India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024ஆம் ஆண்டுக்கான முதல்வரின் நல்லாளுமை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மகளிர் உரிமைத் திட்டப் பணிகளுக்காக CM முகவரித்துறை தலைமை தொழில்நுட்ப அலுவலர் வனிதாவுக்கும், உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை உயர்த்தியதற்காக விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலனுக்கும், காலை உணவுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்காக TN மகளிர் மேம்பாட்டு நிர்வாக இயக்குநர் திவ்யதர்ஷினிக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவு உணவு சாப்பிட்டதும் உடனடியாக சிலர் தூங்கச்சென்று விடுவர். இது சரியா? என சந்தேகம் இருக்கும். அதுகுறித்து மருத்துவர்கள் என்ன தெரிவிக்கிறார்கள் என பார்க்கலாம். உணவு சாப்பிட்டதும் தூங்க செல்லக் கூடாது. அது செரிமான பிரச்னையை ஏற்படுத்தும் என்று, மருத்துவர்கள் கூறுகின்றனர். இரவு உணவு சாப்பிட்டதும் நடைபயிற்சி மேற்காெண்டுவிட்டு தூங்கச்சென்றால் நல்ல தூக்கம் வரும் என அவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.
தமிழகம் முழுவதும் நாளை கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று, கிராம ஊராட்சி சார்பில் கூட்டம் நடத்தப்படும். ஊராட்சித்தலைவர் தலைமையில் மக்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில், அந்தப் பகுதிக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தக் கோரி தீர்மானம் நிறைவேற்றுவர். இந்த நிலையில், நாட்டின் 78ஆவது சுதந்திர தினம் நாளை கொண்டாட உள்ளதால், கிராமசபை நடத்தப்பட உள்ளது. இதில் நீங்கள் பங்கேற்பீர்களா?
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகி பெருவெற்றி பெற்ற இன்டர்ஸ்டெல்லார் திரைப்படத்தை மீண்டும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. கருந்துளை பற்றிய இப்படத்திற்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. செப்டம்பர் 27ஆம் தேதி உலகம் முழுவதும் மறு வெளியீடு செய்ய திட்டமிட்டிருந்த படக்குழு, தற்போது அதனை டிசம்பர் 6ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறது. யாரெல்லாம் இப்படத்தை மீண்டும் திரையில் பார்க்க காத்திருக்கீங்க?
சுதந்திர தினம், வரலட்சுமி விரதம், சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை வருவதால், சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். இதன் காரணமாக, ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சென்னை புறநகர் பேருந்து நிலையம் அமைந்திருக்கும் கிளாம்பாக்கம் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு வரை வாகனங்கள் ஊர்ந்தே செல்கின்றன.
மாணவர்களிடம், புகையிலை விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, தமிழகம் முழுவதும் 20,678 அரசுப் பள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 2025 மார்ச் வரை விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தின் கீழ் உடல் நலத்தை பேணுவது மற்றும் புகையிலையை எதிர்த்து போராடுவதற்காக இந்த நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது.
அமலாக்கத்துறை இயக்குநராக, IRS அதிகாரி ராகுல் நவீன் நியமிக்கப்பட்டுள்ளார். ED இயக்குநராக இருந்த எஸ்.கே.மிஸ்ரா, கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி ஓய்வுபெற்றார். அதைத் தொடர்ந்து, சிறப்பு இயக்குநராக பதவி வகித்து வந்த ராகுல் நவீன் தற்போது இயக்குநராகியுள்ளார். இந்த பதவியில் அவர் 2 ஆண்டுகள் நீடிப்பார் என மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு தெரிவித்துள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘G.O.A.T’. இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி இன்று வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 17ஆம் தேதி ட்ரெய்லர் வெளியாகும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இப்படம் செப்.5ஆம் தேதி திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் உரிமைத் தொகையின் 12ஆவது தவணை நாளை வரவு வைக்கப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு, தமிழக அரசு மாதம் தலா ₹1,000 வழங்குகிறது. இதுவரை 11 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில் 12வது தவணை, நாளை காலை 9.30 மணியளவில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. 78ஆவது சுதந்திர தினத்தன்று இந்த தொகை கிடைக்க உள்ளதால், இரட்டிப்பு மகிழ்ச்சி என பெண்கள் கூறிவருகின்றனர்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறி, அதிக எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், வரும் 17ஆம் தேதி காலை நாடு திரும்புகிறார். உண்மையான போராளியான அவருக்கு, டெல்லி விமான நிலையத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்படும் என, மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தெரிவித்தார். வினேஷ் போகத் மேல் முறையீட்டு வழக்கில், சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம் ஆக.16ல் தீர்ப்பளிக்கிறது.
Sorry, no posts matched your criteria.