India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரபல மலையாள நடிகர் மோகன்லால் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதீத காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் தசைவலி உள்ளிட்ட பாதிப்புகளுக்காக அவர் கொச்சியில் உள்ள அமிர்தா ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு சுவாச தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து, அவரை 5 நாட்கள் ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் மாமியார், நாத்தனார் மீது வரதட்சணை கொடுமை புகார் அளித்தார். அவர்கள் தனக்கு பாலியல் தொல்லை தருவதாகவும் அவர் கூறியிருந்தார். இவ்வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட், மாமியார் மற்றும் நாத்தனார் மீது அப்பெண் கொடுத்த பாலியல் தொல்லை (354 A) வழக்கை ரத்து செய்தது. ஒரு பெண் மீது இன்னொரு பெண் பாலியல் தொல்லை வழக்கு கொடுப்பது செல்லாது எனவும் தெரிவித்தது.
செய்தியுடன் இணைக்கப்பட்ட படத்தில் மர நிழலில் முயல்கள் நிற்கும் காட்சி இருக்கும். இதைப் பார்த்தவுடன் எளிதில் கூறி விட முயலும். ஆனால் இதில் இன்னொரு ட்விஸ்ட் உள்ளது. அதைத்தான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். படத்தில் கண்ணுக்கு புலப்படாமல் எத்தனை முயல்கள் உள்ளன? அந்த முயல்கள் எங்குள்ளன? என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதை கண்டுபிடித்தால் கீழே உங்கள் பதிலை பதிவிடுங்கள். சரியா என பார்க்கலாம்.
உ.பி புலந்த்சாகர் மாவட்டம் அருகே பேருந்தும், டெம்போ வேனும் மோதிய விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், வேனில் பயணித்தவர்கள் தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்பதும், ரக்ஷா பந்தன் பண்டிகையை கொண்டாட அவர்கள் சொந்த ஊர் திரும்பிய சிறிது நேரத்தில் இந்த துயரம் நடந்ததும் தெரியவந்துள்ளது.
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி நடிப்பில் வெளியாகியுள்ள ‘தங்கலான்’ திரைப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ஆக.15ஆம் தேதி ரிலீசான இந்தப்படம் மூன்று நாட்களில் உலகளவில் 53 கோடியே 64 லட்சம் ரூபாய் வசூலித்து உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சர்வதேச வசூல் தொடர்பாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் சார்பில் சிறப்பு போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டு உள்ளது.
நேதாஜி தனது காதல் மனைவி எமிலிக்கு (5 மார்ச் 1936) எழுதிய காதல் கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “என் அன்பே! உறைந்த பனி உருகுவது போல, எனது இதயம் உருகுகிறது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. ஒருவேளை நான் சுடப்படலாம், தூக்கிலிடப்படலாம். இன்று நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ முடியாவிட்டாலும், அடுத்த பிறவியில் உன்னுடன்தான் இருப்பேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
EPF கணக்கில் இருந்து எப்போதெல்லாம் அட்வான்ஸ் எடுக்கலாம் எனத் தெரிந்து கொள்ளலாம்.
* 2 மாதம் வரை வேலை இல்லாமல் இருந்தால் *பணிபுரியும் நிறுவனம் மூடிக் கிடக்கையில் * சொந்த திருமணம் அல்லது மகன், மகள், சகோதரர், சகோதரி திருமணத்திற்காக * தனது உடல்நிலை அல்லது குடும்ப உறுப்பினர் உடல்நிலை பாதிக்கப்படுகையில் * கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் * ஓய்வுக்கு பின்பு அல்லது 54 வயத்திற்குப் பிறகு. SHARE IT
திருப்பூரில் தவெக கொடி தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ஆக.22இல் கட்சிக்கொடியை விஜய் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் அறிமுகப்படுத்தியதும், அனைத்து மாவட்ட கட்சி அலுவலகங்களிலும் கொடி ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, செப்டம்பரில் விக்கிரவாண்டியில் தவெக முதல் மாநாடு நடக்கிறது. இதனால், மாநாட்டிற்கு செல்வோர் கட்சிக்கொடியுடன் செல்லும் வகையில் ஏற்பாடுகள் நடக்கின்றன.
இந்திய விடுதலைக்கு படை கட்டிய வங்கச் சிங்கம் சுபாஷ் சந்திரபோஸின் (விமான விபத்தில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட) 79வது நினைவு நாள் இன்று. ‘ரத்தத்தை தா! விடுதலைப் பெற்றுத் தருகிறேன்’ என முழங்கிய நேதாஜியின் INA படைக்கு பொன்னும் பொருளும் மட்டுமல்ல உயிரையும் தமிழர்கள் கொடுத்தனர். அடிமைகளின் உடம்பில் வலிமையை செலுத்த அவரின் நினைவுநாளில், அவருடன் களம் கண்ட தமிழ்ப் போராளிகளையும் நினைவில் ஏந்துவோம்.
ஜார்க்கண்ட் முன்னாள் CM சம்பாய் சோரன் டெல்லியில் முகாமிட்டுள்ளார். ஏற்கெனவே, தனது ஆதரவு MLAக்களுடன் பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படும் நிலையில், அவர் டெல்லிக்கு வந்துள்ளார். எனினும், சொந்த வேலைகளுக்காக வந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். ED கைது காரணமாக ஹேமந்த் சோரனுக்கு பதிலாக 5 மாதம் சம்பாய் சோரன் CM பதவி வகித்தார். தொடர்ந்து, அவர் பிணையில் வந்ததும் பதவி பறிபோன அதிருப்தியில் இருந்ததாக தெரிகிறது.
Sorry, no posts matched your criteria.