India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக அரசின் தலைமைச்செயலாளர் (C.S.) சிவ்தாஸ் மீனா அக். மாதம் ஓய்வு பெறவுள்ள நிலையில், அடுத்து அந்த பதவியில் யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சிவ்தாஸ் மீனாவுக்கு RERA தலைவராக புது பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் C.S. பதவியில் ஓய்வு பெற்றாலும், RERA தலைவராக நீடிக்க முடியும். C.S. பதவியில் CM ஸ்டாலினின் செயலாளர் முருகானந்தம் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
ஏழை, நடுத்தர மக்கள் வீடு, மனைகளை தவணை முறையில் வழங்கும் நடைமுறையை கைவிட Housing Board முடிவு செய்துள்ளது. தவணை முறையில் வீட்டுக்கான தொகையை வசூலிப்பதில் பல பிரச்னைகள் நிலவுவதுடன், வாரியத்திற்கு ஏற்படும் கூடுதல் செலவால், வீட்டின் விலையை உயர்த்த வேண்டியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் விற்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
திரைப்படங்களில் நடிகர், நடிகைகளை பாட வைத்தாக வேண்டுமென அழுத்தம் கொடுக்கப்படுவதாக இசையமைப்பாளர் டி.இமான் மனம் திறந்து பேசியிருக்கிறார். Chennai City Gangsters இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், “இந்தப் படத்திற்கு இசையமைத்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. காரணம், முறையாக சங்கீதம் கற்ற, பயிற்சி பெற்ற பின்னணி இசைப் பாடகர்கள் இப்படத்தின் பாடல்களை பாடியிருக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.
வயநாடு நிலச்சரிவில் உயிர் பிழைத்தவர்களுக்கு, அரசு வழங்கிய நிவாரணத் தொகையில், கேரள கிராம வங்கியில் கடன் வாங்கியவர்களிடம் மாதத் தவணை பிடித்தம் செய்திருப்பது, மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மிகவும் கொடூரமான நடவடிக்கை என, அம்மாநில அமைச்சர் வாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். மாநில அளவிலான வங்கி அதிகாரிகள் குழுவிடம் இது தொடர்பாக முறையிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆவணி பவுர்ணமி நாளான இன்று திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கி.மீ. தூரம் மலையை கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவார்கள். இந்த கிரிவலத்துக்கு உகந்த நேரம் எது என தெரிந்து கொள்ளலாம். இன்று அதிகாலை 2.58 மணிக்கு தொடங்கி நாளை அதிகாலை 1.02 மணி வரை பவுர்ணமி உள்ளது. ஆதலால் இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்பதியில் முக்கிய இடங்களில் இடம்பெற்றிருக்கும் தர்ம தரிசனம் குறித்த அறிவிப்பு பலகை ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கில் மட்டுமே இருப்பதால் தமிழ் பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். தெலங்கானா அமைச்சர்கள் கொடுக்கும் சிபாரிசு கடிதங்களை கொண்டு வருபவர்களுக்கு VIP தரிசனம், தங்குமிடம் சுலபமாக கிடைப்பதாகவும், ஆனால் தமிழக அமைச்சர்களின் சிபாரிசு கடிதங்களை வாங்கவே மாட்டார்கள் எனவும் கூறுகின்றனர்.
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று RMC தெரிவித்துள்ளது. கோவை நீலகிரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல்லில் கனமழை பெய்யும் என்றும் கூறியுள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
➤ஒரு ரீசார்ஜில் 4 மொபைல் இணைப்புகளை பயன்படுத்தும் திட்டத்தை AIRTEL அறிமுகம் செய்துள்ளது. ➤விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 10 அடிக்கு மேல் சிலை வைக்கக் கூடாது என டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். ➤வயநாடு நிலச்சரிவு தொடர்பான அதிர்ச்சியூட்டும் புதிய CCTV வீடியோ வெளியாகியுள்ளது. ➤முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாணயத்தை, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.
பாகற்காய் சாப்பிடும் போது சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். முள்ளங்கியுடன் பாகற்காயை சேர்த்து சாப்பிட்டால் வயிறு சார்ந்த பிரச்னைகள், வாந்தி ஏற்படும். பாகற்காயை சாப்பிடுவதற்கு 1 மணி நேரம் முன்பும், பின்பும் பால் சாப்பிட்டால் வயிறு சார்ந்த பல பிரச்னைகளை ஏற்படுத்தும். மேலும், மாம்பழம், வாழைப்பழம், இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சேர்த்தும் சாப்பிட கூடாது.
அமெரிக்காவில் 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 1973ஆம் ஆண்டில் நினா பிஸ்செர் என்ற பெண்மனி பலாத்காரம் செய்யப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், டிஎன்ஏ மாதிரிகளின் அடிப்படையில் மைக்கெல் (75) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை நடந்த போது அந்த பெண்ணுக்கு 31 வயதானதும், விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் வழக்கு உறைந்ததும் தெரியவந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.