India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகாராஷ்டிர தேர்தலில் CM வேட்பாளராக காங்கிரஸ் கூட்டணி யாரை அறிவித்தாலும் ஆதரிப்போம் என சிவசேனா (யுபிடி) கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த உத்தவ் தாக்கரே பணியாற்றுவதாக கூறினார். CM வேட்பாளர் குறித்து காங்கிரஸ் கூட்டணியில் கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்படும் நிலையில், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பின்னணி பாடகி பி.சுசீலா நாளை மறுநாள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. சிறுநீரகக் கோளாறு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும்,தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
வங்கி நிதி மோசடிகள் கடந்த ஆண்டை விட இந்தாண்டு 166% அதிகரித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ரிசர்வ் வங்கியின் (RBI) வருடாந்திர அறிக்கையை மேற்கோள்காட்டி அந்த செய்தி வெளியாகியுள்ளது. அதில், கடந்த 2022-2023ஆம் நிதியாண்டில் 13,564 வங்கி நிதி மோசடிகள் நடந்துள்ளதாகவும், அதே நேரத்தில் 2023- 2024ஆம் நிதியாண்டில் 36,075 வங்கி நிதி மோசடிகள் நடந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராயிடம் உண்மை கண்டறியும் சோதனையை CBI நடத்தவுள்ளது. இதற்காக நீதிமன்றத்தில், CBI அதிகாரிகள் சிறப்பு அனுமதி பெற்றதை அடுத்து, டெல்லியில் இருந்து 25 பேர் கொண்ட CFSL நிபுணர்கள் கொல்கத்தாவுக்கு வந்துள்ளனர். அவர்கள் நடக்கவிருக்கும் மனநிலை & குரல் பகுப்பாய்வு சோதனை மூலம் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
NCW உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் அரசியலுக்கு குஷ்பு வந்துள்ளார். இதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீதான அதிருப்தியே முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. பாஜகவில் தனக்கு பிறகு சேர்ந்த சரத்குமார், ராதிகாவுக்கு அண்ணாமலை முக்கியத்துவம் கொடுப்பதை குஷ்பு விரும்பவில்லை எனவும், இப்படியே இருந்தால் ஓரங்கட்டப்படுவோம் என கருதி அரசியலுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடன் வழங்குவது குறித்து சிபில் ஸ்கோரை வைத்தே வங்கிகள் முடிவு செய்கின்றன. அந்த ஸ்கோரை சீராக வைக்க பொருளாதார நிபுணர்கள் தெரிவித்த ஆலோசனையை பார்க்கலாம். வீடு, வாகனம் உள்பட எந்தக் கடனாக இருந்தாலும் உரிய காலத்தில் திருப்பிச் செலுத்த வேண்டும். தேவையில்லாமல் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிப்பது, அது ரிஜெக்ட் ஆவது போன்றவைகளால் ஸ்கோர் பாதிக்கப்படும். இதை தவிர்த்தால் சிபில் ஸ்கோர் அதிகரிக்கும்.
தனுஷ் படங்களுக்கு கட்டுப்பாடு விதித்த நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் நடிகர் சங்கம் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது. தனுஷ், விஷால் படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை, புதிய படங்களைத் தொடங்குவதில்லை எனவும் புகார் எழுந்தது. இந்நிலையில், இரண்டு சங்க பிரதிநிதிகளும் இவ்விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அத்துடன், நடிகர்களின் சம்பளத்தை குறைப்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளனர்.
2,800க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்களை தாக்குதல் நடத்தி கொன்று விட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதிக்குள் பல கி.மீ. தூரத்துக்கு உக்ரைன் படை ஊடுருவியுள்ளது. இதையடுத்து, அவர்கள் மீது 6ஆம் தேதி முதல் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 220 பேரை கொன்றுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது. ஆனால் உக்ரைன் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக சரிந்துள்ளது. கடந்த வாரம் அங்கு ₹35 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சின்ன வெங்காயம், இன்று ₹10க்கு விற்பனையாகிறது. வரத்து அதிகரிப்பால் விலை குறைந்ததாக கூறப்படுகிறது. அதேசமயம், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் இதர பகுதிகளில் கிலோ ₹50-60 வரை விற்பனையாவதால், விரைவில் அனைத்து இடங்களிலும் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.டி ரீஃபண்ட்டுக்காக காத்திருப்பவர்களை குறிவைத்து, டிஜிட்டல் பண மோசடி கும்பல்கள் களமிறங்கி இருப்பதாக தெரிகிறது. ரீஃபண்ட் பெற ஒப்புதல் அளிப்பதாகக் கூறி, கிரெடிட் கார்டு போன்ற தகவலைக் கேட்டு மெசேஜ்களை சிலர் அனுப்புகின்றனர். அதில் உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்தால், கணக்கில் இருந்து பணத்தை உரியவருக்குத் தெரியாமல் திருடி விடுகின்றனர். எனவே, ஐ.டி பெயரில் வரும் மெசேஜ்களை ஓபன் செய்யாமல் இருங்கள். Share It
Sorry, no posts matched your criteria.