களின் நான்கு படகுகளில் ஆயுதங்களுடன் ஏறி தாக்குதல் நடத்திய கொள்ளையர்கள், ரூ.5 லட்சம் மதிப்பிலான 700 கிலோ மீன்பிடி வலைகளையும் பறித்துச் சென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் பலவற்றுக்கு நாளை முதல் தொடர்ச்சியாக 4 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், ஆக.16 வரலட்சுமி விரதம், ஆக.17, 18 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. இதனால், பல்வேறு தனியார் பள்ளிகள் நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை அறிவித்துள்ளன. திங்கள் கிழமை வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, கொலை செய்யப்பட்ட சம்பவம், குலை நடுங்க வைத்துள்ளது. இந்நிலையில், சஜித் என்ற கார்டூனிஸ்ட் வரைந்த கார்டூன் வைரலாகிறது. மருந்துச் சீட்டில் நோயாளியின் பெயர் ‘இந்திய ஆண்’ எனவும், மருந்துக்கான இடத்தில் ‘ஒழுக்கமாக வளர்த்திடுங்கள்’ எனவும் எழுதப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவர் கையொப்பமிடும் இடத்தில் ரத்தக்கறை. இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
மேற்குவங்க பெண் பயிற்சி மருத்துவர், கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பணியாற்றிய அவர், கடந்த 9ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். விசாரணையில் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்த நிலையில், அவர் கூட்டு வன்முறைக்கு ஆளானது, தற்போது உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் ஒருவர் கைதான சூழலில், சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
டீக்கடைகளில் பயன்படுத்தப்படும் பேப்பர் கப்களில் கூட சாதிய தீண்டாமை இருப்பதாக, இயக்குநர் பா.ரஞ்சித் பேசியிருக்கும் விவகாரம், பேசு பொருளாகியிருக்கிறது. இப்படியான தீண்டாமை எல்லாம் ஒழிந்துவிட்டதாக சிலரும், கிராமப்புறங்களில் இன்னும் பட்டியலின மக்களுக்கு பேப்பர் கப்களிலேயே டீ வழங்கப்படுகிறது என சிலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாக காங்., எம்பி ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். கடுமையான சட்டங்கள் இருந்தும் இது போன்ற சம்பவங்களை ஏன் தடுக்கமுடியவில்லை என கேள்வி எழுப்பிய அவர், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தான் உறுதுணையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.