India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேசிய விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதை திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நித்யா மேனன் வென்றது தெரிந்ததே. இருப்பினும், இந்த விருது கார்கி படத்தில் நடித்த சாய் பல்லவிக்கு கிடைத்திருக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர். பொய் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட தன் தந்தையை விடுவிக்க போராடும் ஆசிரியையாக அவர் அபாரமாக நடித்திருந்தது நினைவிருக்கலாம். இது பற்றிய உங்கள் கருத்து என்ன?
ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்கள் நலனுக்காக குரல் கொடுக்கும் கட்சிகளில் விடுதலை சிறுத்தைகளும் ஒன்றாகும். தேர்தலின்போது அக்கட்சியை கூட்டணியில் சேர்க்க பிற கட்சிகள் ஆர்வம் காட்டுவதில் இருந்து, விடுதலை சிறுத்தைகளின் முக்கியத்துவத்தை உணர முடியும். அக்கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு இன்று 62ஆவது பிறந்த நாளாகும். இதையொட்டி WAY2NEWS சார்பில் வாழ்த்துகள். நீங்களும் உங்கள் வாழ்த்துகளை கீழே பதிவிடலாம்.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் UPSC முதல்நிலைத் தேர்வுக்கான ஊக்கத்தொகை பெறுவதற்கான தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். www.naanmudhalvan.tn.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம். செப்.15 காலை 10-12 மணி வரை இதற்கான தேர்வு நடைபெற உள்ளது. இதில் தேர்ச்சிபெறும் 1000 பேருக்கு, UPSC முதல்நிலைத் தேர்வு-2025க்கு தயாராகும் வகையில் மாதம் ₹7,500 என 10 மாதங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.
பிரம்மாண்டம், பிரமிப்பு இந்த இரு சொற்களையும் குறிக்கும் ஒரே வார்த்தை இயக்குநர் ஷங்கர். யாரும் பேசா பொருளை பேசுபொருளாக்கிய ஜென்டில் மென், ஊழலுக்கு எதிரான இந்தியன், 61 வயதிலும் அசராமல் உழைக்கும் எந்திரன், தமிழ்த் திரையுலகின் அந்தஸ்தை உயர்த்திய கேம் சேஞ்சர் இப்படியாக ஷங்கர் இன்றும் உயர்ந்துகொண்டே செல்கிறார். அவர் மென்மேலும் பல வெற்றிகளைக் குவிக்க பிறந்தநாளில் மனதார வாழ்த்துவோம்.
ஹாலிவுட் படங்களில் போலவே, அமெரிக்காவில் விசித்திர சம்பவங்கள் அரங்கேறுகின்றன. பறக்கும் தட்டுகள் போன்றவை அமெரிக்காவிலேயே அதிகம் தென்படுகின்றன. இந்நிலையில், நேற்று காலை வர்ஜீனியா மாகாணத்தின் வில்லியம்ஸ்பர்க் நகரில் ஒரு விசித்திரமான பெரிய வட்டம் வானில் வட்டமடித்தது. இதனை பார்த்தவர்கள், அதனை திகிலுடன் போட்டோ எடுத்தனர். இதுகுறித்து விஞ்ஞானிகளும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
புதிதாக வீடு, மனை வாங்குவோர் கட்டாயம் கீழ்காணும் விஷயங்களை அறிந்திருக்க வேண்டும். வீடு, மனை விற்போருக்கு, அதை விற்க சட்டப்பூர்வ உரிமை உள்ளதா என பரிசோதிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட சொத்துக்கு இன்னார்தான் வாரிசு என்பதை உரிமையாளர் தன் இறப்புக்கு முன் எழுத்தில் உறுதிப்படுத்தி இருக்க வேண்டும். இதை சரிபார்த்த பிறகும், எதிர்கால உரிமை இல்லை என்பதை உறுதி செய்தே வாங்க வேண்டும்.
புவி வெப்பமடைதலை வேகப்படுத்துவதில் கார்பன் டை ஆக்சைடு (CO2) முக்கிய பங்குவகிக்கிறது. அதனை சீர்செய்ய இந்திய மாணவர் பிராந்தர் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். லண்டன் பல்கலை.,யில் முதுகலை பயிலும் அவர், வளிமண்டலத்தில் இருந்து CO2-வை பிரித்தெடுக்க நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தும் புதிய கட்டுமான பயோ மெட்டீரியலை உருவாக்கியுள்ளார். இது நடைமுறைக்கு வந்தால் கார்பன் தடயத்தை குறைக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
17ஆவது பாராலிம்பிக்ஸ் போட்டி பாரிஸில் வரும் 28 முதல் செப்., 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ள 84 போட்டியாளர்கள் இன்று பிரான்ஸ் சென்றடைந்தனர். வில்வித்தை, தடகளம், ரோயிங், நீச்சல் உள்ளிட்ட 12 விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் களம் காணவுள்ளனர். பாராலிம்பிக்ஸில் இந்தியா இதுவரை 9 தங்கம், 12 வெள்ளி, 10 வெண்கலம் என 31 பதக்கங்கள் வென்றுள்ளது.
மைசூர் நகர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு 14 வீட்டு மனைகள் முறைகேடாக ஒதுக்கப்பட்டதாக எதிர்க்கட்சியான பாஜக குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக விளக்கமளித்த சித்தராமையா, தனது மனைவியின் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்திற்கு ஈடாகவே இந்த வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டதாக கூறினார். இந்நிலையில், இப்புகார் தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடகா ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வை தொடர்ந்து, வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, ஒருகிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ₹2 உயர்ந்து ₹91க்கும், கிலோவிற்கு ₹2,000 உயர்ந்து ₹91,000க்கும் விற்பனையாகிறது. இறக்குமதி வரி குறைப்பை தொடர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ₹86 வரை குறைந்த நிலையில், தற்போது படிப்படியாக மீண்டும் அதிகரித்து வருகிறது.
Sorry, no posts matched your criteria.