news

News August 19, 2024

ஆளுநர் ரவி அவசர டெல்லி பயணம்

image

ஆளுநர் ரவி இன்று மாலை அவசரமாக டெல்லி புறப்பட்டுச்செல்கிறார். அவரது பதவிக்காலம் ஜூலை 31ல் நிறைவடைந்தது. பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில், இதுவரை அறிவிப்பு வரவில்லை. தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமனம் செய்யப்படாததால், அவரே தொடர்ந்து ஆளுநராக இருக்கிறார். இந்நிலையில், பதவி நீட்டிப்பு குறித்து டெல்லியில் மோடி, அமித்ஷாவை ஆளுநர் ரவி சந்தித்துப்பேச இருப்பதாகக் கூறப்படுகிறது.

News August 19, 2024

2025 IPL தொடரில் தோனி விளையாடுவாரா?

image

CSK வீரர் தோனி 2025 IPL தொடரில் Uncapped Playerஆக விளையாடுவார் என தகவல் வெளியானது. இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அந்த அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், “Uncapped Player விதியை மீண்டும் கொண்டுவர எங்கள் தரப்பில் இருந்து BCCI-யிடம் கோரிக்கை எதுவும் முன்வைக்கப்படவில்லை” என பதிலளித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று 5 ஆண்டுகள் ஆன வீரரை, Uncapped Player ஆக தக்க வைக்க முடியும்.

News August 19, 2024

அக்.10இல் வேட்டையாட வருகிறான் “வேட்டையன்”

image

ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள “வேட்டையன்” திரைப்படம் அக்.10இல் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான சிறப்பு போஸ்டரில் போலீஸ் கெட்டப்பில் செம மாஸாக ரஜினி இருக்கிறார். மேலும், போஸ்டரில் “WE WANT JUSTICE” என்ற வாசகத்துடன் நீதி கேட்டு வீதியில் இறங்கி மாணவர்கள் போராடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை லைகா தயாரிக்கிறது.

News August 19, 2024

ஆளுநர் முடிவுக்கு எதிராக கர்நாடக அரசு வழக்கு

image

கர்நாடக CM சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதித்த ஆளுநரின் முடிவுக்கு எதிராக, அம்மாநில அரசு இன்று ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கிறது. மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் நிலம் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில், சித்தராமையா மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்த, ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கு எதிராக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட உள்ளது.

News August 19, 2024

BREAKING: புதிய தலைமை செயலாளராக முருகானந்தம்

image

தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக IAS அதிகாரி முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்தவரும், பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டதாரியான முருகானந்தம் 1991ஆம் ஆண்டில் இந்திய குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர். தமிழக அரசின் பல்வேறு பொறுப்புகளில் இருந்த அவர், முதல்வரின் தனிப்பிரிவுச் செயலாளராகவும் இருந்தவர். இந்நிலையில், அவர் தலைமைச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

News August 19, 2024

கைதி-2 படப்பிடிப்பு எப்போது தொடங்கும்?

image

கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் 2ஆம் பாகம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. வசூல் ரீதியில் பிரமாண்ட வெற்றிபெற்ற ‘கைதி’ படம் வெளிவந்தபோதே அதன் 2ஆம் பாகம் உருவாகும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார். ஆனால், அவர் தொடர்ந்து மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி போன்ற படங்களை இயக்குவதில் பிசியாக இருந்ததால் ‘கைதி-2’ எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது.

News August 19, 2024

Googlejob: டாப்பில் தமிழ்நாடு

image

வேலைக்கு ஆட்கள் எடுப்பதில் கூகுள் முன்னுரிமை அளிக்கும் டாப் 10 இந்திய கல்லூரிகளில் 4 தமிழ்நாட்டை சேர்ந்தவை. கூகுள் வேலை முன்னுரிமை பட்டியலில் திருச்சி NIT, அண்ணா பல்கலை, வேலூர் VIT, கோவை PSG கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டு உயர்கல்வியில் முதன்மை மாநிலமாக இருப்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். இதேபோல், இன்னும் பல கல்லூரிகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

News August 19, 2024

மூலிகை: டெஸ்டோஸ்டீரானை அதிகரிக்கும் அக்கரகாரம்

image

ஆண் பாலின இயக்க ஊக்கியான டெஸ்டோஸ்டீரான் உற்பத்தியை அதிகரிக்கும் ஆற்றல் அக்கரகாரத்திற்கு இருப்பதாக சித்த நூல் கூறுகிறது. அஸ்டிரேசியே, பெல்லிடோரின், இனுலின் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள அதன் வேரோடு செஞ்சந்தனம், சுக்கு, மிளகு, ஜாதிக்காய், குங்குமப்பூ சேர்த்து செய்யப்படும் மருந்தை உரிய வகையில் உண்டால், நரம்புத் தளர்ச்சி நீங்குவதோடு, விந்தணுக்களின் உயிர்ப்புத் தன்மை அதிகரிக்குமாம்.

News August 19, 2024

நாடு முழுவதும் அக்டோபரில் BSNL 4ஜி சேவை?

image

நாடு முழுவதும் அக்டோபர் மாதம் 4ஜி சேவையை, BSNL தொடங்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 4ஜி சிம்மை ஏற்கெனவே விநியோகித்து வரும் BSNL, அந்த சேவையை தொடங்கும் வகையில் 25,000 டவர்களை அமைத்து அலைவரிசையை சோதித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த சோதனைக்கு வெற்றி கிடைத்திருப்பதால், சேவையை தொடங்கும் நேரம் வந்துவிட்டதாக, BSNL மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

News August 19, 2024

Housing board-ன் நோக்கம் சிதைகிறதா?

image

தவணை முறையை கைவிடும் முடிவால், ‘வாங்கக் கூடிய விலையில் அனைவருக்கும் வீடு’ என்ற அடிப்படை நோக்கத்தை விட்டு, <<13888468>>Housing board<<>> விலகி செல்வதாக சமூக ஆர்வலர்கள் சாடியுள்ளனர். BANK லோனில் வீடு வாங்க வேண்டும் என்றால், மக்கள் தனியார் கட்டுமான நிறுவனங்களை அணுகலாமே. அதனால், தவணை முறையை மீண்டும் செயல்படுத்த அரசு உத்தரவு பிறப்பிக்க வலியுறுத்தும் அவர்கள், அப்போதுதான் திட்டத்தின் நோக்கம் நிறைவேறும் என்கின்றனர்.

error: Content is protected !!