India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மண்டபம் – ராமேஸ்வரத்தை இணைக்கும் வகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலத்தை பிரதமர் மோடி அக்.2 ஆம் தேதி திறந்து வைக்கிறார். இதற்காக சென்னை வரும் பிரதமர் மோடி, பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய பாம்பன் ரயில்வே பாலம் திறந்து வைக்கப்பட உள்ளதால், 22 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயில் சேவை மீண்டும் தொடங்க உள்ளது.
அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி வாஷிங்டனில் நடைபெற்ற கூட்டத்தில், இந்தியாவில் ஒரு சீக்கியர் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுவாரா அல்லது குருத்துவாராவுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவாரா என்பதற்கே சண்டை நடக்கிறது எனப் பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவின் சீக்கிய அமைப்பினர் டெல்லியில் உள்ள ராகுலின் வீட்டை முற்றுகையிட்டு, அவர்மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெயரிலேயே பொன்னை வைத்திருக்கும் பொன்னாங்காணி, நலத்தை வாரி வழங்கும் தாவர தங்கம் என்று அகத்தியர் குணவாகடம் கூறுகிறது. லூபியோல், காம்பஸ்டீரால், ஸ்டிக்மாஸ்டீரால் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள இந்தக் கீரையை வேக வைத்து வெண்ணெய்யில் குழைத்து, வெறும் வயிற்றில் காலை வேளையில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், முகப்பூச்சுகளின் ஆதரவின்றிப் பளபளப்பான தேகம் மின்னும்.
இந்த ஆண்டில் (2024) இதுவரை அனைத்து வடிவ போட்டிகளிலும் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் முதல் 10 இடங்களில் ஜெய்ஸ்வால் (1033), ரோஹித் (990), கில் (821) ஆகியோர் 3, 4 மற்றும் 9ஆவது இடத்தை பிடித்துள்ளார். இலங்கை வீரர்கள் நிசங்கா (1135), BKG மெண்டிஸ் (1111) முதல் 2 இடங்களில் உள்ளனர். ரூட் 5, ரிஸ்வான் 6, PHKD மெண்டிஸ் 7, ஜர்டான் 8, நிசாகத் கான் 10 ஆகிய இடங்களில் உள்ளனர்.
நடந்து முடிந்த குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களில் கூடுதலாக 480 காலி இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. ஏற்கெனவே, 6,224 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஜூன் 9ம் தேதி நடைபெற்றது. புதிய அறிவிப்பால் காலியிடங்களின் எண்ணிக்கை 6,224ல் இருந்து 6,704ஆக உயர்கிறது. இத்தேர்வுக்கான முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
X-Blade பைக்கை தங்களுடைய அதிகாரப்பூர்வ வலைத்தளப் பக்கத்தில் இருந்து ஹோண்டா நிறுவனம் நீக்கியுள்ளது. அந்நிறுவனம் இந்திய சந்தையில் X-Blade பைக் விற்பனையை நிறுத்த இருப்பதாலேயே நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. 2018இல் அறிமுகப்படுத்தப்பட்ட X-Blade பைக்கானது மற்ற 160CC மோட்டார் பைக்குகளைப் போல இளைஞர்களை பெரியளவில் ஈர்க்கவில்லை என்றே கூறலாம். இதற்கு அதன் விற்பனை எண்ணிக்கையே சாட்சி.
வீட்டு வாசலில் தொங்க விடப்பட்டிருக்கும் படிகாரம் உள்ளிட்டவை திருஷ்டிக்கானவை அல்ல. உண்மையில் இதை உலகின் முதல் First Aid கிட் என்றே சொல்லலாம். அக்காலத்தில், பாம்பு கடித்துவிட்டால் விஷம் வேகமாக ஏறாமலிருக்க படிகாரத்தை நீரில் கரைத்துக் கொடுப்பர். ஒருவேளை அவர்கள் சுய நினைவை இழந்தால் மிளகாய் & எலுமிச்சையை நெருப்பில் போட்டுப் புகைப்பர். இதன் மூலம் உயிராபத்தில் இருந்து பாதிக்கப்பட்ட நபரை காக்க முடியுமாம்.
வார இறுதி நாள்கள், முகூர்த்தம், மிலாது நபி என தொடர் விடுமுறையை முன்னிட்டு 1,515 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. கும்பகோணம், தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து சென்னைக்கு 540 பேருந்துகளும், கோவை, மதுரை ஆகிய இடங்களில் இருந்து 250 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படுகின்றன. இதேபோல், சென்னையில் இருந்து பிற பகுதிக்கும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
பகலில் படிப்பதை விட இரவில் படிப்பதால் செல்போன் பயன்பாடு, வீட்டு சத்தம், சமூக வலைதளம் போன்றவற்றிலிருந்து கவனச்சிதறல் சற்று குறைவாக இருக்கும். பகலில் இருக்கும் வேலைகளும் சிந்தனைகளும் இரவில் குறைவாக இருப்பதால் புதுமையான யோசனைகளும் தோன்றும். தூங்குவதற்கு முன்பு மூளை அனைத்தையும் நினைவுகூரும் அப்போது படிப்பதை நினைவில் எளிதாக வைத்துக்கொள்ளும். இரவில் படிப்பது பகல் நேரத்தையும் மிச்சப்படுத்தும்.
சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்துள்ள பேட்டியில், விஜய் அரசியல் குறித்தான கேள்விக்கு, ” விஜய்க்கு திரையுலகில் செல்வாக்கு இருக்கிறது. ஆனால் அரசியல் களம் என்பது வேறு, இதற்கு முன் அவர் மக்கள் பிரச்னைகளில் எந்த ஈடுபாடும் காட்டியதில்லை. மக்களுடன் நெருக்கமான தொடர்பும் அவருக்கு கிடையாது. என்ன தாக்கத்தை அவர் ஏற்படுத்துவார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” எனப் பதிலளித்தார்.
Sorry, no posts matched your criteria.