India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ரயில் திட்டங்களுக்கு தலா ரூ.1000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் பலகோடி ரூபாய் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பலவற்றிற்கு, தற்போது ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை – மகாபலிபுரம் – கடலூர் இடையே 179 கி.மீ கடற்கரை பாதைக்கு ரூ. 25 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது, தற்போது ரூ.1000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
எலுமிச்சையின் நிறம், அதன் வகையைப் பொறுத்து மாறுபடும். பழுத்த எலுமிச்சை பொதுவாக பிரகாசமான மஞ்சள் தோலைக் கொண்டிருக்கும். எலுமிச்சை மிகவும் கடினமாக உணர்ந்தாலோ அல்லது அதிகப்படியாக உலர்ந்து காணப்பட்டாலோ அவற்றை வாங்க வேண்டாம். அதேபோல சுருக்கம் அல்லது புள்ளிகள் கொண்ட எலுமிச்சையை தவிர்க்கவும், ஏனெனில் அவற்றில் அதிக சாறு இருக்காது. முடிந்தவரை ஆர்கானிக் எலுமிச்சையைத் வாங்குவது நல்லது.
▶1947 – இந்திய சுதந்திர தினம்
▶1914 – பனாமா கால்வாய் திறக்கப்பட்டது.
▶1947 – முகமது அலி ஜின்னா பாகிஸ்தானின் முதலாவது ஆளுநராக பதவியேற்றார்.
▶1964 – நடிகர் அர்ஜூன் பிறந்த தினம்
▶1983 – பிரபல அமெரிக்க நடிகை ஜெனிபர் லாரன்ஸ் பிறந்த தினம்
▶1961 – தமிழ் நடிகை சுஹாசினி பிறந்த தினம்
▶1975 – வங்காள தேசத்தில் ஏற்பட்ட ராணுவ புரட்சியில் ஷேக் முஜிபுர் ரகுமான் கொல்லப்பட்டார்.
17 மாதங்கள் சிறையில் இருப்பேன் என தான் ஒருபோதும் நினைக்கவில்லை என சமீபத்தில் ஜாமினில் வெளியான மனீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். நீண்ட காலம் சிறையில் வைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே தன்னை பண மோசடி தடுப்புச் சட்டத்தில் கைது செய்தார்கள் என்று விமர்சித்த அவர், இந்த சட்டத்தின் கீழ் கைதானவர்கள் ஜாமீன் பெறுவது கடினமான காரியம் எனவும் தெரிவித்தார்.
சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பெண் போலீசை அவதூறாக பேசியது, கஞ்சா வைத்திருந்தது உள்பட 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது. மேலும், வழக்கின் விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.
▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: நீத்தார் பெருமை
▶குறள் எண்: 22
▶குறள்:
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
▶பொருள்: நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரனை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய சிறையில் இருந்து திட்டம் தீட்டியதாக அவர் கைது செய்யப்பட்டார். இதே வழக்கில் அவரின் மகன் வழக்கறிஞர் அஸ்வந்தாமனும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில, உடல் நிலையை காரணம் காட்டி போலீஸ் கஸ்டடிக்கு செல்ல நாகேந்திரன் மறுப்பு தெரிவித்தார்.
NLC ஒப்பந்த தொழிலாளர்கள் வரும் 17ஆம் தேதி வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியும், பணி நிரந்தரம் செய்ய NLC நிர்வாகம் மறுப்பதாக கூறி ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் நடத்தவுள்ளதாக நோட்டீஸ் அளித்திருந்தனர். இதை எதிர்த்து NLC தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், போராட்டத்திற்கு தடை விதித்தது.
இன்று (ஆகஸ்ட் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (ஆகஸ்ட் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Sorry, no posts matched your criteria.