India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஊராட்சி மணி என்ற “155340” இலவச தொலைபேசி மையத் திட்டத்தை, தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. நீங்கள் வசிக்கும் பஞ்சாயத்து பகுதியில் நிலவும் குறைபாடுகள், குற்றச்சாட்டுகளை நீங்கள் இதில் தெரிவிக்கலாம். சாலை வசதி சரியில்லை, சாலை வசதி வேண்டும், குடிநீர் குழாய்களில் தண்ணீர் வரவில்லை, குடிநீர் குழாய் வேண்டும், தெரு விளக்கு வசதி வேண்டும் என்பன போன்றவற்றை கூறி, நிவர்த்தி செய்துகொள்ளலாம். SHARE IT
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இன்று தாயகம் திரும்பினார். டெல்லியில் அவருக்கு ஆயிரக்கணக்கானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவரிடம், மல்யுத்தத்தை தொடர்வீர்களா என நிருபர்கள் கேட்டனர். அதற்கு, “எனது போராட்ட குணம் ஓயும் வரை, என் மல்யுத்தமும் ஓயாது” என பதிலளித்தார்.
கனமழை எச்சரிக்கை காரணமாக 22 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வருவாய்த்துறை வெளியிட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை ஆட்சியர்கள் பின்பற்றுமாறும், கனமழைக்கு முன்னதாகவே, தேவைப்படக்கூடிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது. மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை, முன்கூட்டியே தயார் நிலையில் வைக்கும்படியும் கூறியுள்ளது.
உணவு உட்கொண்டதும் ஜூஸ் குடிக்கலாமா? கூடாதா? என சந்தேகம் இருக்கும். அதுகுறித்து மருத்துவர்கள் சொல்லும் யோசனைகளை தெரிந்து கொள்ளலாம். சாப்பிட்டதும் ஜூஸ் குடித்தால் அந்த நேரம் மட்டும் புத்துணர்ச்சி ஏற்படும் என்றும், பிறகு உடல்நலப் பிரச்னை ஏற்படும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். செரிமான பிரச்னை ஏற்பட்டு மலம் கழிப்பது பாதிக்கப்படும். இது எடையை அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கின்றனர்.
முதல்வர் மு.க. ஸ்டாலினின் கையில் ரத்தக்கறை இருப்பதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தஞ்சாவூரை சேர்ந்த தனுஷ் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பேசிய இபிஎஸ், “திமுகவின் நீட் ரத்து நாடகத்தை நம்பி பல மாணவர்கள் தற்கொலை செய்கின்றனர். அவர்களின் ரத்தக்கறை முதல்வரின் கையில்தான் உள்ளது. நீட் தேர்வு ரத்து ரகசியம் எப்போது வெளியாகும்?” என இபிஎஸ் கேள்வியெழுப்பினார்.
தனது தந்தைக்கும், தங்களுக்கும்தான் முன் விரோதம் என கூறி, ஆம்ஸ்ட்ராங் உடன் அஸ்வத்தாமன் இணக்கமாக இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங்கை ‘அங்கிள்’ என்று அழைத்து வந்ததாகவும், நட்பு பாராட்டுவது போல நடித்ததாகவும் தெரிகிறது. மேலும், ஆம்ஸ்ட்ராங் உயிரோடு இருந்தால் வடசென்னை பகுதியில் அரசியல் செய்ய முடியாது என நினைத்த அஸ்வத்தாமன், கொலை செய்ய திட்டம் தீட்டியதாகவும் கூறப்படுகிறது.
உலகில் உயரம் குறைந்த மனிதர்கள் அதிகமுள்ள நாடு எது என்பது அனைவருக்கும் தெரியுமா என்பது கேள்விக்குறியே. அதை இங்கு பார்க்கலாம். தென் கிழக்கு ஆசிய நாடான திமோர் லெஸ்டி மக்களின் சராசரி உயரம் 5.1 அடியாகும். இதில் ஆண்களின் சராசரி உயரம் 5.2 அடியாகும். பெண்களின் சராசரி உயரம் 4.11 அடியாகும். இந்த பட்டியலில் இந்தியா 12ஆவது இடத்தில் உள்ளது. இந்தியர்களின் சராசரி உயரம் 5.2 அடியாக கணக்கிடப்பட்டுள்ளது.
மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பாக்., பூர்வீகமாகக் கொண்ட தொழிலதிபர் தவாஹிர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 166 அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு காரணமான 26/11 தாக்குதலுக்கு நிதியுதவி அளித்த அவரை அமெரிக்க போலீசார் கைது செய்து சிறையில் அடைந்திருந்தனர். இந்த நிலையில், அவரை Extradition Treaty-படி, இந்தியா அழைத்துவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பான் இந்திய நடிகர் பிரபாஸ் & இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோரது புதிய லுக், இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஹனு ராகவபுடியின் புதிய படத்தின் தொடக்க விழாவில், குட்டை தாடி, நெற்றியில் பொட்டுடன் பிரபாஸ் அழகாக இருப்பதாக ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர். அதேபோல, ஸ்டைலிஷான ரோஹித் ஷர்மாவின் புதிய தோற்றப் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் தான் போட்டுயிட உள்ளதாக அம்மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என உமர் அப்துல்லா முடிவெடுத்துள்ள நிலையில், தேசிய மாநாடு கட்சியை வழிநடத்த அவர் முடிவெடுத்துள்ளார். காஷ்மீரில் 3 கட்டமாக சட்டசபைத் தேர்தல் செப்.18 முதல் அக்.1 வரை நடைபெறவுள்ளது.
Sorry, no posts matched your criteria.