India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒரு பேங்க் அக்கவுண்டிற்கு 4 நாமினிகளை நியமிக்கும் முறை, விரைவில் அமலுக்கு வரவுள்ளது. வங்கியில் கணக்கு வைத்திருப்போர், நாமினியாக தங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரை நியமிக்கும் முறை தற்போது உள்ளது. இதை மாற்றும் வகையில், ஒரு அக்கவுண்டிற்கு 4 பேரை நாமினிகளாக நியமிக்கும் மசோதா மாநிலங்களவையில் தாக்கலாகியுள்ளது. இது நிறைவேறினால், வங்கி வாடிக்கையாளர்கள் பயனடைவர் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக, Ex DGP சுனில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சார்பு ஆய்வாளர், 2ஆம் நிலை சிறைக் காவலர்கள், தீயணைப்பாளர்கள் போன்ற தேர்வுகளை TNUSRB நடத்தி வருகிறது. இதன் தலைவராக இருந்த சீமா அகர்வால், சமீபத்தில் வேறு துறைக்கு மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து, சிவில் சப்ளை சிஐடி டிஜிபியாக இருந்து 2021இல் ஓய்வுபெற்ற சுனில்குமார், தற்போது தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பெண்கள் அதிகளவில் பணிபுரிவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் ஆலை ஊழியர்களுக்கான குடியிருப்பை திறந்து வைத்து பேசிய அவர், நாட்டிலேயே 2ஆவது பெரிய பொருளாதார மாநிலம், தமிழ்நாடு என பெருமிதம் தெரிவித்தார். மேலும், மகளிருக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு முனைப்புடன் செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் வரும் 22ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ், அமேசான் ஓடிடி தளங்களில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அமிதாப் பச்சன், கமல், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இப்படம், நாடு முழுவதும் வசூல் வேட்டை ஆடியது. இந்நிலையில், இந்தி Version நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி Version அமேசானிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மதுக்கடைகளில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் மது விற்பனை 4% குறைந்திருக்கிறது. இதனால், இம்மாதம் முதல் மது விற்பனையை 5% அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இலக்கு எட்டப்படவில்லை எனில், மாதாந்திரக் கூட்டத்தில், அதிகாரிகள் விளக்கமளிக்க வேண்டுமாம். அரசின் இம்முடிவுக்கு ராமதாஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்சார் போர்டு (CBFC) U, UA, A, S என 4 விதமான சான்றுகளை திரைப்படங்களுக்கு வழங்குகிறது. இதில் U என்றால் அனைத்து வயதினரும் பார்க்க உகந்த திரைப்படம் என அர்த்தம். UA அல்லது U/A என்றால் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெற்றோரின் துணையோடு பார்க்க வேண்டும். A என்றால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க உகந்த படம். இதுதவிர, மக்கள் பார்வைக்கு அல்லாத படங்களுக்கு S சான்றிதழ் வழங்கப்படுகிறது.
P2P கடன் செயலிகள் மற்றும் NBFC கடன் நிறுவனங்களுக்கான விதிகளை RBI கடுமையாக்கியுள்ளது. கடன் செயலிகளில் ஏராளமான விதி மீறல்கள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், அவை எந்தவொரு காப்பீடு திட்டத்தையும் விற்பனை செய்யக்கூடாது எனவும், தகுதி இல்லாத நபர்களுக்கு கடன் வழங்கக் கூடாது என்றும் RBI அறிவுறுத்தியுள்ளது. P2P செயலிகள் கடன் வழங்குபவருக்கும், பெறுபவருக்கும் இடைத்தரகராக செயல்படுகின்றன.
“G.O.A.T” ட்ரெய்லரில் “DO YOU THINK YOU CAN STOP ME?, NO ONE CAN STOP ME” என்ற விஜய்யின் வசனம், அரசியல் பஞ்சாக வைரலாகி வருகிறது. அதேபோல், “அண்ணே வரார் வழிவிடு” போன்ற பல டயலாக், அவரது ரசிகர்களை குஷியாக்கியுள்ளது. ரா உளவாளியாக அப்பா விஜய்யும், அவருக்கு உதவி செய்யும் மகன் (AI) விஜய்யும் தோன்றும் காட்சியில் விசில் பறக்கப்போகிறது. G.O.A.T ட்ரெய்லர் பிடித்திருக்கிறதா? என்பதை கமெண்ட் செய்யுங்க.
குண்டர் சட்டம் குறித்து சென்னை ஐகோர்ட் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. வங்கிகளில் ரூ.3.30 கோடி வாங்கி மோசடி செய்ததாக செல்வராஜ் என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட், “முதலில் குண்டர்கள் யார் என்று தமிழக அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டும். சர்வ சாதாரணமாக குண்டர் சட்டத்தை பயன்படுத்தக் கூடாது” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
விசிக தலைவர் திருமாவுக்கு நடிகரும், TVK தலைவருமான விஜய் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். TVK கட்சியை தொடங்கியதிலிருந்து, அரசியலில் மிகவும் ஆக்டிவாக உள்ள விஜய், இன்று 62வது பிறந்தநாளை கொண்டாடும் திருமாவை ஃபோனில் அழைத்து வாழ்த்தினார். அப்போது, இருவரும் சுமார் 5 நிமிடங்கள் வரை ஃபோனில் பேசிக்கொண்ட நிலையில், விஜய்யின் அரசியல் பயணம் ஜொலிக்க வேண்டும் என, திருமா வாழ்த்தியதாக தெரிகிறது.
Sorry, no posts matched your criteria.