India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முதல்வரின் USA பயணம் தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி Xஇல் கருத்து தெரிவித்துள்ளார். முதல்வருக்கு அமெரிக்கவாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்த செய்தியைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வருக்கு, அங்குள்ள தமிழர்கள் மிக சிறப்பான வரவேற்பை வழங்கி வருகிறார்கள். முதல்வரும் தான் தமிழகத்தில் இருப்பது போன்று உணர்வதாக பல இடங்களில் தெரிவித்திருந்தார்.
தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக செயல்படுவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மதுரையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் பேசிய அவர், வறுமை ஒழிப்பு, மகளிர் முன்னேற்றம், தரமான கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 13 துறைகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக குறிப்பிட்டார். மகளிரை தொழில் முனைவோராக மாற்ற வேண்டும் என்பதே தமிழக அரசின் முக்கிய நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். இடி, மின்னலுடன் மழை பெய்யும்போது, பாதுகாப்பான இடத்தில் நிற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குரங்கம்மை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தும் வசதிகள், தேவையான மருத்துவ உபகரணங்கள், போதுமான மருந்துகள் உள்ளதா என்பதை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். தொற்று இருப்பதாக சந்தேகப்படும் நபர்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
நேற்று ஒரே நாளில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது என இபிஎஸ் வேதனை தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின், தனது கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் – ஒழுங்கு எப்படி இருக்கிறது என ஒருமுறையாவது கேட்டறிந்தாரா? என சாடிய அவர், தினமும் தலைப்பு செய்தியாகும் அளவுக்கு இயல்பாக கொலைகள் நடப்பதே திமுக அரசின் 3 ஆண்டு சாதனை என விமர்சித்துள்ளார்.
கடல் நீரில், உப்பு அதிகமாக காணப்படுவதற்கு காரணம் தெரியுமா? மழை பெய்யும்போது பாறைகள் & மணல் மீது செல்லும் நீர், அவற்றில் இருக்கும் உப்பு & தாதுக்களை எடுத்துக்கொண்டு ஆறுகளில் சேர்க்கிறது. அந்த நீர் ஆறுகளில் இருந்து கடலில் கலக்கிறது. கடலில் உள்ள நீரின் அடர்த்தி குறைவு என்பதால், சூரிய வெப்பத்தால் அதன் சிறுபகுதி (நன்னீர்) ஆவியாகி மழையாகப் பொழிகிறது. தாதுக்கள் கடலிலேயே தங்கி நீரை உப்பாக வைக்கிறது.
நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். ஆளுமையில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு, பாலின பாகுபாடு காட்டாமல் அவர்களுக்கு உரிமைகள் வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். 33% இடஒதுக்கீடு, இன்னும் நடைமுறையில் வராத நிலையில், 50% இடஒதுக்கீட்டை துரைமுருகன் வலியுறுத்துவது ஆச்சரியமளித்துள்ளது.
“மிலாது நபி” பொதுவிடுமுறை தேதியை மாற்றி தமிழக அரசு சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. செப்.4ஆம் தேதி பிறை தென்படவில்லை என்பதால், செப்.6ஆம் தேதி முதல் பிறை என்று ஷ்ரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டு, செப்.17ஆம் தேதி மிலாது நபி கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து செப்.16க்கு பதில் செப்.17ஆம் தேதிக்கு பொதுவிடுமுறை மாற்றப்பட்டுள்ளது.
ஹரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது. 90 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில், முதல்கட்டமாக 20 தொகுதிக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. AAP-CONG இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், இதில் உடன்பாடு ஏற்படாததால் கூட்டணி முறிந்துள்ளது. AAP 10 தொகுதிகளில் போட்டியிட விரும்பிய நிலையில், 7 இடங்களை தர CONG விருப்பம் தெரிவித்தது.
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் வன்படுகொலை கொடூரம் அரங்கேறி இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் உண்மையை வெளிக்கொணர சுப்ரீம் கோர்ட், தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. RG கர் கல்லூரியின் Ex., முதல்வர் சந்தீப் கோஷ், சஞ்சய் ராய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 100 பேரிடம் CBI வாக்குமூலம் பதிவு செய்ததுடன், 12 பேரிடம் பாலிகிராபி சோதனை நடத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.