news

News August 17, 2024

APPLY: ரயில்வேயில் 4,096 அப்ரன்டிஸ் வேலை

image

இந்திய ரயில்வேயின் வடக்கு பிரிவில் 4,096 அப்ரன்டிஸ் வேலைக்கான விண்ணப்பப்பதிவு RRC இணையதளத்தில் தொடங்கியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் செப்.16 வரை விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதியாக 10ம் வகுப்பு, ITI படிப்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பாக செப்.16 தேதிப்படி, 15 முதல் 24 வயது வரை இருக்க வேண்டும். வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டும், பிறருக்கு 3 ஆண்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

News August 17, 2024

நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கம்

image

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளர் சிவராமன் (32) மீது போக்சோவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கந்திகுப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர். இந்நிலையில் கட்சியில் இருந்து சிவராமனை நீக்கி சீமான் அறிவித்துள்ளார்.

News August 17, 2024

ஒரு வேளை மட்டும் சாப்பிடும் ஷாருக்கான்

image

தினமும் 4 – 5 மணி நேரம்தான் தூங்குவதாக நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். தனது அன்றாட வாழ்க்கை குறித்து பேட்டி அளித்த அவர், வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு அதிகாலை 2 மணிக்குதான் வருவதாகவும், பிறகு சிறிது நேரம் உடற்பயிற்சி செய்த பின் 5 மணிக்குதான் உறக்குவதாகவும் கூறியுள்ளார். படப்பிடிப்பை பொறுத்து காலை 9 மணிக்கு எழுவதாகவும், தினமும் ஒரு வேளை மட்டுமே சாப்பிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News August 17, 2024

தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

image

அரசு பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு (SMC) புதிதாக தேர்வானவர்களின் விவரங்களை, எமிஸ் தளத்தில் பதிவேற்ற பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, உறுப்பினர்களின் ஆதார் உள்ளிட்ட விவரங்களை பெற்று, அவற்றை எமிஸ் தளத்தில் தலைமை ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்யவும், அதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு பள்ளி, மாணவர்கள் நலனுக்காக SMC குழு உருவாக்கப்பட்டுள்ளது.

News August 17, 2024

முதல்வர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன்: சித்தராமையா

image

காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக, கர்நாடக CM குற்றஞ்சாட்டியுள்ளார். அரசு திட்டத்தில் சித்தராமையா மனைவிக்கு முறைகேடாக மனை ஒதுக்கியதாக எழுந்த புகாரில், அவர் மீது வழக்கு தொடர ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் அவர் பதவி விலக வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது. இதுகுறித்து பேசிய அவர், தான் முறைகேடு செய்யவில்லை என்பதால் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என கூறியுள்ளார்.

News August 17, 2024

உளைச்சலில் கேங்மேன் : பிரேமலதா கோரிக்கை

image

மின் வாரியத்தில் கேங்மேன் தொழிலாளர்களை கள உதவியாளர்களாக அறிவிக்க வேண்டும் என பிரேமலதா வலியுறுத்தியுள்ளார். குடும்பத்தை விட்டு வெகு தொலைவில் பணிபுரிவதால், கேங்மேன் தொழிலாளர்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். எனவே, அவர்களை அவரவர் மாவட்டங்களில் பணிபுரிய அரசு, அரசாணை பிறப்பிக்க வேண்டும். அதேபோல், அவர்களின் ஊதியத்தையும் உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்திள்ளார்.

News August 17, 2024

பி.சுசீலா மருத்துவமனையில் அனுமதி

image

பிரபல பாடகி பி.சுசீலா சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும், அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், அவருக்கு என்ன பிரச்னை என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. அவரின் உடல்நிலை குறித்து விரைவில் மருத்துவ அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News August 17, 2024

முட்டை விலை 5 காசுகள் உயர்ந்தது

image

முட்டை விலை 5 காசுகள் உயர்ந்துள்ளதாக, நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது. முட்டை விலை சமீப நாள்களாக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில், 5 காசுகள் உயர்ந்து மொத்த விலையில் ஒரு முட்டை ₹4.55 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில்லறை விலையில் ஒரு முட்டை ₹6 வரை விற்பனையாகிறது.

News August 17, 2024

இந்தியாவில் விற்று தீர்ந்த Super luxury கார்கள்

image

இந்தியாவில் Super luxury கார்களின் விற்பனை தொடர்ந்து 3ஆவது ஆண்டாக 1,000ஐ கடந்து உச்சம் தொட்டுள்ளது. குறிப்பாக, லம்போர்கினி தனது இத்தாலி தலைமையகத்தில் இருந்து இந்தியாவிற்கென ஒதுக்கப்பட்ட அனைத்து கார்களையும் விற்று தீர்த்துள்ளது. அதே போல, ஃபெராரி, மெக்லாரன் ஆகிய மாடல்களும் வலுவான தேவையை கொண்டுள்ளன. ஆடி, பென்ஸ் போன்ற உயர்தர மாடல்களை வாங்க ஒரு வருடம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.

News August 17, 2024

17 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்திலுள்ள 17 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, தருமபுரி, தி.மலை, திருச்சி, க.குறிச்சி, கடலூரில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், நாமக்கல், நாகை, காஞ்சி, ராணிப்பேட்டையில் இடியுடன் லேசான மழையும் பெய்யக் கூடும். இதேபோல, ஈரோடு, தூத்துக்குடி, தென்காசி, குமரி, விருதுநகரில் லேசான மழை பெய்யக் கூடும்.

error: Content is protected !!