India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024 மகளிர் T20 WC தொடர், ஜிம்பாப்வேயில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடர் வங்கதேசத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு ஏற்பட்ட கலவரத்தால், இந்தியா அல்லது UAEஇல் நடத்தப்படலாம் என தகவல் வெளியானது. ஆனால், ஜிம்பாப்வேயில் சாதகமான சூழல் நிலவுவதால் அங்கு WC போட்டி நடத்தப்படலாம் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மகளிர் T20 WC தொடர் அக்.3-20 வரை நடைபெற உள்ளது.
அரியானா சட்டசபைக்கு நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அம்மாநிலத்தின் பிரதான கட்சியான துஷ்யந்த் சவுதாலாவின் ஜே.ஜே.பி., கட்சி MLAக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து பாஜகவை நோக்கி செல்கின்றனர். அரியானாவின் 90 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக அக்.1இல் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் பாஜகவிற்கு அளித்து வந்த ஆதரவை ஜேஜேபி கட்சி வாபஸ் பெற்றது. இதனால், சுயேச்சை ஆதரவுடன் பாஜக ஆட்சியை தக்கவைத்தது.
இரவில் படுக்கையில் படுத்ததும் சிலர் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருப்பர். அவர்களுக்கு மருத்துவர்கள் கீழ்காணும் பரிந்துரைகளை முன்வைக்கின்றனர். 1) தூங்கும் முன்பு வாழைப்பழத்தை தேனுடன் கலந்து சாப்பிட்டால் தூக்கம் சீக்கிரம் வரும். வாழைப்பழத்தில் உள்ள டிரிப்டோபன் தூக்கத்தை அதிகரிக்கிறது 2) பாதாமும் நல்ல தூக்கத்தை தரும் 3) இரவில் தூங்கும் முன்பு பால் குடிப்பதும் நல்ல தூக்கத்தை தரும்.
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலையை கண்டித்து, மருத்துவர்கள் நாடு தழுவிய போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தை கைவிடுமாறு மருத்துவர்களுக்கு, மத்திய சுகாதார அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் டெங்கு, மலேரியா போன்ற வைரஸ் காய்ச்சல் தாக்கத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அமைச்சகம், மருத்துவர்கள் உடனே பணிக்கு திரும்ப அழைப்பு விடுத்துள்ளது.
EPF கணக்கிடுவதற்கான ஊதிய உச்சவரம்பை ₹21,000ஆக உயர்த்த மத்திய நிதியமைச்சகம் முன்மொழிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாதச் சம்பளம் வாங்குவோர், ஓய்வு காலத்தில் பாதுகாப்பாக வாழ EPF திட்டம் உதவுகிறது. தற்போது இதற்கான உச்சவரம்பு ₹15,000ஆக உள்ளது. இதனை ₹21,000ஆக மாற்றினால், EPF பங்களிப்பு உயரும். இதனால் ஓய்வூதியத் தொகையும் அதிகரிக்கும் என்பதால், பலரும் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடமாக வாடகை வீட்டில் ஸ்டூடியோ அமைத்து பல படங்களுக்கு யுவன் இசையமைத்துள்ளார். இந்நிலையில், வாடகைப் பணம் ₹20 லட்சத்தை கொடுக்காமல், இரவோடு, இரவாக வீட்டைக் காலி செய்ததாக உரிமையாளர் ஹஜ்மத் பேகம் புகார் கொடுத்துள்ளார். இதன் புகாரின் அடிப்படையில் யுவனிடம் விசாரணை நடத்தப்படும் என கூறப்படுகிறது.
SMS மூலம் மின் கட்டண மோசடி அரங்கேறி வருவதாக பயனர்களை TANGEDCO எச்சரித்துள்ளது. பழைய மாத மின் கட்டணம் சரி செய்யப்படாததால், இன்றிரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்பது போன்ற குறுஞ்செய்தி வந்தால், அதை பொருட்படுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடி செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் எனவும், இது போன்ற சைபர் புகார்களை 1930 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“மக்கள் மருத்துவர்” என பெயர் பெற்ற நெல்லை, சிந்துபூந்துறையை சேர்ந்த டாக்டர் கணேசன் இன்று காலமானார். ஏழை எளிய மக்களுக்கு 30 வருடமாக ₹1-க்கு சிகிச்சை அளித்த அவர், கடந்த 5 ஆண்டுகளாக வெறும் ₹10 மட்டுமே கட்டணமாக வாங்கினார். இதனால், அவருக்கு அப்பகுதி மக்களே, மக்கள் மருத்துவர், 10 ரூபாய் மருத்துவர் என்று அடைமொழி கொடுத்தனர். அவரது மறைவு செய்தியை கேட்டு, துயரமடைந்த மக்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.
இரவில் கோதுமை சப்பாத்தியை சாப்பிடலாமா, கூடாதா என சந்தேகம் இருக்கும். அதற்கு உடல்நல ஆலோசகர்கள் தெரிவிக்கும் விளக்கத்தை காணலாம். கோதுமை சப்பாத்தியில் கலோரிகள், கார்போ ஹைட்ரேட்டுகள் அதிகம் இருக்கும் என்றும், அதை இரவில் சாப்பிட்டால் செரிமானம் ஆக அதிக நேரமாகும் என்றும் கூறுகின்றனர். இதனால் ஜீரண பிரச்னை ஏற்படும் என்பதால், இரவு உணவாக சப்பாத்தி சாப்பிடுவதை தவிர்க்கும்படி அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
டிமான்டி காலனி 2 படத்தின் வெற்றியை, படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அருள்நிதி, பிரியா பவானிசங்கர் நடிப்பில் வெளியான இந்த படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக, ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று வெளியான படங்களில், ஆதரவான விமர்சனத்தை டிமான்டி காலனி 2 பெற்றுள்ளது. இதனால், மகிழ்ச்சியில் திளைத்துள்ள படக்குழுவினர், இந்த வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினர்.
Sorry, no posts matched your criteria.