news

News August 19, 2024

மலையாள நடிகைகளுக்கு பாலியல் நெருக்கடி

image

மலையாள திரையுலகில் நடிகைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்தும் வழக்கம் உள்ளதாக நீதிபதி ஹேமா ஆணையம் அறிக்கையில் கூறியுள்ளது. முத்தக் காட்சி, நிர்வாணமாக நடிக்க கட்டாயப்படுத்தப்படுவதாகவும், மறுக்கும் நடிகைகளுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், நடிகைகளை பாலியல் ரீதியாக மிரட்டும் நடிகர்களின் பட்டியலில், முன்னணி நடிகர்களே அதிகம் இருப்பதாகவும் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளது.

News August 19, 2024

ராணுவ Ex ஜெனரல் மறைவு: ஸ்டாலின் இரங்கல்

image

உடல்நலக்குறைவால் உயிரிழந்த ராணுவ Ex தளபதி, ஜெனரல் பத்மநாபனின் மறைவுக்கு, முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக Xஇல் பதிவிட்டுள்ள அவர், பத்மநாபனின் தலைமையும், தேசப் பாதுகாப்பிற்கான அவரது அர்ப்பணிப்பும், என்றும் நினைவுகூரப்படும் எனக் கூறியுள்ளார். மேலும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு CM ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

News August 19, 2024

நவம்பரில் உற்பத்தியை தொடங்குகிறது Tata Electronics

image

ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக் நிறுவனத்தின் ஐஃபோன் உற்பத்தி ஆலை இந்த ஆண்டு நவம்பரில் இருந்து உற்பத்தியைத் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 250 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த ஆலை, இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் 4ஆவது அசெம்பிளி ஆலையாகும். இந்த ஆலையில் சுமார் 50,000 ஊழியர்கள் பணியாற்றவுள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என டாடா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 19, 2024

சிஎஸ்கே அணி தக்கவைக்கும் வீரர்கள்?

image

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக மெகா ஏலம் வரும் டிசம்பரில் நடைபெற உள்ளது. இதில் 8 வீரர்கள் வரை தக்கவைத்துக்கொள்ள சில அணிகள் பிசிசிஐயை வலியுறுத்தி வருகின்றன. அப்படி 8 வீரர்களை தக்கவைக்க அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் ருதுராஜ், ஜடேஜா, தோனி, துபே, தீபக் சாஹர், தேஷ்பாண்டே (அ) ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், பதீரனா, கான்வே ஆகியோர் தக்கவைக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இது குறித்து உங்கள் கமெண்ட் என்ன?

News August 19, 2024

கெட்டுப்போன உணவை சாப்பிட்ட குழந்தைகள் பலி

image

ஆந்திர மாநிலம் கைலாசப்பட்டணத்தில் ஆராதனா என்ற அறக்கட்டளையின் விடுதியில் உணவு சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் குழந்தைகள் கெட்டுப்போன உணவை சாப்பிட்டது தெரியவந்துள்ளது. மேலும், ஒவ்வாமை ஏற்பட்ட 37 குழந்தைகளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 19, 2024

நீரஜ் 3 முறை தொடர்ந்து ஃபவுல் ஆனது ஏன்?

image

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் இறுதிப் போட்டியில் நீரஜ் 3 முறை ஃபவுல் ஆக அவருக்கு இருந்த நெருக்கடியே காரணம் என முன்னாள் வீரர் தேவேந்திர ஜஜாரியா கூறியுள்ளார். பாக்., வீரர் நதீம் 2ஆவது முயற்சியில் 92.97 மீ தூரம் எறிந்ததால், அவரை வீழ்த்தும் நோக்கில் விளையாடியதால் நீரஜ் கடைசி 3 முறை ஃபவுல் ஆனதாகவும் அவர் தெரிவித்தார். இந்த போட்டியில் 89.45 மீட்டர் ஈட்டி எறிந்த நீரஜ் வெள்ளியும், நதீம் தங்கப் பதக்கமும் வென்றனர்.

News August 19, 2024

அவருக்கும் NCCக்கும் எந்த தொடர்பும் இல்லை

image

கிருஷ்ணகிரியில் எந்த NCC முகாமும் நடக்கவில்லை என NCC தலைமை அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், பாலியல் வன்கொடுமை புகாரில் தொடர்புடைய நபருக்கும் NCCக்கும் எந்த தொடர்புமில்லை எனவும் கூறியுள்ளது. போலியாக NCC முகாம் நடத்தி பள்ளிச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நாதக முன்னாள் நிர்வாகி <<13891818>>சிவராமன்<<>> கைது செய்யப்பட்டார். தனியார் பள்ளியில் அவர் போலியாக முகாம் நடத்தியது அம்பலமாகியுள்ளது.

News August 19, 2024

பாலியல் சீண்டல்.. 1098 என்ற எண்ணில் புகாரளிக்கலாம்

image

கிருஷ்ணகிரி பர்கூரில், தனியார் பள்ளியில் NCC CAMPக்கு சென்ற மாணவியிடம், நாம் தமிழர் Ex நிர்வாகி அத்துமீறிய விவகாரம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் போலியாக NCC முகாம்கள் நடந்ததா? என்பது பற்றி விசாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாலியல் தொல்லை குறித்து 1098 என்ற எண்ணில், மாணவிகள் புகார் அளிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News August 19, 2024

மூலத்தில் இருந்து குணமடைய…

image

மூல நோயால் சிலர் கடும் அவதிப்படுவர். அவர்கள் கீழ்காணும் காய்கறிகள், பழங்கள், பருப்புகளை அன்றாடம் எடுத்துக் கொண்டால் குணமடையலாம். 1) பழங்கள்: ஆப்பிள், பேரிக்காய், பெர்ரி, வாழைப்பழம், ஆரஞ்சு 2) காய்கறிகள்: ப்ராக்கோலி, கேரட், கீரை வகைகள் 3) முழு தானியங்கள்: ஓட்ஸ், முழு கோதுமை பிரெட், பிரவுன் அரிசி, பார்லி, உமியுள்ள தானியங்கள் 4) பருப்பு வகைகள்: பயறு, கொண்டைக் கடலை, பட்டாணி.

News August 19, 2024

மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளிகள் அவதி

image

கொல்கத்தாவில் கடந்த 8ஆம் தேதி மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பலருக்கு தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், சஞ்சய் ராய் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து டெல்லியில் தொடர்ந்து 8ஆவது நாளாக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், நோயாளிகள் அவதியடைந்துள்ளனர்.

error: Content is protected !!