news

News August 16, 2024

முடிவுக்கு வரும் வானத்தைப்போல சீரியல்

image

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல், நாளையுடன் நிறைவடைகிறது. அண்ணன் சின்ராசு -தங்கை துளசியின் பாசத்தை மையமாக கொண்ட இந்த சீரியல், பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலம். திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் இரவு 8.30 – 9 மணி ஒளிபரப்பான இந்த சீரியலின் இறுதி எபிசோட் நாளை ஒளிபரப்பாகிறது. இதைத் தொடர்ந்து திங்கள் கிழமை முதல் புதிய சீரியல் ஒளிபரப்பப்படுகிறது.

News August 16, 2024

APPLY NOW: வங்கிகளில் 4,455 பணியிடங்கள்

image

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 4455 புரொபேஷனரி அலுவலர், மேலாளர் டிரெய்னி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் முடித்த 20 – 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கு ஆக.21ஆம் தேதிக்குள் <>www.ibps.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News August 16, 2024

வயநாட்டுக்கு ₹10 கோடி: சந்திரபாபு நாயுடு

image

கேரள CM நிவாரண நிதிக்கு ₹10 கோடி வழங்கப்படும் என, ஆந்திர CM சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஜூலை 30ஆம் தேதி நிகழ்ந்த பயங்கர நிலச்சரிவில், 400க்கும் அதிகமானோர் பலியாகினர். பலர் தங்களது உறவுகள், உடைமைகளை இழந்துள்ளனர். இந்நிலையில், வயநாடு மக்களுக்கு உதவும் வகையில், ஆந்திரா சார்பில் ₹10 கோடி வழங்கப்படும் என சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

News August 16, 2024

காமெடி நடிகரின் மகனுக்கு ஓடி சென்று உதவிய VJS

image

காமெடி நடிகர் தெனாலியின் மகன் வின்னரசனுக்கு நடிகர் விஜய் சேதுபதி கல்லூரி கட்டணம் செலுத்தியுள்ளார். தெனாலியின் சூழ்நிலையை நடிகர் பாவா லட்சுமணன் VJS-க்கு தெரியப்படுத்திய நிலையில், உடனே சென்று உதவியுள்ளார். தனது சந்ததி கல்வியிலும், வருங்காலத்தில் பொருளாதாரத்திலும் உயர, VJS செய்த உதவியை வாழ்நாளில் தானும், தனது மகனும் மறக்கவே முடியாது என தெனாலி உருக்கமாகக் கூறியுள்ளார்.

News August 16, 2024

தமிழர்களின் வாழ்வியலோடு கலந்த வாகை மலர்..

image

Albizia lebbeck (வாகை) எனும் மரம் தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இம்மரம் வெப்பமண்டல பகுதிகளில் பரவலாகக் காணப்படுகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் காணப்படும் பழமையான மரங்களில் ஒன்றாக இருக்கிறது. சங்க காலத்தில் போரில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ‘வாகை மலர்’ சூட்டப்பட்டதாக, இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. இதன் இலை, பூ, பட்டை, வேர், விதை உள்ளிட்டவை மருத்துவ குணம் கொண்டவை.

News August 16, 2024

விஜய்யின் தவெகவில் வாகை மலர்?

image

விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சிக் கொடியில், வாகை மலர் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாகை என்றால் வெற்றி என்ற அடிப்படையில் கட்சிக்கொடியில் இந்த மலர் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது. கட்சிக்கொடியின் இரு வண்ணங்களுக்கு மத்தியில் வாகை மலர் இடம்பெறுகிறதாம். இது தொடர்பான தகவல் வெளியாகி, தொண்டர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. TVK அரசியல் நகர்வு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..?

News August 16, 2024

வாரம் ஒருமுறை இதை சாப்பிடுங்கள்

image

வாரத்திற்கு ஒரு முறை கணவாய் மீன் சாப்பிடுவதால் தோள்பட்டை வலி, முடி உதிர்வது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என, ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். அதிலுள்ள வைட்டமின் B3 ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைப்பதுடன், இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. கணவாய் மீனை தொடர்ந்து சாப்பிட்டுவர, ரத்தத்தில் உள்ள சிகப்பணு, வெள்ளையணு அதிகரிக்கும் என்றும் பரிந்துரைக்கின்றனர்.

News August 16, 2024

ஷாம்பு பாட்டில் வைத்திருந்த பெண் கைது..!

image

கென்யாவில் இருந்து விமானம் மூலம் மும்பை வந்த பெண்ணை, சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 ஷாம்பு மற்றும் லோஷன் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சந்தேகத்தின் பேரில் ஷாம்பு பாட்டில்களை ஆய்வு செய்ததில், 2 KG எடையுள்ள கொகைன் போதைப்பொருளை கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு சுமார் ₹20 கோடி என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கனு பாருங்க…

News August 16, 2024

வாட்ஸ்அப்பில் 2 நொடியில் AI போட்டோ…

image

பயனாளர்களை தக்கவைக்க சமூக வலைதள செயலி நிறுவனங்கள் பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில், வாட்ஸ்அப்பில் AI வசதி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் நீங்கள் எளிமையாக AI போட்டோக்களை உருவாக்க முடியும். உதாரணமாக, AIக்கான Blue Circleஐ கிளிக் செய்து, imagine elephant என டைப் செய்தால் 2 நொடிகளில் அந்த போட்டோ வந்துவிடும். Just Try it.

News August 16, 2024

அரசுப் பேருந்து ஓட்டுநரின் குடும்பத்திற்கு நிவாரணம்

image

மின்சார விபத்தில் உயிரிழந்த அரசுப் பேருந்து ஓட்டுநரின் குடும்பத்திற்கு, CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், உயிரிழந்த ஓட்டுநரின் குடும்பத்திற்கு இரங்கல் கூறிய CM, ₹3 லட்சம் நிவாரணமும் அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் கோவில்மட்டம் என்ற இடத்தில், அரசுப் பேருந்தின் மீது உயர் மின்னழுத்த கம்பி உரசிய விபத்தில் மின்சாரம் தாக்கி, ஓட்டுநர் பிரதாப் (42) உயிரிழந்தார்.

error: Content is protected !!