India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சுப்ரீம் கோர்ட்டில் ஜூனியர் கோர்ட் அட்டெண்டண்ட் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். 80 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. தகுதி: 10-ம் வகுப்பு, குறைந்தபட்சம் ஓராண்டு கேட்டரிங் டிப்ளமோ படிப்பு. 3 ஆண்டு பணி அனுபவம்.
வயது வரம்பு: 18 முதல் 27 வரை. தேர்வாகிறவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.46,000 வழங்கப்படும். http://www.sci.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
ரயில் டிக்கெட் முன்பதிவு 120 நாள்களுக்கு முன்பு தொடங்குவது வழக்கம். அதன்படி, ஜனவரியில் வரும் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு இன்று காலை தொடங்குகிறது. ஜனவரி 10ம் தேதி பயணிப்போர் இன்றும், ஜன.11ம் தேதி பயணிப்போர் நாளையும், ஜனவரி 12ம் தேதி பயணிப்போர் வரும் 14ம் தேதியும், ஜனவரி 13ம் தேதி பயணிப்போர் வரும் 15ஆம் தேதியும் IRCTC இணையதளம், ரயில் டிக்கெட் மையங்களில் முன்பதிவு செய்யலாம்.
சிலருக்கு அடிக்கடி கை, கால் மரத்துப் போய்விடும். அவர்களுக்கான சூப்பர் டிப்ஸ்: வால் மிளகு, சீரகம், ஓமம் ஆகியவற்றை அரை ஸ்பூன் எடுத்து, அதனுடன் 2 சிறு துண்டு பட்டை சேர்த்து மிதமாக இடிக்க வேண்டும். அதை பாத்திரத்தில் போட்டு, ஒன்றரை கிளாஸ் நீர் ஊற்றி, ஒரு கிளாஸாக வரும் வரை சுட வைக்க வேண்டும். பிறகு அந்த நீரை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மரத்து போதல் பிரச்னை ஓடிவிடும்.
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 17ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியின் சில பகுதிகளிலும் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. சென்னையின் சில இடங்களில் இன்று இடி மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. SHARE IT
சிவகங்கையில் அமைச்சர் உதயநிதி நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருப்பத்தூரில் உள்ள ஒரு பகுதியில் புதர் மண்டி கிடப்பதாக ஒருவர் அளித்திருந்த மனு பற்றி பிடிஓ அதிகாரி சோமதாஸிடம் உதயநிதி கேட்டார். அதற்கு அவர், அந்த இடம் சுத்தப்படுத்தப்பட்டதாக கூறினார். பின்னர், போனில் உதயநிதி விசாரிக்கையில், அதிகாரி கூறியது பொய் என தெரியவந்தது. இதையடுத்து, சோமதாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கடந்த 2005-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி இந்திய திரையுலகையே கலக்கிய படம் அந்நியன். அம்பி, ரெமோ, அந்நியன் என 3 கதாபாத்திரங்களில் விக்ரம் மிரட்டி இருப்பார். இந்நிலையில், இப்படத்தை ரன்வீர் சிங்கை வைத்து இந்தியில் ரீமேக் செய்கிறார் சங்கர். இதற்காக ரன்வீர் சிங்குக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் விக்ரம், தன்னை வைத்து அந்நியன் 2 படத்தை ஷங்கர் இயக்கினால் நன்றாக இருக்கும் எனக் கூறினார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானையான பார்வதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அதற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கோயிலில் தற்போது நடைபெற்று வரும் ஆவணி மூலத்திருவிழாவில் பார்வதி யானை கலந்து கொள்ளவில்லை. இதுபற்றி விசாரித்த போது, கடும் வயிற்றுப்போக்கால் யானை அவதிப்படுவதாகவும், அதற்கு மருத்துவர்கள் குளுக்கோஸ் ஏற்றி தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் கோயில் நிர்வாகத்தினர் கூறினர்.
குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்களை வாங்கி தரும் பெற்றோர்கள், ஒரு விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதுதான் அதில் உள்ள பேட்டரி. பெரிய சைஸ் பேட்டரிகளை விட, பட்டன் பேட்டரிகளை குழந்தைகள் அதிகம் விழுங்குகின்றன. அப்படி விழுங்கும் போது, இந்த பேட்டரிகள் வெடித்து 3 வோல்ட் மின்சாரம் வெளியாகி குழந்தைகளின் உணவுக் குழாயையும், குடலையும் கடுமையாக சேதப்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இன்று (செப். 12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
ஒருகாலத்தில் குதிரை, மாட்டு வண்டிகளே போக்குவரத்துக்கு பயன்பட்டு வந்தன. இதனால் சேறு, சாக்கடை, கழிவுகள் என பலவற்றை அவை மிதிக்க நேரிடும். இதனால் அவற்றின் கால்களில் புண்கள் ஏற்பட்டு, நடக்க முடியாமல் போய்விடும். இதனை தவிர்ப்பதற்காக, கிருமி நாசினியான எலுமிச்சை பழத்தின் மீது அந்த விலங்குகளை மிதிக்க வைப்பார்கள். இதுவே காலப்போக்கில் புதிய வண்டியை எலுமிச்சை பழத்தின் மீது ஏற்றும் பழக்கமாக மாறியது.
Sorry, no posts matched your criteria.