India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சகோதர – சகோதரிகளுக்கு இடையிலான உறவுப் பிணைப்பின் விழாவாக கருதப்படும் ரக்ஷாபந்தன் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. ராக்கி கட்டும் பாரம்பரியம் இன்றுவரை தொடர்ந்தாலும், எந்த கையில் கட்ட வேண்டும் என பலருக்கும் தெரியவில்லை. இந்த நன்னாளில் வலது மணிக்கட்டில் மட்டுமே ராக்கி கட்ட வேண்டும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. அப்படி கட்டினால்தான் இருவர் வாழ்விலும் என்றென்றும் மகிழ்ச்சி நிலைத்திருக்குமாம்.
உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுபவர் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் தனது 16ஆவது ஆண்டை அவர் நிறைவு செய்துள்ளார். அவரது சில சாதனைகளை உடைப்பது மிகவும் கடினமாக பார்க்கப்படுகிறது. அதன் விவரம்:- 1.அதிக ODI சதங்கள் (50). 2.சேஸிங்கில் மட்டும் 27 சதங்கள். 3.அதிக ரன்கள்: 2023 WC 765 ரன்கள் குவித்துள்ளார் (மொத்தமாக 35,000+, T20-12,886, ODI-13,906, Test-8,848)
நில ஒதுக்கீடு புகாரில் சிக்கிய கர்நாடக முதல்வர் சித்தராமையாவை பதவி விலக சொல்வீர்களா? என, ராகுலுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. கொல்கத்தா பெண் மருத்துவர் பலி சம்பவம் பற்றி, ராகுல் எதிர்வினையாற்றி இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள TMC EX MP குனால் கோஷ், சித்தராமையா மீதான புகார், கவலை தரும் ஊழல் குற்றச்சாட்டு என பதிவிட்டுள்ளார். இது, INDIA அணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டுக் கடன் வாங்குவோர் வட்டி விகிதத்தை அறிவது அவசியம். அதை இங்கு (% அடிப்படையில்) தெரிந்து கொள்வோம். * எஸ்பிஐ: 8.50 – 9.85 * பிஎன்பி: 8.40 – 10. 15 * BOI: 8.40 – 10.85 * கனரா: 8.40 – 11.25 * IOB – 8.40 – 10.60 * ICICI: 8.75 * AXIS: 8.75 – 13. 30 * HDFC – 8.75 * CUB: 8.25 – 10.50 * தமிழ்நாடு மெர்கண்டைல்: 8.60 – 9.95 * LIC வீட்டுவசதி – 8.50 – 10.75 * ICICI HOME FINANCE- 9.10
அம்மன் கோயில்களில் ADMK முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூழ் ஊற்றி வழிபாடு நடத்தினார். சென்னை ராயபுரம் ஆடுதொட்டி கருமாரி அம்மன் கோயில், கெனால் தெருவில் உள்ள தேவி கருமாரி அம்மன் கோயில் ஆகியவற்றில் ஆடி திருவிழா
சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஜெயக்குமார், பக்தர்களுக்கு கூழ் ஊற்றினார். பின்னர் சிறப்புப் பூஜையில் பங்கேற்று தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தினார்.
அதிமுக ஆட்சியில் தொழில்துறையின் முதன்மை செயலாளராக இருந்த முருகானந்தம், திமுக ஆட்சி அமைந்தவுடன் நிதித்துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டார். நிதித் துறையில் அதிகம் அனுபவம் வாய்ந்தவர்களையே நியமிப்பார்கள். ஆனால் அனுபவம் இல்லாத முருகானந்தத்தை ஸ்டாலின் நியமித்தது, அவர் மீதான நம்பிக்கையை காட்டியது. அதற்கு ஏற்ப அவரும் சிறப்பாக செயல்பட்டு, அப்போதைய நிதியமைச்சர் பிடிஆரிடம் பாராட்டை பெற்றார்.
குமரியில் பிரபல ரவுடி செல்வத்தை, போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்துள்ளனர். 6 கொலை உட்பட 28 வழக்குகளில் தொடர்புடைய செல்வத்தை பிடிக்க முயற்சி செய்தபோது, போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றுள்ளார். இதனையடுத்து தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தி, அவரை பிடித்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்குப்பின் ரவுடிகள் மீது அடுத்தடுத்து என்கவுன்டர் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் 1984இல் வெளியான “இண்டியானா ஜோன்ஸ் & தி டெம்பிள் ஆஃப் டூம்” என்ற திரைப்படம் உலகளவில் அமோக வரவேற்பைப் பெற்றது. அப்படத்தில் ஜோன்ஸ் வேடத்தில் நடித்த ஹாரிசன் போர்டு எண்ணற்ற சாகச சண்டைகளுக்காக, தனி ரசிகர் பட்டாளமே கொண்டிருந்தார். அண்மையில் அவரது ஸ்டண்ட் டூப் ஆர்டிஸ்ட்டான பெராதினி மறைந்ததைத் தொடர்ந்து, அவரிடம் இருந்த ஜோன்ஸ் தொப்பி ₹5.28 கோடிக்கு ஏலத்தில் விற்கப்பட்டது.
காஷ்மீர் தொடங்கி குமரி வரை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. குழந்தை, மாணவி, மூதாட்டி என வயது வேறுபாடின்றி பாலியல் சீண்டல், வன்முறை, படுகொலை என சொல்லொணா துயரத்திற்கு ஆளாகின்றனர். இத்தகைய கொடூர குற்றங்களை அரங்கேற்றும் மனிதகுல விரோதிகளை, தீவிரவாதிகளைப் போலவே நடத்த சட்டம் கடுமையாக்கப்பட்டு, உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டுமென்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.
ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி, பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், சகோதர சகோதரிகளுக்கு இடையே உள்ள அபரிமிதமான அன்பின் அடையாளமாக ரக்ஷா பந்தன் இருப்பதாக கூறிய அவர், இந்த புனித பண்டிகை உங்கள் உறவுகளில் புதிய இனிமையையும், உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், செழிப்பையும், அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரட்டும் என பதிவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.