India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி இல்லை என கைவிரித்த மத்திய அரசு, தற்போது பெங்களூரு உட்பட பல மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு கோடிக்கணக்கில் நிதியை வாரி வழங்கியுள்ளது. பெங்களூரு மெட்ரோ 3-ம் கட்ட திட்டத்திற்கு ரூ.15,611 கோடியும், தானே மெட்ரோ திட்டத்திற்கு ரூ.12,200 கோடியும், புனே மெட்ரோ திட்டத்திற்கு ரூ.2,954 கோடியும் செலவாகும் நிலையில், இவற்றுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
நல்ல கூட்டணியை கெடுத்தது அண்ணாமலைதான் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றஞ்சாட்டியுள்ளார். கேள்வியொன்றுக்கு பதிலளித்த அவர், அதிமுக-பாஜக இடையே நல்ல கூட்டணி இருந்தது. அதை கெடுத்தது அண்ணாமலைதான். இதற்காக அதிமுக வருத்தப்படவில்லை என்று கூறினார். அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரனை கட்சியில் சேர்ப்பது குறித்து பேசப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
INDO – TIBET எல்லைக் காவல் படையில் ITI படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 202 காவலர் நிலை பதவிகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி, ITI படிப்பு முடித்த ஆண், பெண் இந்தோ திபெத்திய ஆட்தேர்வு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பாக 10.9.2024 தேதிப்படி 18 முதல் 28 வயது வரையறையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் உங்களுக்கு பயனுடையதாக இருந்திருக்கும். நண்பர்களுக்கும் இதை பகிரலாமே.
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படுவதற்கு CPM கட்சி மாநிலச் செயலாளர் கேஜி பாலகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்த கேள்வியொன்றுக்கு பதிலளித்த அவர், உதயநிதி எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார் என்றும், அப்படிப்பட்டவரை துணை முதல்வராக்குவதில் என்ன தவறு உள்ளது என்றும் கூறினார். அனைத்து கட்சியிலும் குடும்ப சாயல் இருப்பது இயல்புதான் என்றும் தெரிவித்தார்.
‘டிமான்டி காலனி 2’ படம் மக்களிடையே விமர்சனம் ரீதியில் வரவேற்பை பெற்றுவருகிறது. அதில் நடித்துள்ள பிரியா பவானி சங்கரின் (PBS) நடிப்புக்கு ரசிகர்களின் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த நடிப்பு மூலம் தன்னை அதிர்ஷ்டமில்லாதவர் என விமர்சித்தவர்களுக்கு PBS தக்க பதிலடி கொடுத்துள்ளார். முன்னதாக, அவரை கிண்டல் செய்த ரசிகர்களே, தற்போது பாராட்டும் மீம்ஸ்களை வெளியிட்டு, ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
அமைச்சர்களின் மறைமுக நெருக்கடியால், விஜய் தனது கட்சி மாநாட்டை விக்கிரவாண்டிக்கு மாற்றியதாகக் கூறப்படுகிறது. திருச்சியில் மாநாடு நடத்த இடம் பார்த்த அவருக்கு, பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டுள்ளன. தனியார், ரயில்வே இடங்களை இறுதி செய்தும், மறைமுக நெருக்கடியால் அவை கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. தற்போது விக்கிரவாண்டி இடத்தையும் தரக்கூடாது என அமைச்சர் ஒருவர் அழுத்தம் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றிய இளம்பெண், பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்நிலையில், இதுகுறித்து பேசிய கிரிக்கெட் வீரர் அஸ்வின், “கொல்கத்தா பெண் மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவம் மிகக் கொடூரமானது. நீதி கிடைக்க தாமதமாகலாம்; கிடைக்காமல் போய்விடக் கூடாது என சொல்வார்கள். ஆனால் இந்த விஷயத்தில் நீதி கிடைப்பதில் கூட தாமதமாகி விடக் கூடாது” என வலியுறுத்தினார்.
அல்சர், அஜீரணம், சத்து குறைபாடு, உடல் சோர்வு, மன அழுத்தம், ரத்த அணு குறைபாடு, உடல் வெப்பம் என அனைத்து பிரச்னைகளையும் ஒரேயொரு பானம் நீக்குகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், இதற்கு ஸ்மூதி என்று பெயர். 2 மாதுளை பழ விதைகள், ஒரு வாழைப்பழம், ஊற வைத்த 7 பாதாம், 5 முந்திரி, சிறிது உலர் திராட்சை ஆகியவற்றை மிக்சியில் அரைத்தால் இந்த ஸ்மூதி ரெடி. இதனை பூலோக அமிர்தம் என்கின்றனர் மருத்துவர்கள்.
பாடப்புத்தக விலை உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற பாஜக மூத்த தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், பாடப்புத்தக விலையை 40% அளவு அரசு உயர்த்தியிருப்பது ஏற்புடையது அல்ல. விலையை உயர்த்தாமல் அதற்கான தொகையை மானியமாக வழங்கியிருக்கலாம் என்று கூறியுள்ளார். புத்தக விலை ஏற்றம், மாணவர்களின் இடைநிற்றலுக்கு காரணமாக அமையக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்திக்கடவு – அவிநாசி திட்டம் இபிஎஸ் கொண்டு வந்த திட்டம் என்று அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அந்தத் திட்டம் மகத்தானது என்றும், அதனை இபிஎஸ் முதல்வராக இருந்தபோதுதான் கொண்டு வந்தார் என்றும் கூறினார். ஆனால் இதை திமுக கொண்டு வந்ததுபோல இன்று திறந்து வைக்கிறார்கள் என்று விமர்சித்த அவர், அதிமுகவின் திட்டங்களுக்கு திமுக லேபிள் ஒட்டப்படுவதாக சாடினார்.
Sorry, no posts matched your criteria.