India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஸ்டெனோகிராபர் கிரேடு ‘சி’ மற்றும் ‘டி’ பதவிக்கு மொத்தம் 2006 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று (ஆக.17) கடைசி நாளாகும். வயது: கிரேடு ‘சி’-க்கு 18-30, கிரேடு ‘டி’ 18-27 இருக்க வேண்டும். சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி மற்றும் புதுச்சேரியில் தேர்வு நடத்தப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். கல்வித்தகுதி: +2 தேர்ச்சி. இணையதளம்: https://ssc.gov.in
விளவங்கோடு இடைத்தேர்தலில் 5 ஆயிரம் வாக்குகளை வாங்காத அதிமுக ஆட்சியை பிடிப்போம் என்பது அரசியல் காமெடி என அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். 11 தேர்தலாக தொடர் தோல்வியை சந்தித்து வரும் அதிமுக, எப்படி ஆட்சியை பிடிக்கும் என்று கேள்வி எழுப்பிய அவர், எம்.பி தேர்தலில் 11 தொகுதிகளில் அதிமுக 3ஆவது இடத்திற்கு சென்றுள்ளதாகவும் கூறினார். மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
பட்டியலினத்தவர் முதல்வர் பதவிக்கு வர மாயாஜாலங்கள் செய்ய தேவையில்லை, விழிப்புணர்வு மட்டும் போதும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். பட்டியலினத்தவர் முதல்வராக அந்த சமூக மக்களிடம் இருந்தே ஆதரவு கிடைக்கவில்லை என்று தெரிவித்த அவர், வன்னியரும், பட்டியலினத்தவரும் இணைந்தால் ஆட்சி அதிகாரத்தை எளிதில் கைப்பற்றலாம் என்றார். முன்னதாக, தலித் ஒருவர் முதல்வராக வர முடியாது என திருமாவளவன் கூறியிருந்தார்.
குருவுக்கு உகந்த நாளாகிய வியாழக்கிழமையில் நீராடி, விரதம் இருந்து பரிகாரம் செய்தால் குருவின் அருள் கிடைக்கும் என்கிறார்கள் முன்னோர்கள். குருவுக்கு மஞ்சள் நிற ஆடை ஏற்றது என்பதால், அந்த நிறத்தில் ஆடை அணிந்து முல்லை மலர்கள் கொண்டு குரு பகவானை அலங்கரிக்க வேண்டும் என்றும், கடலை பொடி சாதம், வேர்க்கடலை சுண்டல், இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம் எனவும் கூறுகிறார்கள்.
சென்னையில் 320 கிமீ அளவுக்கு புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இதுவரை 77% மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்த அவர், அடுத்த 45 நாள்களுக்குள் சென்னையில் உள்ள அனைத்து வடிகால்களும் தூர்வாறப்பட்டிருக்கும் என்றார். சென்னையில் 20% மழை பெய்தாலும், உடனடியாக தண்ணீர் வெளியேறும் வகையில் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்திய அணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு தோனி மற்றும் கோலிதான் காரணம் என அமித் மிஸ்ரா குற்றம் சாட்டியுள்ளார். அணியில் தொடர்ந்து விளையாட முடியாததற்கு, அணியின் காம்பினேஷனுக்கு தான் செட் ஆகவில்லை என்று தோனி தன்னிடம் கூறியதாக தெரிவித்த அவர், தோனியை எதிர்த்து அப்போது தன்னால் எதுவும் பேச முடியவில்லை என்றார். கோலியும் தனக்கு சரியான வாய்ப்பு வழங்கவில்லை என்று கூறினார்.
▶ஆகஸ்ட் – 17 ▶ஆவணி – 01
▶கிழமை: சனி
▶நல்ல நேரம்: 07:45 AM – 08:45 AM & 04:45 – 05:45
▶கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM & 09:30 PM – 10:30PM
▶ராகு காலம்: 09:00 AM – 10:30 PM
▶எமகண்டம்: 01:30 PM – 03:30 PM
▶குளிகை: 06:00 AM – 07:30 AM
▶திதி: சூன்ய ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்
▶நட்சத்திரம் : பூராடம் ▶ சந்திராஷ்டமம்: மிருகசீரிடம்
பாஜக-திமுக இடையே கள்ள உறவு இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முதலில் அறிவித்துவிட்டு, பின்னர் விருந்தில் முதல்வர் உள்ளிட்ட 8 அமைச்சர்கள் பங்கேற்றது ஏன் என சந்தேகம் எழுப்பிய அவர், ராஜ்நாத் சிங்கை கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவுக்கு அழைக்க முடிந்த திமுகவால், ராகுலை ஏன் கூப்பிடவில்லை என வினவினார்.
வெளிநாட்டிற்கு வேலைக்காக செல்பவர்கள் தமிழக அரசிடம் பதிவு செய்து விட்டு செல்ல வேண்டும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார். போலியான ஏஜென்ட் மூலம் செல்பவர்கள் வெளிநாடுகளில் கஷ்டப்படுவதாக தெரிவித்த அவர், பாதிக்கப்படுபவர்களை அங்கிருந்து மீட்பதில் சிரமம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார். உதயநிதி தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், துணை முதல்வராக உதயநிதி வந்தால் மகிழ்ச்சி என்றார்.
அம்மா மருந்தகங்களை மூட முயற்சிப்பது திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துவதாக என டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து மக்கள் நலனுக்காக தமிழக அரசு எந்தவித திட்டங்களையும் முழுமையாக செயல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.