India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கல்வித்தரத்தில் குஜராத் மாநிலம் பின்தங்கியுள்ளதாக, நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்தரம் தொடர்பான நிலையான வளர்ச்சி இலக்குடன் கேரளா 82 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஹரியானா, ஹிமாச்சல் 77 புள்ளிகளுடன் முறையே 2, 3வது இடத்திலும் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக 76 புள்ளிகளுடன் தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது. குஜராத் 58 புள்ளிகள் மட்டுமே பெற்று பின்தங்கியுள்ளது.
எறும்பு போல சுறுசுறுப்பாக ஓடும் மனிதர்களை கூட, எந்த வேலையையும் செய்ய முடியாத அளவுக்கு ஓரமாக உட்கார வைத்துவிடும் தலைவலி. என்ன செய்தாலும் மீண்டும் மீண்டும் வந்து தொல்லை தரும் தலைவலியை நொடி பொழுதில் விரட்டி அடிக்கும் வீரியம் கொண்டது உப்பும், ஆப்பிளும். ஆப்பிளை அறுத்து அதன் மேல் உப்பு தூவி சாப்பிட்டால் தலைவலி குறையும். உங்களுக்கு தலைவலி ஏற்பட்டால், இந்த மருத்துவ டிப்ஸை Try பண்ணுங்க.
மத்திய பட்ஜெட்டுக்கு பின் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், மீண்டும் படிப்படியாக உயரத் தொடங்கியுள்ளது. இதனால், தங்க நகைகளை இப்போது வாங்கலாமா? என்ற கேள்வி மிடில் கிளாஸ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில், விலை உயர்வு வரும் நாள்களிலும் தொடரும் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். வரவிருக்கும் திருமண சீசன், அமெரிக்க Fed வங்கியின் வட்டி விகித உயர்வு ஆகியவை இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
*மேஷம் – நன்மை உண்டாகும்
*ரிஷபம் – பொறாமை படக்கூடாது
*மிதுனம் – இன்பமான செய்தி கிடைக்கும்
*கடகம் – நிதியுதவி செய்யும் நாள்
*சிம்மம் – கோபத்தை தவிர்க்கவும்
*கன்னி – நிறைவான நாள்
*துலாம் – பயத்தை தவிர்க்கவும்
*விருச்சிகம் – மேன்மை உண்டாகும்
*தனுசு – செலவு அதிகரிக்கும்
*மகரம் – சுகமான நாள் *கும்பம் – வெற்றி தேடிவரும் *மீனம் – ஆதரவு பெருகும்
மலையாளத்தில் வெளியான ‘உள்ளொழுக்கு’ படத்தில் நடித்த ஊர்வசிக்கு சிறந்த நடிகைக்கான மாநில விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கேரள மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருதை அதிக முறை (6) வென்ற நடிகை என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக 1989, 90, 91 என தொடர்ந்து 3 முறையும், 1995, 2006 ஆண்டுகளிலும் இவ்விருதை வென்றிருந்தார். தமிழக அரசின் மாநில விருதையும் இவர் 2 முறை பெற்றிருக்கிறார்.
தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல், கரூர், நாமக்கலில் இடியுடன் மிதமான மழையும், கோவை, திருப்பூர், குமரி, நெல்லை உள்பட 9 மாவட்டங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மாலை முதல் விட்டு விட்டு மழை பெய்துவருகிறது.
ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீரர் அமன் ஷெராவத்துக்கு இந்திய ரயில்வே பதவி உயர்வு வழங்கி கவுரவித்துள்ளது. நாட்டிற்கு பெருமை சேர்த்ததற்காக அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் போட்டியில் வெண்கலம் வென்ற ஸ்வப்னில் குசேலுக்கும் ரயில்வேயில் சிறப்பு அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
TNPSC Group 2 தேர்வு தேதியில் மாற்றமில்லை என, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. TNPSC Group 2 தேர்வு தேதி மாற்றப்பட்டதாக தகவல் பரவிய நிலையில், திட்டமிட்டபடி செப்.14 தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மொத்தம் 2,327 காலிப்பணியிடங்களுக்கு Group 2, Group 2A தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வுகளுக்கு தயாராகும் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு இதை பகிருங்கள்.
தனது எதிர்காலம் குறித்து சிந்தித்து வருவதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அறிக்கை வெளியிட்டுள்ளார். 2032ஆம் ஆண்டில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் வரை விளையாட விரும்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். துரதிர்ஷ்டமான சூழ்நிலையில் ஓய்வை அறிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் 50 KG எடைப்பிரிவில் இறுதிப்போட்டியின் போது, 100 Gram கூடுதலாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
நாட்டில் மேலும் 3 மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பெங்களூரு மெட்ரோ ரயில் 3ஆம் கட்ட திட்டத்திற்கு ₹15,611 கோடி, தானே ஒருங்கிணைந்த ரிங் மெட்ரோ திட்டத்திற்கு ₹12,200 கோடி, புனே மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்திற்கு ₹2,954.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மெட்ரோவின் 2ஆம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.