India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நேபாளத்தில் காட்டில் மாயமான 3 இந்திய சுற்றுலாவாசிகள் 10 மணி நேரத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டனர். நிதின், ராஷ்மி, தனிஷ் மற்றும் அவர்களது நேபாள வழிகாட்டி ஹரி பிரசாத் காரேல் ஆகியோர் நாகர்கோட் வனப்பகுதியில் கடந்த சனிக்கிழமை 3 மணி அளவில் மாயமாகினர். இதையடுத்து போலீசுடன் இணைந்து உள்ளூர் மக்கள் தேடுதல் வேட்டையை தொடங்கினர். 10 மணி நேர தேடுதலுக்கு பிறகு நால்வரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தனது அலுவலகத்தில் ‘விருமாண்டி’ படத்தின் கமல்ஹாசன் போஸ்டர் வைக்கப்பட்டுள்ளதாக நடிகர் நானி தெரிவித்துள்ளார். இந்த படம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், இதில் வரும் Court காட்சியில் தூக்கத்தில் இருந்து எழுந்து கமல் நடிப்பது போன்று வரும் காட்சியில் உண்மையாக தூங்குவது போலவே நடித்திருப்பார் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த காட்சியை அவர் எப்படி நடித்தார் என்றே தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: நீத்தார் பெருமை ▶குறள் எண்: 27 ▶குறள்: சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு. ▶பொருள்: ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்.
வங்கதேசத்தில் வன்முறை காரணமாக கடந்த ஜூலை 17 முதல் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்டன. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் வருகையால் தலைநகர் டாக்காவில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வங்கதேசத்தில் ஞாயிறு முதல் வியாழன் வரை வேலை நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் செப். 11 முதல் தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பணியிடங்களை Lateral Entry மூலம் நேரடி நியமனம் செய்யும் முறையை காங்., தலைமையிலான UPA அரசு தான் கொண்டு வந்ததாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது UPSC மூலம் வெளிப்படைத் தன்மையுடன் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, 45 பணியிடங்களுக்கான நேரடி நியமனம் குறித்த அறிவிப்பு இட ஒதுக்கீட்டை பறிக்கும் செயல் என ராகுல் காந்தி விமர்சித்து இருந்தார்.
தோனி தனது அண்ணனும் அல்ல, நண்பனும் அல்ல. அவர் தனது குரு என இந்திய வேகப்பந்து வீச்சாளர் கலீல் அஹமத் தெரிவித்துள்ளார். ஜாஹிர் கானைப் பார்த்து முதல் ஓவர் வீசும் பவுலராக ஆக வேண்டும் என சிறுவயதில் நினைத்ததாகவும், தான் அறிமுகமான ஆசிய கோப்பை தொடரில் AFG-க்கு எதிரான போட்டியில் தன்னை நம்பி முதல் ஓவர் வீச தோனி சொன்னதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அவருடைய நம்பிக்கையை பெற்றது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
அமீர் கான் நடிப்பில் புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், பான் இந்தியா படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. முன்னதாக, லோகேஷ், நெல்சன், சந்தீப் ரெட்டி வங்கா ஆகியோர் வன்முறையை மட்டுமே நம்பி படம் எடுத்து வருவதாக அமீர் கான் விமர்சித்து இருந்தார்.
பெங்களூருவில் Lift கேட்ட பெண் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. நேற்று நள்ளிரவில் சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சாலையின் அருகே அரை நிர்வாணத்தில் பெண் கிடந்ததாக தெரியவந்துள்ளது. இரவில் எப்போது ஒரு பெண் தனியாக நடந்து செல்ல முடிகிறதோ அன்றுதான் உண்மையான சுதந்திரம் என்றார் மகாத்மா காந்தி. 78ஆவது சுதந்திர தினம் முடிந்த 4 நாள்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
EPS-ஐ எந்த லிஸ்டில் சேர்ப்பது என்று புரியவில்லை என ஆ.ராசா தெரிவித்துள்ளார். கலைஞர் நாணயத்தில் இந்தி எழுத்து ஏன் இருக்கிறது என்று EPS கேட்பதால் அவருக்கு என்ன ஆச்சு என்ற கவலை அதிகரிப்பதாகவும், இந்திய நாணயங்களில் ஆங்கிலமும், இந்தியும் இருப்பது வழக்கம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் MGR-க்கு வெளியிடப்பட்ட நாணயத்திலும் இந்தி எழுத்துகள் இருப்பது கூடவா அவர் அறியவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று (ஆகஸ்ட் 19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Sorry, no posts matched your criteria.