news

News August 14, 2024

சுதந்திர போராட்ட வீரர்களுக்கு புகழஞ்சலி செலுத்துவோம்

image

நாடு முழுவதும் நாளை 78ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், நாளை காலை தேசியக் கொடி ஏற்றப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், மாணவர்கள் பங்கேற்று, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு புகழஞ்சலி செலுத்த அழைக்கப்பட்டுள்ளனர். இதேபோல, மக்கள் தங்கள் வீடுகளில் மூவர்ணக் கொடியேற்றி அதன்முன் நின்று செல்ஃபி எடுத்து <>இந்த<<>> இணையதளத்தில் பதிவேற்றுமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

News August 14, 2024

இரவு தூக்கத்தில் கெட்ட கனவுகள் வராமலிருக்க…

image

இரவு தூக்கத்தில் கெட்ட கனவுகளால் சிலர் அவதிப்படுவர். அவர்கள் கீழ்காணும் வழியை கடைபிடித்தால் கெட்ட கனவுகள் வராமல் நிம்மதியாக தூங்கலாம் என பெரியோர்கள் தெரிவித்துள்ளனர். வேப்பிலை, புளிய இலையை ஒரு மஞ்சள் துணியில் கட்டி தலையணைக்கு அடியில் வைத்து படுக்க வேண்டும் என்றும், இப்படி செய்தால் தூக்கத்தில் கெட்ட கனவுகள் வராது எனவும், அவர்கள் கூறுகின்றனர்.

News August 14, 2024

நீரஜ் சோப்ராவுடன் திருமணமா? மனு பாக்கர் மறுப்பு

image

ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவை திருமணம் செய்ய இருப்பதாக வெளியான செய்தியை, துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் மறுத்துள்ளார். 2 பேரும் திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த மனு பாக்கர், 2018 முதல் தாங்கள் 2 பேரும் நிகழ்ச்சிகள் இடையே சந்தித்து பேசுவதை வழக்கமாக கொண்டிருப்பதாகவும், தற்போது பரவிவரும் வதந்தி உண்மை கிடையாது என்றும் விளக்கமளித்துள்ளார்.

News August 14, 2024

லாரன்ஸ் நடிக்காததற்கு இதுதான் காரணம்

image

விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் உருவாகி வரும் ‘படை தலைவன்’ படத்தில் இருந்து லாரன்ஸ் விலகியதாக தகவல் வெளியானது. இதுகுறித்து விளக்கமளித்த இயக்குநர் அன்பு, லாரன்ஸ் மீது எந்த தவறும் இல்லை என்றார். லாரன்ஸின் கதாபாத்திரம் கனமான கதாபாத்திரமாக இருக்குமா என தனக்கு சந்தேகம் இருந்ததாலேயே, அவரை இப்படத்தில் நடிக்க வைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

News August 14, 2024

சுதந்திரத்தை கொண்டாடாத காந்தி.. ஏன் தெரியுமா?

image

1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா தனது சுதந்திரத்தை கொண்டாடிக் கொண்டிருந்தபோது, காந்தி மட்டும் கொண்டாடவில்லை. ஏன் என கேள்வி எழலாம். தற்போதைய மேற்குவங்கம், வங்கதேசத்தில் (அப்போது வங்காளம்) இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே கலவரம் மூண்டது. இதனால் கொல்கத்தாவில் தங்கி சமரச முயற்சியில் ஈடுபட்டதால், அவர் கொண்டாடவில்லை. 1948 ஜனவரியில் கொல்லப்பட்டதால், அவரால் கடைசி வரை சுதந்திரத்தை கொண்டாடவே முடியவில்லை.

News August 14, 2024

திராவிட சித்தாந்தம் நாட்டை துண்டாடுகிறது: ஆளுநர்

image

நாட்டில் 1947ல் ஏற்பட்ட பிரிவினை இன்னும் நீங்கவில்லை என, ஆளுநர் ரவி கூறியுள்ளார். சென்னை IIT நிகழ்ச்சியில் பேசிய அவர், பல சித்தாந்தங்கள் பிரிவினையை ஆதரிப்பதாகவும், அதில் ஒன்று திராவிட சித்தாந்தம் என்றும் விமர்சித்துள்ளார். இந்தியாவை மதச்சார்பற்ற நாடாக திராவிட சித்தாந்தம் கருதவில்லை எனவும் அவர் சாடினார். மொழி, இருப்பிடம் மூலம், மக்கள் மனதில் பிரிவினையை உண்டாக்குகிறார்கள் என்றும் குறை கூறினார்.

News August 14, 2024

வினேஷ் போகத் மனு தள்ளுபடி

image

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் மனுவை, விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் (50 KG) மல்யுத்தத்தில், இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அவர், 100 கிராம் கூடுதல் எடை இருந்ததாகக் கூறி தகுதி நீக்கப்பட்டார். இதை எதிர்த்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தகுதி நீக்கப்பட்டது சரிதான் என தீர்ப்பளித்துள்ளதாக கூறப்படுகிறது.

News August 14, 2024

இந்தியா போன்று 5 நாடுகளில் நாளை சுதந்திர கொண்டாட்டம்

image

பஹ்ரைன் 15 ஆகஸ்ட் 1971இல் பிரிட்டிஷிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. 15 ஆகஸ்ட் 1945இல் ஐப்பானிய ஆதிக்கத்தில் இருந்து கொரியா சுதந்திரம் பெற்றது. 15 ஆகஸ்ட் 1948இல் சுதந்திர கொரிய அரசாங்கங்கள் (வட கொரியா, தென் கொரியா) உருவாகின. ஆப்பிரிக்க தேசமான காங்கோ ஜனநாயக குடியரசு 1960இல் பிரான்சிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. லிச்சென்ஸ்டீன் 1866இல் ஜெர்மன் அதிகாரத்தில் இருந்து அதே நாளில் சுதந்திரம் பெற்றது.

News August 14, 2024

குற்றவாளியை தூக்கிலிடுங்கள்: மம்தா ஆவேசம்

image

கொல்கத்தா அரசு மருத்துவமனை பயிற்சி பெண் மருத்துவரை கொலை செய்த குற்றவாளியை தூக்கிலிட வேண்டும் என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டும் பொய் பிரசாரங்கள் பரப்பப்படுவதாக வேதனை தெரிவித்த அவர், நடந்த சம்பவத்திற்காக தன்னை குற்றஞ்சாட்டுங்கள். ஆனால், மேற்கு வங்க மாநிலத்தை குற்றஞ்சாட்ட வேண்டாம்
எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News August 14, 2024

NCW உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த குஷ்பு

image

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை, நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஆண்டு NCW உறுப்பினரான நிலையில், திடீரென தற்போது பதவி விலகியுள்ளார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக NCW தெரிவித்துள்ளது. பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான குஷ்புவுக்கு, கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கவில்லை. அப்போது உடல்நிலையை காரணம் காட்டி, அவர் பிரசாரம் செய்யவில்லை.

error: Content is protected !!