India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வெளிமாநிலங்களில் இருந்து கேழ்வரகு கொள்முதல் செய்யப்படுவதாக குறிப்பிட்ட அவர், அனைத்து ரேஷன் கடைகளிலும் தட்டுப்பாடு இன்றி பாமாயில் தரப்படுகிறது என்றார். மேலும், ரேஷன் கடைகளுக்கு ஒரே கிழமையில் வார விடுமுறை அளிப்பது பற்றி பேசி முடிவெடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
தமிழர்களுக்கு எதிராக கருத்து கூறிய விவகாரத்தில், செய்தியாளர் சந்திப்பில் மன்னிப்பு கேட்பதில் சிக்கல் இருப்பதாக, மத்திய அமைச்சர் <<13798788>>ஷோபா<<>> கரந்தலஜே தெரிவித்துள்ளார். சர்ச்சை பேச்சு தொடர்பாக ஏற்கெனவே X தளத்தில் மன்னிப்பு கோரியதாக, அவர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான் காரணம் என அவர் பேசியிருந்தது சர்ச்சையானது.
மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று, இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. விமான நிலையங்களைப் போலவே, மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும், மருத்துவமனைகளை பாதுகாப்பான மண்டலங்களாக அறிவிக்க வேண்டும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருகே 5 பேர் சென்ற பைக் விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர். 2 குழந்தைகள் உள்பட 5 பேர் சென்ற பைக், சாத்தமங்கலம் அருகே சாலைத் தடுப்பில் மோதியது. இதில் 5 பேரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், மோகனாஸ்ரீ (4), ராஜசேகர், பானுமதி ஆகியோர் உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். டூவீலரில் ஹெல்மெட் அணிந்து 2 பேர் மட்டுமே செல்ல வேண்டும். வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நீட் தேர்வு தோல்வியால் மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிலம்பவேளாங்காடு கிராமத்தைச் சேர்ந்த தனுஷ், 2 ஆண்டுகளாக NEET எழுதி தோல்வி அடைந்துள்ளார். இதனால் விரக்தியில் இருந்ததாக கூறப்படும் நிலையில், வீட்டில் யாரும் இல்லாதபோது, அவர் சேலையில் தூக்கிட்டு விபரீத முடிவெடுத்ததாக, உறவினர்கள் கூறுகின்றனர். உடலை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘G.O.A.T’ படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. இதற்காக ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ள நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் விஜய்யின் தோற்றம் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த போஸ்டரை, விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். யாரெல்லாம் ட்ரெய்லருக்கு வெயிட்டிங்? கமெண்ட் பண்ணுங்க.
ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு முடிவுகளை TNPSC வெளியிட்டுள்ளது. 358 காலிப் பணியிடங்களுக்கு, கடந்த ஜனவரி 6, 7ஆம் தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சிபெற்ற 644 பேர், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பதிவெண்கள் உள்ளிட்ட அனைத்துவிதமான விவரங்களையும் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் அறியலாம்.
வயநாட்டில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான சூழல் இல்லையென, CEC ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார். வயநாடு தொகுதியில் வெற்றி பெற்று எம்.பியான ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தல் தேதி இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கு வாக்குப்பதிவு நடத்துவதற்கான சூழல் இல்லை என்றார். விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் எனவும் கூறினார்.
70வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் ‘பொன்னியின் செல்வன் 1’ படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த பின்னணி இசைக்கான விருது அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிக தேசிய விருதுகள் (7) வென்ற இசையமைப்பாளர் என்ற பெருமையை தக்க வைத்துள்ளார் ரஹ்மான். இளையராஜா (5), விஷால் பரத்வாஜ் (4), ஜெய்தேவ் (3) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
4 மாநிலங்களுக்கு கூட, ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த முடியாத சூழலே இருப்பதாக, காங்கிரஸ் விமர்சித்துள்ளது. ஜம்மு காஷ்மீர், ஹரியானாவிற்கு தேர்தல் தேதிகள் வெளியான நிலையில், மகாராஷ்டிரா, ஜார்கண்டிற்கும் சேர்த்து தேர்தல் தேதிகளை எதிர்பார்த்ததாக, காங்கிரஸ் தெரிவித்துள்ளது. நேற்றுதான் பிரதமர், ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி உரக்க பேசியதாக குறிப்பிட்ட அக்கட்சி, ஏன் இந்த வெற்று முழக்கம் என்றும் வினவியுள்ளது.
Sorry, no posts matched your criteria.