India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜகவில் 10 கோடி பேரை உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஜெபி நட்டா, அமித் ஷா தலைமையில் பாஜக உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் வரும் செப். 1 முதல் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கவும், PM மோடியிடம் உறுப்பினர் பதவியை புதுப்பிப்பை துவங்கவும் முடிவு செய்யப்பட்டது. மிஸ்ட் கால், க்யூ ஆர் கோடு, நமோ செயலி மூலம் உறுப்பினர்களை சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டது.
வங்கதேச கலவரத்திற்கு 650 பேர் பலியாகி இருப்பதாக ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான போராட்டங்கள், கலவரம் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் 10 பக்க அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், ஜூலை 16- ஆக. 4 காலத்தில் 400 பேரும், ஆக.5, 6ஆம் தேதிகளில் 250 பேரும் பலியாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கைது, உயிர் பலி குறித்து பாரபட்ச விசாரணை நடத்தவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சர்வதேச வர்த்தகம், ஜிடிபி குறியீட்டை கொண்டு மட்டுமல்ல, அதன் ஆண்கள் உள்ளாடை விற்பனையை வைத்தும் கணக்கிடலாம் என்றால் நம்ப முடிகிறதா? அதற்குப் பின்னால் ஒரு அர்த்தம் இருக்கிறது. ஆண் நுகர்வோர் பொருளாதார நிலைத்தன்மையற்ற நிலையில் இருக்கும்போது, உள்ளாடை தேவையான பொருட்களுக்கு மட்டுமே செலவிட விரும்புவர். அப்போது உள்ளாடைகளுக்கு செலவு செய்ய மாட்டார்கள்.
இந்த கோட்பாட்டை 1980களில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவரான ஆலன் கிரீன்ஸ்பான்தான் முன்வைத்தார். இதற்கு உதாரணமாக கூற வேண்டும் என்றால் 2020ஆம் ஆண்டில் பல நாடுகளில் கொரோனா வைரஸ் ஊரடங்கின்போது, நிதியை நிர்வகிக்க சிரமப்பட்ட ஆண்கள் உயர்ரக உள்ளாடைகளை வாங்குவதை தவிர்த்தனர். 2021இல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் உள்ளாடைகளின் விற்பனை அதிகரித்தது என்பது கவனிக்கத்தக்கது.
கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டையொட்டி, CM ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து PM மோடி கடிதம் எழுதியுள்ளார். அதில், நாட்டின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவர் கருணாநிதி என்றும், தமிழகத்தின் வளர்ச்சி, முன்னேற்றத்திலேயே அவர் எப்போதும் நாட்டம் கொண்டிருந்தார் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், அவரை போன்ற தலைவர்களின் தொலைநோக்கு பார்வை தேசத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வங்கி நிதி மோசடி வழக்குகளில் ₹65,279 கோடி சொத்துகளை ED இதுவரை பறிமுதல் செய்துள்ளது. மத்திய அரசிடம் இருக்கும் புள்ளி விவரங்களின்படி, கடந்த சில ஆண்டுகளில் ED வங்கி நிதி மோசடி தொடர்பாக 1,160 வழக்குகளை விசாரணைக்கு எடுத்து, 174 பேரை கைது செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. 473 உத்தரவுகள் மூலம் மோசடியாளர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
INDO-TIBET படையில் காவலர் நிலை (டெய்லர், காப்லர்) பதவிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 51 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இந்த வேலைக்கு https://recruitment.itbpolice.nic.in/rect/index.php இணையதளத்தில் ஜூலை 20 முதல் விண்ணப்பப்பதிவு நடைபெற்று வருகிறது. கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்பு தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு 44, பெண்களுக்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
.
தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளராக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவரை நிறுத்த மேலிட தலைவர்கள் வியூகம் வகுத்துள்ளனர். இம்முடிவின் மூலம் மேலும் சில கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு வரும் என கணக்கு போட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக, தமிழகத்தில் ஒருபோதும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முதல்வராக முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் ஆதங்கம் வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற பொது கணக்குக் குழுத் (PAC) தலைவராக காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபாலை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். ரயில்வே, பாதுகாப்புப் படைகள் மற்றும் பிற அமைச்சகங்களால் மேற்கொள்ளப்படும் செலவினங்கள், சிஏஜி அறிக்கைகளை PAC ஆய்வு செய்யும். PAC தலைவர் பதவி, மக்களவை எதிர்க்கட்சிக்கு அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி காங்கிரஸ் எம்பி வேணுகோபாலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவரை வன்கொடுமை செய்து கொன்ற நபர்களுக்கு மரணத் தண்டனை அளிக்க பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மருத்துவர்களுக்கு எதிரான வன்முறைகள் கொடூரமானது என்றும், இதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுவரை குற்றவாளிகளை சிபிஐ, போலீஸ் பிடிக்க முடியாதது மருத்துவர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.