news

News August 19, 2024

புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளதா? இது உங்களுக்குதான்

image

புகைப்பிடித்தல் உடலுக்கு கெடுதல் என விளம்பரம் வெளியிட்டும், பலர் அதை தொடர்கின்றனர். இந்த பழக்கத்தால், அவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர். அவை என்னென்ன? 1) வாய் புற்றுநோய் 2) ஆண்மைக் குறைவு 3) அல்சர் 4) சொரியாசிஸ் 5) காது கேளாமை 6) சுவாசப் பிரச்னை 7) இதய நோய் 8) எலும்புப்புரை நோய் ஏற்படக்கூடும். ஆதலால் புகைப்பிடித்தலை தவிர்க்கவும். SHARE IT

News August 19, 2024

அக.23இல் அமைச்சரவையில் மாற்றம்?

image

வரும் 23ஆம் தேதி தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து புதியவர்கள் சிலருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். ஏற்கனவே, அமைச்சராக இருந்து நீக்கப்பட்ட ஒருவருக்கு மீண்டும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும், சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News August 19, 2024

முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளிக்க…

image

தமிழக மக்களிடம் இருந்து கோரிக்கை மனு, புகார் மனு பெற தலைமைச் செயலகத்தில் தனி அலுவலகம் உள்ளது. அதற்கு தபால் மூலமும், மின்னஞ்சல் மூலமும் மனு அளிக்கலாம். தபாலில் மனு அளிக்க “சிறப்பு அதிகாரி, முதல்வரின் முகவரி துறை, தலைமை செயலகம், சென்னை -600009” என்ற முகவரிக்கு மனு அனுப்ப வேண்டும். மின்னஞ்சல் எனில், “cmcell@tn.gov.in, mudhalvarinmugavari@gmail.com” என்பதற்கு மின்னஞ்சல் அனுப்பலாம். SHARE IT

News August 19, 2024

நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்தார் விஜய்

image

தவெக கட்சிக் கொடி அறிமுக விழாவிற்கு மாவட்டத் தலைவர்கள் உட்பட 250 நிர்வாகிகளுக்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக.22ல் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சிக்கொடியை அவர் அறிமுகம் செய்கிறார். இதற்காக அங்கு 40 அடி உயரத்தில் கொடிக்கம்பம் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, செப்டம்பரில் விக்கிரவாண்டியில் தவெக முதல் மாநாடு நடைபெற உள்ளது.

News August 19, 2024

மம்தா குறித்து பதிவிட்ட மாணவி கைது!

image

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக, வன்முறையை ஊக்குவிக்கும் வகையில் பதிவிட்டதாக, மாணவியை போலீசார் கைது செய்தனர். கீர்த்தி ஷர்மா என்ற கல்லூரி மாணவி தனது இன்ஸ்டாவில், “பயிற்சி மருத்துவர் வன்படுகொலை வழக்கில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மறைந்த பிரதமர் இந்திரா காந்தியை போல் மம்தாவும் சுட்டுக்கொல்லப்பட வேண்டும். நீங்கள் இதை செய்யாவிட்டால், நான் ஏமாற்றமடைவேன்” எனப் பதிவிட்டிருந்தார்.

News August 19, 2024

ஸ்டாலினுக்கு ராக்கி கட்டிய பிரம்மகுமாரிகள்

image

சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக்சா பந்தன் பண்டிகையையொட்டி, தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பிரம்மகுமாரி சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். தலைமைச்செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்திற்கு சென்று, அவரது கையில் ராக்கி கயிற்றைக் கட்டி, அவர்கள் இனிப்புகளை வழங்கினர். அப்போது, முதல்வரும் நெகிழ்ச்சியுடன் சகோதரத்துவத்தின் அடையாளமாக ரக்சா பந்தன் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

News August 19, 2024

இபிஎஸ் கையில் “ரக்‌ஷா பந்தன்” கட்டிய பெண்கள்

image

நாடு முழுவதும் சகோதரத்துவத்தை உணர்த்தும் “ரக்‌ஷா பந்தன்” பண்டிகையை, மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், சென்னையிலுள்ள செவ்வந்தி இல்லத்தில் இபிஎஸ் கையில் அதிமுக பெண் நிர்வாகிகள் ரக்‌ஷா பந்தன் கட்டி, வாழ்த்து பெற்றனர். இதுகுறித்து, இபிஎஸ் “மதங்களைத் தாண்டிய சகோதரத்துவம் என்றென்றும் தழைத்தோங்கட்டும்” என்று எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

News August 19, 2024

ஐபிஎல்லில் இந்த அணியே எனது எதிரி: கோலி

image

ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிதான் தனது எதிரி என்று ஆர்சிபி வீரர் கோலி தெரிவித்துள்ளார். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது அவரிடம், எந்த அணியை ஐபிஎல்லில் எதிரியாக நினைக்கிறீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு அவர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என பதிலளித்தார். தோனி, டி வில்லியர்ஸ் ஆகியோரில் யாரை பிடிக்கும் என்ற கேள்விக்கு, 2 பேரையும் பிடிக்கும் என கோலி கூறினார்.

News August 19, 2024

இந்திய ராணுவ முன்னாள் தளபதி மரணம்

image

இந்திய ராணுவ முன்னாள் தளபதி சுந்தரராஜன் பத்மநாபன் சென்னையில் காலமானார். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அவர், ராணுவத்தில் சேர்ந்து 43 ஆண்டுகள் நாட்டுக்கு சேவை செய்துள்ளார். குறிப்பாக, 2000 அக்டோபர் முதல் 2002 டிசம்பர் வரை ராணுவ தளபதியாக பதவி வகித்துள்ளார். ஓய்வுக்கு பிறகு சென்னையில் மனைவி, மகளுடன் வசித்து வந்த அவர், தனது 84ஆவது வயதில் காலமானார். நாளை மாலை இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.

News August 19, 2024

DON’T MISS: அப்புறம் பார்க்க முடியாது!

image

2024ஆம் ஆண்டின் முதல் சூப்பர் ப்ளூ மூன் இன்று வானில் தோன்றவுள்ளது. 6 ஆண்டுகள் கழித்து, இந்த அபூர்வமான வானியல் அதிசயம் நிகழவுள்ளது. இன்று நிலவின் ஒளி வழக்கத்தை விட 30% பிரகாசமாகவும் 14% பெரியதாகவும் இருக்கும். இந்தியாவில் இன்றிரவு 8 மணி முதல் நாளை (ஆக.20) அதிகாலை 5.32 மணி வரை நீடிக்கும் இந்த வான் நிகழ்வை, வெறும் கண்களால் பார்க்கலாம். பூமிக்கு மிக அருகில் நிலவு (3,57,244 கி.மீ., தூரம்) வரவுள்ளது.

error: Content is protected !!