India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குடிமைப் பொருள் குற்றத் தடுப்பு டி.ஜி.பி ஆக சீமா அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக உள்ள சீமா அகர்வால், குடிமைப் பொருள் குற்றத் தடுப்பு டி.ஜி.பி. ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிதாக உருவாக்கப்பட்ட சிவில் சப்ளை சிஐடி பணியிடத்தில், முதல் அதிகாரியாக சீமா அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று (ஆகஸ்ட் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
சவூதி அரேபிய இளைஞருக்கு அறுவை சிகிச்சை மூலம் 542 கிலோ உடல் எடை குறைந்துள்ளது. காலித் பின் மொஹ்சின் ஷரி என்ற அவர், 612 கிலோ எடை இருந்தார். இதனால் படுக்கையில் அசைய முடியாமல் இருந்த அவரது கோரிக்கையை ஏற்று, மன்னர் அப்துல்லா உயர் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்தார். கேஸ்ட்ரிக் பைபாஸ் அறுவை, டயட், பிசியோதெரபி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் உடல் எடை 64 கிலோவாக குறைந்தது.
சேபியன்ஸ் என்னும் மனித இனம் 2 முதல் 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாம். அதில், சுமார் ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு மனிதன் இந்த ஆயுதத்தைதான் பயன்படுத்தியிருக்கிறார். அச்சுறுத்தும் காடுகள், உயிர்க்கொல்லி விலங்குகள் அனைத்தில் இருந்தும் தன்னைக் காத்துக்கொள்ள இந்த ஆயுதம்தான் முக்கிய காரணியாக இருந்திருக்கிறது. இன்றளவும் பூமியின் பல இடங்களில் ஆயிரக்கணக்கில் இந்த ஆயுதங்கள் கிடைக்கின்றன.
சினிமாவைப் பொறுத்தவரை தொழில்நுட்ப ரீதியாக தென்னிந்திய சினிமா மிகவும் அற்புதமானது என லோகார்னோ திரைப்பட விழா ஒருங்கிணைப்பாளர் ஜியோனா நாசரோவ் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் ஆண்டு தோறும் இந்த விழா நடைபெறும் நிலையில், இந்த ஆண்டிற்கான விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், தென்னிந்தியர்களை சிறந்த கதை சொல்லிகளாக பார்க்கிறேன், அவர்களிடம் சிறந்த கதை உள்ளது என புகழ்ந்துள்ளார்.
குரங்கு, ஆமை, பாம்புகள் ஆகிய விலங்குகளை விமானத்தில் கொண்டுவந்த நபரை, போலீசார் கைது செய்துள்ளனர். தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வந்த நபர் மீது சந்தேகம் இருந்ததால், அவரது உடைமைகளை போலீசார் சோதனை செய்தனர். அதில் அவர், 22 அரிய வகை விலங்குகளை சட்டவிரோதமாக சென்னைக்கு கொண்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் ஏன் இந்த விலங்குகளை இங்கு எடுத்துவந்தார் என விசாரணை நடக்கிறது.
கலைஞர் நாணய வெளியீட்டு விழாவில் பங்கேற்க இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நிகழ்ச்சியில் பங்கேற்கும் படி CM ஸ்டாலின் தொலைபேசி மூலம் தனக்கு அழைப்பு விடுத்ததாக கூறியுள்ளார். கட்சி ரீதியாக மாறுபாடுகள் இருந்தாலும், அரசியல் நாகரீகத்திற்காக பங்கேற்பதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். அதே நேரம், ஆளுநர் தேநீர் விருந்தை திமுக புறக்கணித்தது பிடிக்கவில்லை என்றார்.
*மேஷம் – அனுகூலம் உண்டாகும்
*ரிஷபம் – நன்மை தேடி வரும்
*மிதுனம் – பாராட்டு கிடைக்கும்
*கடகம் – மகிழ்ச்சியான நாள்
*சிம்மம் – பொறுமை தேவை
*கன்னி – போட்டியை தவிர்க்கவும்
*துலாம் – பெருமையான நாள்
*விருச்சிகம் – அன்பு அதிகரிக்கும்
*தனுசு – திறமை வெளிப்படும்
*மகரம் – நிதியுதவி செய்வீர் *கும்பம் – தாமதம் ஏற்படும் *மீனம் – நற்செய்தி தேடி வரும்
‘தங்கலான்’ படக்குழுவுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம், நாளை உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள தனுஷ், தான் அறிந்தவர்களில் மிகவும் கடினமாக உழைக்கும் நடிகர்களில் ஒருவரான விக்ரமுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.
வினேஷ் போகத்தின் <<13854346>>மேல்முறையீட்டு<<>> மனுவை, விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது, இந்நிலையில், விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA) தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் தெளிவற்ற விதிகள் தீவிர கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும், வீரர்கள் குறிப்பாக பெண்கள் உடலியல், உளவியல் அழுத்தங்களை எதிர்கொள்வதாகவும் IOA குறிப்பிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.