news

News August 18, 2024

நிறைவான வாழ்க்கைக்கான சில டிப்ஸ்

image

பணம், பொருளைத் தாண்டி நிறைவான வாழ்க்கைதான் மிகவும் அவசியம். அதற்கு நீங்கள் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். *எப்போதும் பாசிடிவ் வைஃபோடு இருக்கும் மனிதர்களோடு அதிகம் பழகுங்கள். *சோகத்தை விட்டொழித்து, உற்சாகமாக இருங்கள். *உங்கள் வலிமையை உணர்ந்து செயலாற்றுங்கள். மதிப்புமிக்கவராக உணருங்கள். *உங்களை நீங்களே நேசியுங்கள். *பயணப்படுங்கள். முடிந்தால், நீண்ட நெடுந்தூரம் பயணம் செய்யுங்கள்.

News August 18, 2024

DGCGI தலைமை இயக்குநர் காலமானார்

image

இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குநர் ராகேஷ் பால், நெஞ்சுவலியால் உயிரிழந்தார். கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழாவுக்கான சென்னை வந்த ராஜ்நாத், கடலோர காவல் படையின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். அதற்கான ஏற்பாடுகளை செய்ய சென்னை வந்திருந்த ராகேஷ் பால்-க்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து ராஜீவ்காந்தி அரசு ஹாஸ்பிடலில் அட்மிட்டான நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News August 18, 2024

சிவ்தாஸ் மீனாவுக்கு புதிய பொறுப்பு!

image

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 2023-ம் ஆண்டு ராஜஸ்தானை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சிவ்தாஸ் மீனா, தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக பணியாற்றி வரும் சிவ்தாஸ் மீனாவுக்கு, தற்போது ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

News August 18, 2024

அந்த நேரத்தில் மட்டும் ராக்கி கட்டாதீர்கள்

image

இலங்கையை ஆண்ட தமிழ்ப்பேரரசர் ராவணனுக்கு அவனது தங்கை சூர்ப்பனகை மங்கள கயிறு கட்டி (ராக்கி), வணங்கிய நாளே ரக்ஷாபந்தன் எனக் கொண்டாப்படுகிறது. சகோதர சகோதரிகளுக்கு இடையிலான பிணைப்பின் சின்னமான அவ்விழா நாளை (ஆக. 19) நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இருப்பினும், ராமனால் ராவணன் கொல்லப்பட்ட பத்ரர் காலத்தில், (10:53 AM – 12:37 PM) ராக்கி கட்டக் கூடாது என சாஸ்திரம் கூறுகிறது. >SHARE IT

News August 18, 2024

சிறு வயதில் மர்ம நபரால் அவமதிப்பு: சிம்பு ஹீரோயின்

image

சிம்புவின் சிலம்பாட்ட பட ஹீரோயினான செலினா ஜெட்லி, கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். பள்ளி மாணவி காலத்தில் ரிக்ஷா வண்டிக்காக தாம் காத்திருந்தபோது, மர்ம நபர் ஒருவர் அவரின் அந்தரங்க உறுப்பை தன்னிடம் காட்டி அவமதித்ததாகக் கூறியுள்ளார். தனது கவனத்தை ஈர்க்க மாணவர்கள் சில நேரம் கற்களை எறிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News August 18, 2024

கட்சியினரை தூண்டிவிடுவது தான் என் வேலையா?

image

தன்னை பற்றி அவதூறாக பேச நாதக கட்சியினரை சீமான் தூண்டிவிடுவதாக திருச்சி எஸ்.பி. வருண்குமார் புகார் அளித்தார். இதன்பேரில் சீமான் மீது வழக்கு பதிவாகியுள்ளது. இதுகுறித்து பேசிய சீமான்,”கட்சியினரை தூண்டுவதுதான் என் வேலையா? என் பிள்ளைகள் இப்படி செய்ய மாட்டார்கள். முன்பு தேவையற்ற கருத்துகளை பேசியதற்காக தளபதி சாட்டை துரைமுருகனையே நீக்கியிருக்கிறேன்” எனக் கூறினார்.

News August 18, 2024

சொல்ல முடியாத மகிழ்ச்சியில் CM ஸ்டாலின்

image

தனது உணர்வுகளை எப்படி விவரிப்பது என்று சொல்ல முடியாத மகிழ்ச்சியில் இருப்பதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழாவில் பேசிய அவர், நாணயமிக்க தலைவருக்கு நாணயம் வெளியிடப்படுவது மிகவும் பொருத்தமானது என்றார். கலைஞர் நூற்றாண்டு நினைவு ₹100 நாணயத்திற்கு அனுமதியளித்த மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் அவர் நன்றி கூறியுள்ளார்.

News August 18, 2024

23ம் தேதி TNPSC குரூப் 3 தேர்வு 4ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு

image

TNPSC குரூப் 3 தேர்வு 4ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து TNPSC வெளியிட்ட செய்திக் குறிப்பில், குரூப் 3 எழுத்துத் தேர்வு 2023 ஜனவரியில் நடந்ததாகவும், ரிசல்ட் 2023 ஆகஸ்டில் வெளியானதாகவும் கூறப்பட்டுள்ளது. பிறகு, 3 கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துள்ளதாகவும், 4ம் கட்ட சரிபார்ப்பு பிராட்வேயில் உள்ள TNPSC அலுவலகத்தில் நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 18, 2024

கருணாநிதியின் நினைவு நாணயம் வெளியீடு

image

மறைந்த திமுக தலைவரும், Ex முதல்வருமான கருணாநிதியின் நினைவு நாணயத்தை, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கருணாநிதி உருவம் பொறித்த ₹100 நாணயத்தை அவர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், CM ஸ்டாலின், உதயநிதி உள்பட அனைத்து திமுக அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்களான வைகோ, திருமாவளவன், செல்வப்பெருந்தகை, முத்தரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

News August 18, 2024

பாதுகாப்பு இல்லாதபோது கடமையை எப்படி செய்வார்கள்?

image

பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் விரைவில் நீதி கிடைக்க வேண்டுமென ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார். WB அரசுக்கு கடிதம் எழுதியுள்ள அவர், மருத்துவர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழலில் அவர்கள் கடமையை அர்ப்பணிப்புடன் செய்வார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும்? எனவும், குற்றவாளிகளுக்கு கொடூரமான தண்டனை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். நடவடிக்கைக்கான நேரமிது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!