India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆடி மாதத்தின் கடைசி வெள்ளியையொட்டி மற்றும் வரலட்சுமி நோன்பையொட்டி, அம்மன் கோயில்களில் இன்று மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க முடியாத சுமங்கலிப் பெண்கள், தங்கள் வீட்டின் அருகில் வசிக்கும் பெண்களுக்கு வெற்றிலை பாக்கு, பூ, 2 வாழைப்பழம், மஞ்சள், குங்குமம், ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து தாம்பூலம் வழங்கி ஆசிபெறலாம். அவ்வாறு செய்தால் அம்மனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது ஐதீகம்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் மகளிர் மல்யுத்த இறுதிப்போட்டிக்கு முந்தைய நாள் இரவு வினேஷ் போகத் உயிரிழந்து விடுவார் என நினைத்ததாக அவரது பயிற்சியாளர் Woller Akos சமூக வலைதளத்தில் பதிவிட்டு உடனே நீக்கியது தற்போது தெரிய வந்துள்ளது. எடையை குறைக்க வேண்டி கடுமையான தொடர் பயிற்சிகள் மேற்கொண்டதால் வினேஷ் உருக்குலைந்து விட்டதாகவும், ஆனால் எப்படியோ மீண்டு வந்ததாகவும் அவர் ஹங்கேரி மொழியில் பதிவிட்டுள்ளார்.
மருத்துவமனையில் இருந்து திரும்பியபோது வினேஷ் உருக்கமாக பேசியதையும் பயிற்சியாளர் பதிவு செய்திருந்தார். நெருக்கடியான சூழலில் உலகின் NO.1 வீராங்கனையை வீழ்த்தியதை நினைவில் கொள் என பயிற்சியாளர் கூறியதை வினேஷ் சுட்டிக் காட்டியதாகவும், பதக்கங்கள் வெறும் பொருள்கள்தான் என்று கூறியதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தன்னுடைய இலக்கை எட்டிவிட்டதாக வினேஷ் கூறியதாகவும் பயிற்சியாளர் பதிவிட்டிருந்தார்.
ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களுக்கு திமுக அரசு மூடுவிழா நடத்தி வருவதாக EX அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்திற்கு பிறகு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. விலைவாசி, மின்கட்டணம், வரிகள் உயர்ந்து விட்டதாக சாடினார். அம்மா உணவகத்தை திமுக அரசு நீர்த்து போகச் செய்து விட்டதெனவும் அவர் குற்றம்சாட்டினார்.
பெண்கள் அன்றாடம் கடைபிடிக்க வேண்டிய சில நடைமுறைகள் குறித்து ஆன்மிகத்தில் கூறப்பட்டுள்ளது. அவற்றை தெரிந்து கொள்வோம். *அதிகாலை எழுந்து குளித்து சூரிய வழிபாடு மேற்கொள்ளுதல் * தினமும் கோயில்களுக்கு செல்லும் வழக்கத்தை கடைபிடித்தல் *சிரித்த முகத்துடன் புன்முறுவலுடன் பிறரிடம் பழகும் முறையை தொடருதல் *உணவு, உடையை பிறருக்கு தானமாக அளித்தல் *பசுவுக்கு பழம், கீரை போன்றவற்றை உணவளித்தல்.
நடிகர் தனுஷின் 50ஆவது படமான ‘ராயன்’ வருகிற 23ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் தமிழ், தெலுங்கு உள்பட 5 மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் இயக்கி நடித்த இத்திரைப்படம் கடந்த மாதம் 26ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. 4 சகோதரர்களின் வாழ்க்கையில் நடப்பதை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. இப்படம் திரையரங்குகளில் ₹150 கோடி வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
2022ஆம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது A.R. ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 1 படத்திற்கு இசையமைத்ததற்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது அவர் பெறவுள்ள 7ஆவது தேசிய விருது ஆகும். இதற்கு முன்பு அவர், ரோஜா, மின்சார கனவு, லகான், கன்னத்தில் முத்தமிட்டால், காற்று வெளியிடை, மாம் ஆகிய படங்களுக்காக விருது பெற்றுள்ளார்.
திருச்சிற்றம்பலம் திரைப்படத்துக்காக நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இப்படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்காதா பாடலுக்காக சிறந்த நடனத்திற்கான தேசிய விருது ஜானி, சதீஷூக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கே.ஜி.எஃப் படத்திற்காக சிறந்த சண்டை பயிற்சியாளர் தேசிய விருது அன்பறிவ்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன் -1” படத்துக்கு சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது PS-1 படத்தில் பணியாற்றிய ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருது ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கும், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது ரவி வர்மனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய செயல் தலைவராக ஸ்மிருதி இரானியையும், தமிழக செயல் தலைவராக குஷ்புவையும் நியமிப்பது குறித்து பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கட்சியில் முக்கிய பதவி தர வேண்டும் என சில மாதங்களாக மேலிடத்தை வலியுறுத்திய குஷ்பு , அதற்காக தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில், அவர் தமிழக செயல் தலைவராக நியமிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.