India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கொல்கத்தாவில் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண் பயிற்சி மருத்துவருக்கு நீதி கேட்டு, X பக்கத்தில் #justiceformoumitadebnath ட்ரெண்ட் ஆகி வருகிறது. X பக்கத்தில் அதனை சுமார் 2.20 லட்சம் பேர் பதிவிட்டு உள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்பெண் பயிற்சி மருத்துவர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து மருத்துவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.
கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடக்கின்றன. இதனிடையே, கொல்கத்தாவில் நடந்த போராட்டத்தில் சிலர் வைத்திருந்த பதாகை வாசகம், வலைதளங்களில் வைரலாகியது. அதில், Bad Touch பற்றி உங்கள் மகளுக்கு கற்றுத்தருகையில், உங்கள் மகனும் அதனை தெரிந்திருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்துங்கள்” என எழுதப்பட்டிருந்தது.
நடிகர் அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் முடிவடையவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் எடிட் செய்யப்பட்ட காட்சிகள் அஜித்துக்கு பிரத்யேகமாக போட்டுக் காட்டப்பட்டன. படத்தை மிகவும் உன்னிப்பாக பார்த்த அஜித், திரைப்படம் ஹாலிவுட் ரேஞ்சில் இருப்பதாக கூறி இயக்குநர் மகிழ் திருமேனியை கட்டிப்பிடித்து பாராட்டியதாக படப்பிடிப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சூடானில் துணை ராணுவப் படை (RSF) நடத்திய தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினார் மாநிலம் ஜல்க்னி கிராமத்தில் இருந்து பெண்களை RSF படையினர் கடத்த முயன்றபோது, கிராம மக்கள் தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த துணை ராணுவத்தினர், கண்மூடித்தனமாக மக்களை நோக்கி சுட்டனர். இந்த தாக்குதலால் ஒட்டுமொத்த கிராமமும் ரத்தக்களரியானது.
ஓய்வின்றி உழைத்து வரும் பிரதமர் மோடி, விளையாட்டு வீரர்களுக்கு நேரம் ஒதுக்குவது ஊக்கமளிக்கிறது என ஹாக்கி ஜாம்பவான் ஸ்ரீஜேஷ் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். மோடியை சந்தித்தது குறித்து பேசிய அவர், வீரர்களுக்கு செய்து தரப்பட்ட வசதிகள் பற்றி விசாரித்தார். ஒவ்வொரு போட்டிக்குப் பின்னரும் தன்னை சந்திக்க வேண்டுமென கட்டளையிட்டுள்ளார். குடும்பத்தினரோடு அவரை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
கடந்த 20 நாள்களில் இல்லாத அளவு தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹840 உயர்ந்து, ₹53,360க்கும், கிராமுக்கு ₹105 உயர்ந்து, ₹6,670க்கும் விற்பனையாகிறது. இறக்குமதி வரி குறைவால் தங்கம் விலை ₹50,000க்கு கீழ் செல்லும் என காத்திருந்த நடுத்தர மக்களை இது, பேரிடியாக தாக்கியுள்ளது. வரும் நாள்களில், விலை மேலும் உயரும் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் தேடப்படும் ரவுடி சம்போ செந்தில் தாய்லாந்தில் பதுங்கியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இக்கொலை தொடர்பாக அடுத்தடுத்து ரவுடிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர். விசாரணையில் ரவுடி சம்போ செந்தில் நாட்டு வெடிகுண்டு அளித்ததை கண்டுபிடித்து அவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் வெளிநாடு தப்பிவிட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது தாய்லாந்தில் பதுங்கி இருப்பதாகத் தெரிகிறது.
பாலாவின் வணங்கான் திரைப்படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் பணியாற்றிய நிலையில், தற்போது சாம் சி.எஸ். இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். அதாவது, பாடல்களுக்கு ஜி.வி. பிரகாஷும், பின்னணி இசைக்கு சாமும் ஒப்பந்தமாகியுள்ளனர். இதனை சி.எஸ். சாம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஏன் இந்த திடீர் மாற்றம் என்பது தெரியவில்லை.
ராகுல் காந்தி பிரிட்டிஷ் குடிமகன் என்று அவர் செயல் இயக்குநராக பணியாற்றிய பிரிட்டன் நிறுவனம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ராகுலின் இந்தியக் குடியுரிமையை ரத்து செய்யுமாறு 2019-ல் மத்திய உள்துறைக்கு கடிதம் எழுதினார். இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லாததால், ராகுலின் இந்தியக் குடியுரிமையை ரத்து செய்யுமாறு டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார்.
டிவிட்டர் நிறுவனம் உலக பணக்காரர் எலான் மஸ்க்கின் கைக்கு வந்ததை அடுத்து, எக்ஸ் என பெயர் மாறியதுடன் பல அதிரடி மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, அந்நிறுவனத்தில் பணிபுரிந்த பலர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். அதில் ஒருவரான கேரி ரூனி, இதனை எதிர்த்து அயர்லாந்து பணியிட விவகார ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த ஆணையம், ரூனிக்கு எலான் மஸ்க் ரூ.6 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
Sorry, no posts matched your criteria.