India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிக வட்டியுடன் லாபம் தரக்கூடிய 6 முதலீட்டுத் திட்டங்களை தெரிந்து கொள்ளலாம். 1) பங்குகளில் நேரடி முதலீடு செய்வது அதிகபட்ச லாபத்தை தரக்கூடும் 2) மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் முதலீடு செய்வது 3) மத்திய அரசின் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (NPS) முதலீடு செய்வது 4) தங்கம், வெள்ளி பரிமாற்றம், வர்த்தக நிதியில் முதலீடு செய்வது 5) கடன் பத்திரங்கள் மீது முதலீடு 6) ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு
நடிப்பு மட்டுமல்லாமல் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர் இளம் நடிகை ஜான்வி கபூர். அண்மையில், திரைப்பட நிகழ்ச்சியில் அவர் அணிந்திருந்த சிவப்பு நிற ஆர்கன்சா புடவை தற்போது பேசு பொருளாகியுள்ளது. புகழ்பெற்ற டோரனி ஆடையகத்தின் வடிவமைப்பாளர் கரண் டோரனி வடிவமைத்த இந்த சரோஜா ரமணி சேலையின் விலை ₹1.61 லட்சமாகும். பாரம்பரிய முறையில் கையால் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட இந்த ஆர்கன்சா புடவையின் தனிச்சிறப்பாகும்.
சேலைகளை இந்தியப் பெண்களை போல வேறு சில நாடுகளைச் சேர்ந்த பெண்களும் விரும்பி அணிவதை வழக்கமாக வைத்துள்ளனர். அவர்கள் எந்தெந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை காணலாம் * இலங்கைப் பெண்கள் * பாகிஸ்தானியப் பெண்கள் * நேபாளப் பெண்கள் * வங்கதேசப் பெண்கள் *மியான்மர் பெண்கள் * மலேசியப் பெண்கள் * சிங்கப்பூர் பெண்கள். மேற்கண்டவற்றில் இலங்கை போன்ற சில நாடுகளில் சேலை பாரம்பரிய உடையாக உள்ளது.
தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி மழை பெய்யலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. நாளை கோவை, நீலகிரியில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது.
2026 தேர்தலில் மெகா கூட்டணி அமைக்க அதிமுக தயாராகி வருகிறது. அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் சட்டசபைத் தேர்தலில் மெகா கூட்டணி அமைத்து போட்டியிட தீர்மானிக்கப்பட்டது. ஜெயலலிதா காலத்தில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதன்பிறகு கடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜகவுடன் சேர்ந்து போட்டியிட்டு தோல்வியடைந்தது. இதையடுத்து புதிதாக சில கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்க அதிமுக தயாராகி வருகிறது.
நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாக ‘வேட்டையன்’ படக்குழு அறிவித்து ட்விஸ்ட் வைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, அது வேட்டையன் படம் ரிலீஸ் தொடர்பான அறிவிப்பாக இருக்கலாம் என்றும், அக்.10இல் படம் ரிலீஸ் ஆகலாம் எனவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே, சூர்யாவின் ‘கங்குவா’ படமும் அக்.10ல் ரிலீசாக உள்ளது. இந்நிலையில், இரண்டு பெரும் படங்களும் ஒரேநாளில் மோதுமா? என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நெஞ்சு எரிச்சலை அலட்சியமாக கருதக் கூடாதென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மாரடைப்பின் ஆரம்ப அறிகுறியாக நெஞ்சில் எரிச்சல் ஏற்படும் என்றும், நீண்ட நாள் நெஞ்சு எரிச்சல் உள்ளவர்களுக்கு 100-ல் ஒருவருக்கு புற்றுநோயாக மாறக்கூடிய அபாயம் உள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆதலால் அதனை சாதாரணமானது என அலட்சியம் செய்யாமல் உடனே சரி செய்ய சிகிச்சை எடுக்க பரிந்துரைக்கின்றனர். SHARE IT
இந்தியாவில் உள்ள 58% உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கு மாதத்திற்கு ₹20,000-க்கும் குறைவாகவே ஊதியம் வழங்கப்படுவதாக Work India ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன் அறிக்கையில், இந்தியாவில் ப்ளூ காலர் பணியாளர்களில் 29.34% பேர் ₹20K -40K வரையில் சம்பளம் பெறுவதாகக் கூறப்பட்டுள்ளது. இவர்களில் பலர் நிதி சிக்கல்கள் காரணமாக உணவு, சுகாதாரம் & கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.
கருணாநிதி நினைவு நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வெளியிடுகிறார். இதையொட்டி, அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அந்நிகழ்வில் பங்கேற்கின்றனர். இவ்விழா வெற்றியடைய PM மோடி வாழ்த்து கூற, அதற்கு CM ஸ்டாலின் நன்றி தெரிவிக்க என திமுக – பாஜக கடும் இணக்கமாக காணப்படுகின்றன. இதனை விமர்சிக்கும் வகையில், #நீ_சூரியன்_நான்_தாமரை என்ற ஹேஷ்டேக்கை அதிமுகவினர் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
பெண்களுக்கு எதிரான பாலாதிக்க வன்முறைகளை தீவிரவாதத்தின் ஒரு வடிவமாகக் கருத இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. பொது இடங்கள், பணியிடங்கள் & ஆன்லைனில் சிறுமிகள் & பெண்களுக்கு எதிராக ஆபாச & வெறுப்பூட்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுபவர்களை கண்டறிந்து, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அந்நாட்டின் உள்துறை அமைச்சர் கூப்பர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.