India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாட்டின் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். இதைத் தொடர்ந்து தகைசால் தமிழர் விருது, ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகசத்துக்கான கல்பனா சாவ்லா விருது, சிறப்பாக செயல்படும் 3 அரசுத் துறைகளுக்கு முதல்வரின் நல்லாட்சி விருது உள்ளிட்ட பல விருதுகளை அவர் வழங்க உள்ளார்.
தமிழ்நாட்டில் தலித் தலைவர்கள் முதல்வராக வருவதற்கான சூழல் உள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுகவிடம் கூடுதல் இடங்களை பெறுவதற்காக திருமாவளவன் மாற்றி பேசுவதாக விமர்சித்த அவர், பாஜகவை பற்றி பேசுவதற்கே தற்போது அதிமுக யோசிப்பதாகவும் கிண்டல் செய்தார். முன்னதாக, தமிழ்நாட்டில் தலித் தலைவர்கள் முதல்வராக வர முடியாது என திருமாவளவன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சனி மற்றும் புதன்கிழமைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று அங்குள்ள ஸ்ரீசக்கரத்தாழ்வாரைத் தரிசித்து, மனமுருகி வேண்டுங்கள். பிறகு அவரை 12 முறை வலம் வந்து வழிபடுங்கள். துளசி தளம் சாத்தி வேண்டிக்கொள்ளுங்கள். நிச்சயம் கடனால் உண்டான சங்கடங்கள் நீங்கும். அதே போல தோரண கணபதியை அன்றாடம் விளக்கேற்றி வழிபடுங்கள். சதுர்த்தி நாள்களில் நைவேத்தியம் சமர்ப்பித்து வழிபடுங்கள். நிச்சயம் கடன் தீரும்.
இந்தியாவின் 78ஆவது சுதந்திரதின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி காலை 7.30 மணிக்கு தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார். இது அவரது 11ஆவது சுதந்திர தின உரையாகும். இந்த நிகழ்ச்சியின் பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள்.
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை சம்பவத்தில் INDIA கூட்டணியின் பெண் தலைவர்கள் மவுனம் காப்பது ஏன் என்று தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. திராவிட பெண்ணிய போராளிகளான கனிமொழி, ஜோதிமணி, தமிழச்சி தங்கபாண்டியன்
இந்த சம்பவத்தில் அமைதி காப்பது ஏன்? என்று விமர்சித்துள்ள அக்கட்சி, சம்பவம் தொடர்பாக பேச விரும்பாத மூவரும் தலைமறைவாகி உள்ளதாகவும் சாடியுள்ளது.
▶ஆகஸ்ட் – 15
▶ஆடி – 30
▶கிழமை: வியாழன்
▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM
▶கெளரி நேரம்: 12:15 AM – 01:15 AM & 06:30 PM – 07:30PM
▶ராகு காலம்: 01:30 PM – 03:00 PM
▶எமகண்டம்: 06:00 AM – 07:30 AM
▶குளிகை: 09:00 AM – 10:30 AM
▶திதி: ஏகாதசி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்
அண்ணாமலை கற்பனை உலகில் வாழ்ந்து வருவதாக ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். அண்ணாமலையை பற்றி பேசுவதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று கிண்டல் செய்த அவர், அண்ணாமலை முதலில் கவுன்சிலராகி மக்கள் நம்பிக்கையை எப்படி பெறுவது எனக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். தமிழ்நாட்டுக்கு மத்திய அரசிடம் நிதி வாங்கி தராத அண்ணாமலை வாய் திறந்து பேசக்கூடாது எனவும் சாடினார்.
BAN Vs PAK அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே வரும் 30ஆம் தேதி கராச்சியில் 2ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் சாம்பியன் டிராபி போட்டிக்காக கேலரிகளை சரிபார்க்கும் பணிகள் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் இன்றி போட்டி நடக்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
பள்ளி மாணவரை தாக்கிய திமுகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார். திண்டிவனம் அருகே சேதமடைந்த சாலைகளை சுட்டிக்காட்டிய மாணவனை திமுகவை சார்ந்த நிர்வாகிகள் கண்மூடி தனமாக தாக்கியுள்ளதாக விமர்சித்த அவர், யாராலும் குறையே சொல்லமுடியாத நல்லாட்சியை திமுக வழங்குவதாக நினைக்க வேண்டாம் என்றும் விமர்சித்துள்ளார்.
ஷாருக், அமிர், சல்மான் என மூவரையும் தனது இயக்கத்தில் நடிக்க வைக்க விரும்புவதாக கங்கனா ரனாவத் விருப்பம் தெரிவித்துள்ளார். அவர்கள் அனைவரையும் சிறப்பாக நடிக்க வைத்து திரையில் காட்ட வேண்டும் என்று ஆசைப்படுவதாக தெரிவித்த அவர், மூவரின் நடிப்பால் சமூகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். கங்கனாவின் நடிப்பில் எமர்ஜென்சி படம் செப்.6இல் வெளிவருகிறது.
Sorry, no posts matched your criteria.