India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெருங்கடலாக இருக்கும் திரைத்துறையில், சொற்பமான சிறிய படங்கள்தான் வெற்றி பெறுகின்றன. அந்த வரிசையில், ‘வாழை’, ‘கொட்டுக்காளி’ ஆகிய இரு படங்களுமே வரும் 23ஆம் தேதி திரைக்கு வரவுள்ளன. சர்வதேச அளவில் விருதுகளை குவித்த இவ்விரு படங்களும், பாசிடிவ் வைஃபோடு திரைக்கு வருவதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நீங்கள் திரையில் காண காத்திருக்கும் திரைப்படம் எது…?
மாநில நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பங்களை, ஆகஸ்ட் 19க்குள் சரிபார்க்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் செப்.5இல் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 386 பேருக்கு விருது வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை, மாவட்ட, வட்டாரக்கல்வி அலுவலர்கள் துரிதமாக முடிக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சீனாவில் டிரைவர் இல்லாத ரோபோ டாக்ஸிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வுகான் நகரில் மட்டும் 500 டாக்ஸிகள் பயன்பாட்டில் உள்ளன. உலகில் அதிக ரோபாே டாக்ஸி நெட்வொர்க் கொண்ட நாடாக சீனா மாறியுள்ளது. அமெரிக்க நிறுவனங்களை கவரும் வகையில், சீனாவின் தொழில்நுட்ப, ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சமீபகாலமாக இதில் முதலீட்டை அதிகரித்துள்ளன. இது தங்களது வேலைக்கு ஆபத்து என, வாகன ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதை தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தை இந்த வாரம் ஏற்ற இறக்கத்தோடு காணப்பட்டது. இந்நிலையில், வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 1.64% உயர்ந்து 80,436 புள்ளிகளுடனும், நிஃப்டி 1.65% உயர்ந்து 24,541 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. வங்கி, ஆட்டோ, FMCG, IT, ரியால்டி, உலோகம் உள்பட அனைத்துத்துறை பங்குகளும் ஏற்றத்தில் நிறைவடைந்தன.
கொல்கத்தாவில், பயிற்சி பெண் மருத்துவர் கொலையை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் நாளை ஸ்டிரைக் அறிவித்துள்ளனர். இந்நிலையில் அரசு, தனியார் மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவத்துறை இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், அரசு ஆஸ்பத்திரிகளில் நாளை கூடுதல் மருத்துவர்கள் பணியாற்றவும், இதனை மாவட்ட இணை, துணை இயக்குநர்கள் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏமன் தலைநகர் சனாவில் அல்-ஹதீப் கிராமத்தில் எப்போதும் மழை பெய்வதில்லை. கடல் மட்டத்தில் இருந்து 3,200 மீ உயரத்தில் இருப்பதால், மழை மேகங்கள் குவிவதில்லை. சாதாரண மழை மேகங்கள் சமவெளியில் இருந்து 2,000 மீட்டருக்குள் குவியும் என்பதால், இக்கிராமத்தின் கீழ் அடுக்குகளில் மேகங்கள் குவிகின்றன. மேலும், இந்த கிராமத்தில் நீர் ஆதாரங்கள் போதுமான அளவிற்கு இல்லாததும் மழை பெய்யாததற்கு காரணம் என கூறப்படுகிறது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நேற்று வெளியான ‘தங்கலான்’ படம் வசூலில் கலக்கி வருகிறது. வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ₹26.45 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்திற்கு பாசிடிவ் விமர்சனம் கிடைத்துள்ளதால் வரும் நாள்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது. இப்படம் எப்படி இருக்கிறது என கமெண்ட் பண்ணுங்க.
கருணாநிதியின் உருவம் பொறித்த நாணயம் வெளியீட்டு விழாவில் பங்கேற்க மாட்டோம் என அதிமுக அறிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவாக, ஆக.18ஆம் தேதி அவரது உருவம் பொறித்த ₹100 நாணயம் வெளியிடப்படுகிறது. இதில் பங்கேற்க தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், விழாவை அதிமுக புறக்கணிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், வங்கதேச இடைக்கால அரசாங்கத் தலைவர் முகமது யூனுஸ், பிரதமர் மோடியிடம் போனில் பேசியுள்ளார். இத்தகவலை X தளத்தில் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அங்கு இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என, யூனுஸ் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியாவின் ஆதரவையும் அவர் கோரியதாகவும் தெரிவித்துள்ளார்.
தங்கத்தின் விலை அதிகரித்து வரும் சூழலில், அதன் இறக்குமதி ஏப்ரல் – ஜூலை காலக்கட்டத்தில் 4.23% சரிந்து, ₹1.05 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு ₹1.10 லட்சம் கோடியாக இருந்தது. அதுவே கடந்த ஆண்டின் ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 10.65% குறைவாகும். எனினும், பண்டிகை காலம் தொடங்குவதாலும், இறக்குமதி வரி குறைக்கப்பட்டதாலும், செப்டம்பரில் நகை விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.