India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பசலைக் கீரை ஜூஸை அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம். * உடல் எடையை குறைக்க உதவும் * நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் * எலும்பு வலிமைக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது * கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது * சரும ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கிறது * வயிற்றுப் புண்ணை ஆற்றும் * செரிமான செயல்பாடுகளை சீராக்கும். SHARE IT
கருணாநிதி நினைவு நாணயத்தின் விலை ₹10,000 என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மறைந்த திமுக தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி, ₹100 நினைவு நாணயம் நேற்று வெளியிடப்பட்டது. இந்த நாணயம், சென்னையில் உள்ள <<13886599>>அண்ணா<<>> அறிவாலயத்திற்கு வந்துவிட்டதாகக் கூறிய CM, தேவைப்படுவோர், ₹10,000 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வரும் 23ஆம் தேதி அரசு முறை பயணமாக உக்ரைன் செல்வதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் செல்லும் பிரதமர், அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வரும் வேளையில், பிரதமரின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பாஜகவுடன் இணக்கமாக செல்லும் முடிவை திமுக எடுக்க முடியாது என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். திமுக அரசு செய்யக்கூடிய நல்ல விஷயங்களை ஆதரிப்போம் என்று கூறிய அவர், மக்கள் விரோத அரசின் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்ப்போம் எனவும் தெரிவித்தார். பாஜகவுடன் யார் சென்றாலும் அவர்களை எதிர்க்கிற கூட்டணியில் தான் மார்க்சிஸ்ட் இடம்பெறும் என்றும் கூறினார்.
தமிழக அரசுப் பள்ளிகளுக்கு, விரைவில் இரவு காவலாளிகள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். செஞ்சியில் பேட்டியளித்த அவர், அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஹைடெக் லேப் மற்றும் இரவு நேரக் காவலர்கள், தூய்மை பணியாளர்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார். மேலும், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கூடுதல் கழிப்பறைகள் கட்டி தரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் அடுத்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கருடன் படத்தின் வெற்றிக்கு பிறகு, சூரிக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு அதிகம் வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இவர் இயக்கத்தில், விமல் நடிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான ‘விலங்கு’ வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை சம்பவத்தில் மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் நாடு முழுவதும் போராட்டம் தொடரும் என, அறிவித்துள்ள MCI, உச்ச நீதிமன்ற முடிவுக்கு காத்திருப்பதாக கூறியுள்ளது. பெண் மருத்துவர் கொலையைத் தொடர்ந்து மருத்துவர்கள் பாதுகாப்பு சட்டம், மருத்துவமனைகளை பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க கோரி போராட்டம் நடந்து வருகிறது.
இந்தியாவில் UPI பணப்பரிவர்த்தனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஜிபே, ஃபோன்பே, பேடிஎம் ஆகிய செயலிகள் மூலம் பொதுமக்கள் பெரும்பாலான பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். இந்நிலையில், அந்த செயலிகளுக்கு போட்டியாக அமேசான் பே என்ற தனி செயலியை களமிறக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது அமேசான் ஷாப்பிங் செயலியில் உள்ள இந்த வசதியை தனியாக பிரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நில முறைகேடு வழக்கில் கர்நாடக CM சித்தராமையாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அம்மாநில HC இடைக்கால தடை விதித்துள்ளது. நில மோசடி புகாரில் வழக்குத் தொடர அனுமதி அளித்து அம்மாநில கவர்னர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சித்தராமையாக வழக்கு தொடர்ந்திருந்தார். மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சித்தராமையா மனைவி பார்வதியிடம் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விட அதிக மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
Sorry, no posts matched your criteria.