news

News August 18, 2024

வாழ்க்கை போன போக்கில் வாழ்கிறேன்: நிகிலா

image

எதையும் திட்டமிடாமல், வாழ்க்கை போன போக்கில் வாழ்வதாக நடிகை நிகிலா தெரிவித்துள்ளார். திட்டமிட்டு வாழ்ந்தால் புதிது என்ற சுவாரஸ்யம் இருக்காது எனவும், எதிர்பார்க்காதது வாழ்க்கையில் கிடைக்கும்போது, அந்த சந்தோஷம் இரட்டிப்பாகும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், நடிகை என்பது தனது தொழில் என்பதால், அதை தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கொண்டு வர மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

News August 18, 2024

திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 130, நாளை 250 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் கோயம்பேட்டில் இருந்து இன்று 30, மாதவரத்தில் இருந்து நாளை கூடுதலாக 40 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மேலும், பல்வேறு இடங்களில் இருந்து நாளை கூடுதலாக 265 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

News August 18, 2024

ஸ்டிரைக் முடிவுக்கு வருகிறது

image

நேற்று தொடங்கிய மருத்துவர்களின் வேலை நிறுத்தம் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைகிறது. கொல்கத்தா மருத்துவ கல்லூரியில் பயிற்சி பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஸ்டிரைக் நடத்தப்பட்டது. இதனால் நாடு முழுவதும் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டது. குறிப்பாக புறநோயாளிகள் சேவை பாதிக்கப்பட்டது. தமிழகத்திலும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News August 18, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் – 18 ▶ஆவணி – 02 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 07:45 AM – 08:45 AM & 01:30 PM – 02:00 PM ▶கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM & 01:30 PM – 02:30PM ▶ராகு காலம்: 04:30 PM – 06:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 01:30 PM ▶குளிகை: 03:00 PM – 04:30 PM >▶திதி: சுன்ய திதி▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீருஷம்.

News August 18, 2024

3 மாவட்டங்களுக்கு மிக கனமழை அலர்ட்

image

கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக RMC தெரிவித்துள்ளது. மேலும், கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

News August 18, 2024

எங்கள் சண்டை முடியவில்லை: வினேஷ் போகத்

image

பிரிஜ் பூஷனுக்கு எதிரான தங்களது நீண்ட சண்டை இன்னும் முடியவில்லை என வினேஷ் போகத் தெரிவித்துள்ளார். இந்த ஒலிம்பிக் ஆழமான காயத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், அது குணமாவதற்கு நேரம் தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவேனா அல்லது தொடர்வேனா என்பது குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.

News August 18, 2024

கருணாநிதி நாணயம் இன்று வெளியீடு

image

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் இன்று வெளியிடப்பட உள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலை நடைபெறும் விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ₹100 நாணயத்தை வெளியிட உள்ளார். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்க உள்ளனர். மேலும், சென்னையில், மண்டல கடல் மாசகற்றும் மையத்தையும் ராஜ்நாத் சிங் திறந்து வைக்க உள்ளார்.

News August 18, 2024

முகமது அலி பொன்மொழிகள்

image

*அடித்து வீழ்த்தப்பட்டால் நீங்கள் தோற்கமாட்டீர்கள். கீழேயே இருந்தால் தோற்றுவிடுவீர்கள். *நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள். *நான் தான் வெல்லப் போகிறேன் என்ற மன உறுதியுடன் இருக்கும் ஒருவனை வெல்வது கடினம். *ஆபத்துக்களை எதிர்கொள்ளத் தைரியம் இல்லாதவர்கள், எதையும் சாதிக்க மாட்டார்கள். *மற்றவர்களுக்குச் செய்யும் சேவை என்பது பூமியில் உள்ள உங்கள் அறைக்கு நீங்கள் செலுத்தும் வாடகையாகும்.

News August 18, 2024

இளைஞர் ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட்?

image

2030ல் நடைபெற உள்ள இளைஞர் ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட்டை சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் (IOC) இணைந்து முயற்சிகளை மேற்கொள்ள உள்ளதாக ICC தெரிவித்துள்ளது. இளைஞர் ஒலிம்பிக்ஸை இந்தியாவில் நடத்த பிரதமர் மோடி கடந்த ஆண்டு விருப்பம் தெரிவித்தார். அதேபோல் 2028ல் நடைபெற உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட் நிச்சயமாக இருக்கும் என IOC உறுதிபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News August 18, 2024

4 ஆண்டுகளாக சம்பளம் வாங்காத அம்பானி

image

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, 4ஆவது ஆண்டாக இந்த நிதி ஆண்டிலும் சம்பளம் பெறாமல் வேலை செய்து வருகிறார். அந்நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்தபோது, அவர் இந்த முடிவை எடுத்திருந்தார். இருப்பினும், அவரது மனைவி, மகன்கள், உறவினர்கள் உள்பட நிறுவனத்தில் வேலை செய்யும் பிற ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!