India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் அறிவித்துள்ள 1,376 பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பப்பதிவு தொடங்கவுள்ளது. டயட்டிசியன், நர்சிங் சூப்பிரண்ட், ஆடியாலஜிஸ்ட், ஸ்பீச் தெரபிஸ்ட் உள்ளிட்ட 20 பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆட்சேர்ப்பு வாரிய இணையதளங்களில் செப். 16 வரை விண்ணப்பிக்கலாம். பொது பிரிவினருக்கு ₹500, பட்டியல் பிரிவினருக்கு ₹250 தேர்வு கட்டணம்.
<<13867459>>தேர்தல் <<>>தேதி இன்று அறிவிக்கப்படவுள்ள ஜார்க்கண்ட் சட்டசபையில் ஹேமந்த் சோரன் தலைமையிலான JMM கூட்டணி அரசுக்கு 47 இடங்கள் (மொத்தம் 82) உள்ளன. இதில் JMM 27, காங்கிரஸ் 18, ஆர்ஜேடி 1, சிபிஎம் 1 இடங்கள் உள்ளன. எதிர்க்கட்சிகளுக்கு 30 இடங்கள் உள்ளன. சட்டசபை பதவிக்காலம் 2025 ஜன. முடிவடைகிறது. மோசடி வழக்கில் கைதான சோரன் ஜாமினில் வந்த நிலையில், தேர்தல் தேதி அட்டவணை இன்று வெளியாகவுள்ளது.
முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவில் இருந்தாலும், கட்சியையும், அரசையும் கவனித்துக் கொண்டிருப்பேன் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரின் பேச்சு மூலம், உதயநிதி துணை முதல்வராக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு. ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை மாவட்டச் செயலாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
திமுகவை சேர்ந்த சில மாவட்டச் செயலாளர்கள் மீது புகார்கள் வந்திருக்கின்றன. மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். மக்களுக்கு நலத்திட்டங்களை அளித்திருக்கிறோம், அதை வாக்குகளாக மாற்ற களப்பணியாற்ற வேண்டும். சுணக்கமின்றி தொடர்ந்து செயல்பட்டால், அடுத்த முறையும் திமுக ஆட்சி தான் என்று சூளுரைத்தார்.
ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனுக்கு இன்று பிறந்தநாள். ‘பிரானா 2’ படம் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், அடுத்து இயக்கிய ‘டெர்மினேட்டர்’, ‘ஏலியன்ஸ்’, ‘டைட்டானிக்’ ஆகிய படங்கள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றன. இவர் அறிவியல் புனைவு படங்களை எடுப்பதில் வல்லவர். இருப்பினும் இயற்கை மீதான அவரது காதல் ‘அவதார்’ படங்களில் வெளிப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் பக்கமே அவரது ஹீரா கதாபாத்திரம் நின்றது.
ஊழல் புகாரில் ஆந்திரா முன்னாள் அமைச்சர் ரோஜா உள்ளிட்ட 4 பேரை விசாரிக்க விஜயவாடா காவல் ஆணையருக்கு சிஐடி போலீசார் பரிந்துரைத்துள்ளனர். எந்த நேரத்திலும் அவர் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை நடத்தியதில், ஒதுக்கீடு செய்யப்பட்ட ₹150 கோடியில், டெண்டர் வழங்கியதில் முறைகேடு செய்தாக சிஐடி போலீசாரிடம் பல்வேறு தரப்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
EOS 08 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த செயற்கைகோள் சிறப்பாக செயல்படும் எனவும், குலசேகரப்பட்டினம் ஏவுதளப் பணிகள் 2 ஆண்டுகளில் முடிவடையும் என்றும் அவர் கூறியுள்ளார். புவி கண்காணிப்புப் பணிகளுக்காக துல்லியமான அதிநவீன கருவிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள EOS 08 செயற்கைகோள், SSLV D3 ராக்கெட் மூலம் இன்று காலை விண்ணில் ஏவப்பட்டது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டின் மகன் சமிட் டிராவிட் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகியுள்ளார். மகாராஜா டிராபி தொடரில் மைசூர் வாரியர்ஸ் அணிக்காக விளையாடுகிறார். நேற்று நடைபெற்ற சிவமொக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 ரன்களை மட்டுமே எடுத்தார். இருப்பினும் ராகுல் டிராவிட்டின் அடுத்த தலைமுறை கிரிக்கெட்டில் களமாடுவது குறித்து ரசிகர்கள் மகிழ்ச்சியையே வெளிப்படுத்தியுள்ளனர்.
சென்னையில் உள்ள திமுக தலைமையகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாதது உள்ளிட்டவற்றுக்காக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக நாணயம் வெளியிடுவதற்கு நன்றி தெரிவித்து மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக அவசர செயற்குழுக் கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்காத மத்திய அரசுக்கு எதிராக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை சீர்குலைந்துள்ளதாக குற்றம்சாட்டி தமிழக அரசுக்கு எதிராக ஒரு தீர்மானமும், தொழில் வளர்ச்சி குறைந்த காரணத்தை கண்டறிந்து தீர்வு காணக்கோரி ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.