news

News August 15, 2024

நாளை கடைசி: ரிசர்வ் வங்கியில் பணி

image

மத்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாக உள்ள 94 அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (ஆக.16) கடைசி நாளாகும். கல்வி: இளநிலை பட்டம் முடித்திருக்க வேண்டும். முதல் கட்ட தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு என்ற அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நாளை மலை 6 மணி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு <>www.rbi.org.in<<>> என்ற இணையதளத்தை பார்க்கவும்.

News August 15, 2024

தமிழகத்தில் தான் கட்டணம் குறைவு

image

ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன் போக்குவரத்து கழகத்திற்கு பேருந்துகள் வாங்க உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மக்கள் மீது சுமையை ஏற்றக்கூடாது என்பதற்காகவே பேருந்து கட்டணத்தை உயர்த்தவில்லை என்ற அவர், நாட்டிலேயே தமிழகத்தில் தான் குறைந்த கட்டணத்தில் போக்குவரத்து வசதி உள்ளதாக தெரிவித்தார். மேலும், பேருந்துகளை இயக்க முடியாத குறுகிய சாலைகளில் மினி பஸ் இயக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும் கூறியுள்ளார்

News August 15, 2024

ராகுலுக்கு பின் வரிசையில் சீட் கொடுத்தது ஏன்?

image

டெல்லியில் நடந்த சுதந்திர தின நிகழ்ச்சியில் ராகுல் காந்திக்கு பின் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. சுதந்திர தின நிகழ்ச்சிகளை பாதுகாப்புத் துறை அமைச்சகமே ஒருங்கிணைத்து வருகிறது. இந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து விளக்கம் அளித்த பாதுகாப்புத் துறை, ஒலிம்பிக் வீரர்களுக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டதால், ராகுலுக்கு இடமளிக்க முடியவில்லை எனக் கூறியுள்ளது.

News August 15, 2024

தோனி ரசிகர்கள் கண்கலங்கிய நாள்

image

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தோனி கடந்த 2020ல் இதே நாளில் தான் (ஆக.15) சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். 2019 உலக கோப்பையில் இந்தியா அரையிறுதியில் தோல்வியடைந்தபின் ODI போட்டிகளில் விளையாடாமல் இருந்த அவர், 2020ல் ஓய்வை அறிவித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் IPL தொடரில் விளையாடிக்கொண்டு தான் வருகிறார். தோனி என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது என்ன?

News August 15, 2024

இசைப்புயல் அறிமுகமான நாள்

image

மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’ படம் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் தமிழில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது. இந்தப்படம் வெளியாகி இன்றுடன் 32 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையடுத்து #32YearsOfARRahman என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

News August 15, 2024

இந்திய தேசிய கொடியின் கதை தெரியுமா?

image

இந்திய தேசிய கொடியை வடிவமைத்தவர் பிங்காலி வெங்கையா. 1921-இல் விஜயவாடாவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில், வெங்கையா கொடியின் பல வடிவமைப்புகளை தந்தார். அதில் ஒன்றுக்கு காந்தி ஒப்புதல் அளித்தார். வெங்கையா வழங்கிய பதிப்பில் 2 கோடுகள் (சிவப்பு மற்றும் பச்சை), நடுவில் கதர் ராட்டை சக்கரம் இருந்தது. காந்தியின் ஆலோசனை படி, கொடியில் ஒரு வெள்ளைப் பட்டையை வெங்கையா சேர்த்தார். மூவர்ண கொடியாக மாறியது.

News August 15, 2024

முஸ்லிம்களுக்கு எதிராக 110 முறை பேசிய மோடி

image

சர்வதேச மனித உரிமை நிறுவனமான Human Rights Watch வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை தொடர்வதாக கூறப்பட்டுள்ளது. சிறுபான்மையினருக்கு எதிராக நிகழ்ந்த 28 வன்முறை சம்பவங்களில் 12 முஸ்லிம்களும், ஒரு கிறிஸ்தவ பெண் ஒருவரும் பலியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், மோடியின் 173 தேர்தல் பிரசாரங்களில், 110 முறை முஸ்லிம்களுக்கு எதிராக அவர் பேசியுள்ளதாகவும் கூறியுள்ளது.

News August 15, 2024

பூக்களின் விலை உயர்வு

image

ஆடிவெள்ளி, வரலட்சுமி பூஜையையொட்டி, பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மதுரை, குமரி, நிலக்கோட்டை உள்ளிட்ட அனைத்து மலர் சந்தைகளிலும் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, ஓசூர் மலர் சந்தையில் ₹500-க்கு விற்பனையான மல்லிகைப்பூ ஒருகிலோ ₹1,500க்கும், ₹1,000க்கு விற்பனையான கனகாம்பரம் ₹3,000க்கும், முல்லை, அரளிப்பூ, வாடாமல்லி, ஜாதிமல்லி உள்ளிட்ட பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது.

News August 15, 2024

கார் ரேஸூக்கு பணமிருக்கு, புத்தகத்திற்கு காசு இல்லை: DJ

image

பாடநூல் விலை உயர்வுக்கு ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது X பக்க பதிவில், நடுத்தர குடும்பத்தில் பிறந்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்கிற பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான கல்வி கனவில் கூட கல்லை தூக்கி போட்டுள்ளது திமுக அரசு என விமர்சித்துள்ளார். கார்ப்பரேட் அரசுக்கு கார் ரேஸ் நடத்த காசு இருக்கு, ஏழை பிள்ளைகளுக்கு புத்தகத்தை விலை குறைவாக கொடுக்க காசு இல்லை எனவும் அவர் சாடியுள்ளார்.

News August 15, 2024

விஜயகாந்த் இருந்திருந்தால்.. திருமா பரபரப்பு பேச்சு

image

விஜயகாந்த் நல்ல உடல்நிலையோடு உயிருடன் இருந்திருந்தால், தமிழக அரசியலே திசை மாறி இருக்கும் என திருமாவளவன் தெரிவித்தார். சுதந்திர தினத்தையொட்டி தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி மக்கள் நல கூட்டணி போட்டியிட்டதை நினைவு கூர்ந்தார். கல்லூரி படிக்கும்போது, விஜயகாந்த் படங்களை விரும்பி பார்ப்பேன் என்றும் தெரிவித்தார்.

error: Content is protected !!