news

News September 9, 2024

BREAKING: பொதுவிடுமுறை தேதி மாற்றம்.. அரசு அறிவிப்பு

image

“மிலாது நபி” பொதுவிடுமுறை தேதியை மாற்றி தமிழக அரசு சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. செப்.4ஆம் தேதி பிறை தென்படவில்லை என்பதால், செப்.6ஆம் தேதி முதல் பிறை என்று ஷ்ரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டு, செப்.17ஆம் தேதி மிலாது நபி கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து செப்.16க்கு பதில் செப்.17ஆம் தேதிக்கு பொதுவிடுமுறை மாற்றப்பட்டுள்ளது.

News September 9, 2024

AAP-CONG பேச்சுவார்த்தை தோல்வி

image

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது. 90 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில், முதல்கட்டமாக 20 தொகுதிக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. AAP-CONG இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், இதில் உடன்பாடு ஏற்படாததால் கூட்டணி முறிந்துள்ளது. AAP 10 தொகுதிகளில் போட்டியிட விரும்பிய நிலையில், 7 இடங்களை தர CONG விருப்பம் தெரிவித்தது.

News September 9, 2024

கொல்கத்தா கொடூரம்: என்ன நடக்கிறது? (1/2)

image

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் வன்படுகொலை கொடூரம் அரங்கேறி இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் உண்மையை வெளிக்கொணர சுப்ரீம் கோர்ட், தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. RG கர் கல்லூரியின் Ex., முதல்வர் சந்தீப் கோஷ், சஞ்சய் ராய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 100 பேரிடம் CBI வாக்குமூலம் பதிவு செய்ததுடன், 12 பேரிடம் பாலிகிராபி சோதனை நடத்தியுள்ளது.

News September 9, 2024

கொல்கத்தா கொடூரம்: என்ன நடக்கிறது? (2/2)

image

இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக மே.வங்க அரசு கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. தாமதமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது, டாக்டரின் இறுதிச்சடங்கில் நடந்த கலவரம், பாதிக்கப்பட்ட பெற்றோர் பணம் கேட்டதாக எழுந்த குற்றச்சாட்டு, டாக்டர்கள் போராட்டம் & TMC தலைவர்களின் விமர்சனங்கள், மம்தா அரசுக்கு அவப்பெயரை பெற்றுத் தந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான CBI விசாரணை தற்போது இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

News September 9, 2024

செப்.13இல் ஆஜராக சபாநாயகர் அப்பாவுக்கு உத்தரவு

image

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக சபாநாயகர் அப்பாவுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகாவுக்கு வர தயாராக இருந்ததாக நிகழ்ச்சி ஒன்றில் அப்பாவு குறிப்பிட்டு இருந்தார். இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் பாபு முருகவேல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், செப்.13இல் நேரில் ஆஜராக அவருக்கு உத்தரவிட்டுள்ளது.

News September 9, 2024

விஜய் மகன் இயக்கத்தில் சந்தீப் கிஷன்?

image

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதாக பல மாதங்களுக்கு முன்னரே அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் சந்தீப் கிஷன் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் பிரபலமான சந்தீப் கிஷன் தற்போது தமிழிலும் தொடர்ச்சியாக நடிக்க தொடங்கியுள்ளதால் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

News September 9, 2024

பேருந்து நிலையத்தில் உதயநிதி திடீர் ஆய்வு

image

பேருந்து நிலையங்களில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அரசு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக அமைச்சர் உதயநிதி இன்று மதுரை வந்தார். அப்போது, திடீரென மாட்டுத்தாவணிப் பேருந்து நிலையத்திற்கு சென்ற அவர், கழிவறை, டிக்கெட் முன்பதிவு செய்யும் இடம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். மேலும், அங்கிருந்த மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

News September 9, 2024

2026 ஆசியாட்: ஜப்பான் அதிரடி அறிவிப்பு

image

2026இல் ஜப்பானில் (அய்சி நகோயா) நடைபெறவிருக்கும் ஆசியாட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கென தனி விளையாட்டு கிராமம் உருவாக்கப்படாது என்று JOC அறிவித்துள்ளது. இது குறித்து பேசிய JOC முன்னாள் தலைவர் சுனேகாசு டகேடா, ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரலாற்றிலேயே முதல் முறையாக, போட்டியாளர்கள் கிராமத்தில் அல்லாது ஹோட்டல்கள் & சொகுசு கப்பல்களில் தங்கவைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

News September 9, 2024

ALERT: இடி, மின்னலுடன் மழை வெளுக்கும்

image

தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. தொடர்ந்து, அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை பெய்யலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும், நகரின் அதிகபட்ச வெப்பநிலை 32 – 33 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்ககூடும் என்றும் கூறியுள்ளது.

News September 9, 2024

மோடி மீது யாருக்கும் பயம் இல்லை: ராகுல்

image

தேர்தலுக்கு பிறகு இந்தியாவில் யாரும் BJP, PM மோடியை கண்டு அஞ்சுவதில்லை என ராகுல்காந்தி கூறியுள்ளார். அமெரிக்காவில் இந்தியர்கள் மத்தியில் பேசிய அவர், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பிரதமர் தாக்குகிறார் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் எனக் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்துள்ள பாஜக, 2029 தேர்தலில் மோடி மீண்டும் பிரதமராவார் என்றும், காங்., அந்த தேர்தலில் படுதோல்வி அடையும் எனவும் சாடியுள்ளது.

error: Content is protected !!