news

News August 16, 2024

வீடு தேடி வரும் ரேஷன் அட்டை…

image

மக்களவைத் தேர்தல் காரணமாக புதிய ரேஷன் அட்டை விநியோகிக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இம்மாதம் முதல் ரேஷன் அட்டையை விநியோகிக்கும் பணிகள் தொடங்கும் என அரசு அறிவித்திருந்தது. 2.40 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அதில் 2 லட்சம் அட்டைகள் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இவற்றை விண்ணப்பித்தவர்களின் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 16, 2024

விருது பெறுபவர்களுக்கு தனுஷ் வாழ்த்து

image

70வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்ததற்காக, நித்யா மேனனுக்கு சிறந்த நடிகை விருதும், அப்படத்தில் பணியாற்றிய ஜானி, சதீஷூக்கு நடன கலைஞர்களுக்கான விருதும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், விருது பெறும் அனைவருக்கும் நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். விருது பெறும் அனைவரும், அதற்கு தகுதியானவர்கள் எனவும் புகழ்ந்துள்ளார்.

News August 16, 2024

மகாராஷ்டிராவுக்கு தேர்தல் அறிவிக்காதது ஏன்?

image

இந்த ஆண்டுக்குள் 4 சட்டமன்றங்களுக்கு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என, ராஜூவ் குமார் தெரிவித்துள்ளார். இதன்காரணமாகவே முதலில் ஜம்மு காஷ்மீர், ஹரியானாவுக்கும், பின்னர் மகாராஷ்டிரா, ஜார்கண்டிற்கும் தேர்தல் நடைபெறுவதாக கூறினார். பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கையும் ஒரு காரணமென்ற அவர், மகாராஷ்டிராவில் மழை பாதிப்பு மற்றும் தொடர் விழாக்களை கருத்தில் கொண்டும் இம்முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கமளித்தார்.

News August 16, 2024

மகள் கொலை.. தந்தையின் வேதனை…

image

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டது, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மாநில அரசு அறிவித்த இழப்பீட்டுத் தொகையை பெற, மருத்துவரின் தந்தை மறுத்துள்ளார். இந்த தொகையை பெற்றுக்கொண்டால், அது தனது மகளுக்கு வலியை கொடுக்கும் என்றும், தனக்கு நியாயம்தான் வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

News August 16, 2024

தீவிரவாதத் தாக்குதல்களுக்கு மத்தியில் தேர்தல்

image

சிறப்பு அந்தஸ்து 370 சட்டப்பிரிவு ரத்தான பின், ஜம்மு காஷ்மீரில் முதல்முறையாக தேர்தல் நடக்கிறது. 90 தொகுதிகளை கொண்ட சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. மொத்தம் 87 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 11,838 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. சமீபகாலமாக தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

News August 16, 2024

கனமழையினால் பாக்.கில் சிறார் திருமணம் அதிகரிப்பு?

image

அதிக கனமழை பெய்ததால் சிறார் திருமணம் அதிகரித்துள்ளதாக பாகிஸ்தான் விநோத காரணத்தைக் கூறியுள்ளது. அதிக சிறார் திருமணம் நடைபெறும் நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் 6ஆவது இடத்தில் உள்ளது. சிறார் திருமணம் குறைந்து வந்த நிலையில், 2022 கனமழை வெள்ளத்தால் பயிர்கள் சேதமடையவே இழப்பை சந்திக்க முடியாத குடும்பங்கள் பணம் பெற்றுக் கொண்டு சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.

News August 16, 2024

நாளை SMC குழுவின் 2ஆவது கட்ட கூட்டம்

image

அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுவை (SMC) கட்டமைக்கும் 2ஆவது கூட்டம், நாளை நடைபெறவுள்ளது. கடந்த சனிக்கிழமை நடந்த கூட்டத்தில் 12,117 அரசுப் பள்ளிகளில் SMC மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நாளைய கூட்டத்தில் 8,000க்கும் அதிகமான பள்ளிகளில் மறுகட்டமைப்பு செய்யப்படுகிறது. அரசுப்பள்ளி மாணவர்களின் நலனை மேம்படுத்த பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம்பெறுவர்.

News August 16, 2024

நாளை கடைசி: +2 படித்தவர்களுக்கு வாய்ப்பு

image

ஸ்டெனோகிராபர் கிரேடு ‘சி’ மற்றும் ‘டி’ பதவிக்கு மொத்தம் 2006 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (ஆக.17) கடைசி நாளாகும். வயது: கிரேடு ‘சி’-க்கு 18-30, கிரேடு ‘டி’ 18-27 இருக்க வேண்டும். சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி மற்றும் புதுச்சேரியில் தேர்வு நடத்தப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். கல்வித்தகுதி: +2 தேர்ச்சி. இணையதளம்: <>https://ssc.gov.in<<>>

News August 16, 2024

தேசிய விருதுகளை அள்ளிய ‘பிரம்மாஸ்திரா 1’

image

ரன்பிர் கபூர், அலியா பட் நடிப்பில் வெளியான ‘பிரம்மாஸ்திரா 1’ படத்தின் “கேசரியா..” பாடலை பாடிய அர்ஜித் சிங்கிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கெனவே ‘பத்மாவத்’ படத்தின் “பிந்தே தில்…” பாடலுக்காக தேசிய விருது பெற்றுள்ளார். சிறந்த இசையமைப்பாளராக ‘பிரம்மாஸ்திரா 1’ படத்திற்காக பிரிட்டம் தேர்வாகியுள்ளார். சிறந்த VFX திரைப்படமாகவும் ‘பிரம்மாஸ்திரா 1’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

News August 16, 2024

ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக தேர்தல்

image

ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவித்துள்ளார். செப்.18, 25 மற்றும் அக்.1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. 10 ஆண்டுகளுக்குப்பிறகு, JKஇல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. அதே போல, ஹரியானாவில் அக்.1ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தமாக அக்.4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!