India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தின் 50ஆவது புதிய <<13888247>>C.S.<<>>ஆக CM ஸ்டாலினின் செயலாளர் முருகானந்தம் நியமிக்கப்பட உள்ளதாகவும், இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையைச் சேர்ந்த முருகானந்தம், இதற்கு முன்பு, போக்குவரத்து, பொதுப்பணி, நகர- ஊரக மேம்பாட்டுத் துறைகளில் பணிபுரிந்துள்ளார். ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்றதும் முதலில் நிதி செயலாளராக நியமிக்கப்பட்டார்.
பொருளாதாரக் கொள்கைகளை மேம்படுத்துவதில் இந்தியா பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாக
வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 1960களில் இருந்து காலாவதியான கட்டமைப்பு & நிலையற்ற உணவு விலை நிர்ணய பணவீக்க இலக்குகள் நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பதாக அவர்கள் முன்வைத்துள்ள கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவைதான். வேளாண்துறை வளர்ச்சி & முதலீட்டை அதிகரிக்க பணவியல் கொள்கையில் ஏற்ற மாற்றுக் கொள்கையை அரசு வகுக்குமா?
கிருஷ்ணகிரியில் 13 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், நாதகவில் முக்கிய பதவியில் இருந்த சிவராமன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். என்.சி.சி. முகாமில் பங்கேற்ற மாணவியை வன்கொடுமை செய்ததாக பெற்றோர் புகார் அளித்ததால், அவர் கோவையில் பதுங்கியிருந்தார். இதனையடுத்து, சிவராமனை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை நடந்து வந்த நிலையில், நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விஜய் கட்சியுடன் நாதக கூட்டணி அமைக்குமா என்பது குறித்து சீமான் பதிலளித்துள்ளார். விஜய்யின் தவெக கட்சியுடன் சீமானின் நாதக கட்சி கூட்டணி அமைக்கக்கூடும் என கடந்த சில மாதங்களாகவே தகவல் வெளியாகி வருகிறது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த நாதக தலைவர் சீமான், விஜய் செப்டம்பரில்தான் அரசியல் கட்சியை ஆரம்பிக்கிறார் என்றும், கூட்டணி குறித்து விஜய்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தேசத்துக்காக பாடுபட்டவர்கள், நாட்டின் முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை கவுரவப்படுத்த மத்திய அரசு நினைவு நாணயம் வெளியிடுகிறது. அந்த நாணயம், மும்பை, கொல்கத்தா, நொய்டா, ஹைதராபாத்தில் உள்ள நாணய தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகின்றன. 1964ஆம் ஆண்டில் நேருவுக்கு முதன்முதலில் நினைவு நாணயம் வெளியிடப்பட்டது. 2ஆவதாக தேசப்பிதா மகாத்மா காந்திக்கு 1969இல் நினைவு நாணயம் வெளியிடப்பட்டது.
மருத்துவர்கள், IT பொறியியலாளர்களை குறிவைத்து, டார்க் வெப் டிஜிட்டல் பண மோசடி கும்பல்கள் களமிறங்கி இருப்பதாக தெரிகிறது. தொழில் பயன்பாட்டு மின்னஞ்சல், வாட்ஸ் ஆப்பில் லிங்க் வழியே ஆபாசப்படங்களை அனுப்புகின்றனர். பின்னர், சைபர் போலீசார் எனக் கூறி, ‘டாப் சீக்ரெட்’ போலி கைது ஆணைகளை அனுப்பி, அபராதம் என்ற பெயரில் முகந்தெரியா கும்பல் பணம் வசூலிக்கிறது. எனவே எச்சரிக்கையாக இருங்கள். >Share It
சரிந்துவரும் செல்வாக்கை மேம்படுத்தவும், DMKக்கு எதிராக வலுவான ஒரு கூட்டணியை கட்டமைக்கவும் வேண்டிய நிர்பந்தம் ADMKவுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கூட்டணியில் நாதக, விஜய்யின் தவெக, பாமகவை இடம்பெற வைக்குமாறு மூத்த நிர்வாகிகள் EPS-யிடம் முறையிட, அவரும் அதற்கு பச்சைக்கொடி காட்டியதாக தெரிகிறது. இதையடுத்து மூத்த தலைவர்கள் சிலர் சீமான், விஜய்யுடன் பேச்சு வார்த்தையை தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
MBBS, BDS படிப்புகளில் அரசு மற்றும் நிர்வாக இடஒதுக்கீட்டில் சேருவதற்கான ரேங்க் பட்டியல் இன்று வெளியிடப்படவுள்ளது. நீட் நுழைவுத் தேர்வை 1.53 லட்சம் பேர் எழுதினர். இதில் 89,198 பேர் தேர்வான நிலையில், மருத்துவப் படிப்புகளில் சேர 42,951 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் 21ஆம் தேதி தொடங்கவுள்ளது. தமிழகத்தில் 9,050 MBBS, 2,200 BDS இடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி கிடைக்காததால் செல்வப்பெருந்தகையை விமர்சிப்பதாக கூறப்படுவது குறித்து கார்த்தி சிதம்பரம் (K. C) விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், மாநில தலைவர் பதவிக்கு தாம் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்று கூறினார். 3 ஆண்டுக்கு செல்வப் பெருந்தகை தலைவராக செயல்படுவார். அவர் நன்றாக செயல்படுகிறார் என்று K. C. குறிப்பிட்டார்.
தமிழகத்தில் இதுவரை யார்- யாருக்கு, எப்போது நினைவு நாணயம் வெளியிடப்பட்டது என தெரிந்து கொள்ளலாம். * திருவள்ளுவருக்கு ₹5, ₹2, ₹1 நாணயம் (1995) * காமராஜருக்கு ₹100, ₹5 (2004) * அண்ணாவுக்கு ₹100, ₹5 (2009) * சி. சுப்ரமணியத்துக்கு ₹100, ₹5 (2010) * தஞ்சை பெரிய கோயிலுக்கு ₹1000, ₹5 (2010) *எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு ₹100, ₹10 (2017) * எம்ஜிஆருக்கு ₹100, ₹5 (2017) *கருணாநிதிக்கு ₹100 (2024).
Sorry, no posts matched your criteria.