India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழாவில் CM ஸ்டாலின், பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங், அண்ணாமலை உள்ளிட்டோர் இடையே பயங்கர நெருக்கம் காணப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட பிற கூட்டணி கட்சி தலைவர்களைக் கூட திமுக கண்டுகொண்டதாக தெரியவில்லை. இதை சுட்டிக்காட்டி திமுக, பாஜக இடையே மீண்டும் கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் பேசி வருகின்றனர். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?
2024 JV33 சிறுகோள், பூமிக்கு மிக அருகில் இன்று கடந்து செல்லவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. சுமார் 620 அடி விட்டம் கொண்ட இந்த சிறுகோள், சுமார் 28.5 லட்சம் மைல் தொலைவில் பூமியை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. பூமியை அடிக்கடி கடந்து செல்லும் வகையை சேர்ந்த இந்த சிறுகோள், மணிக்கு 24,779 மைல் வேகத்தில் விண்வெளியில் பயணித்து வருகிறது. இதனை விஞ்ஞானிகள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.
சென்னையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பட்டியல் குறித்த அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் EX அமைச்சர் ஜெயக்குமார் பேசியபோது, சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் காணப்படும் குளறுபடியால் மக்களவைத் தேர்தலில் பலரால் வாக்கு அளிக்க முடியவில்லை. இதை சரி செய்யவில்லை என்றால் அதிமுக நீதிமன்றம் செல்லும் என்றார்.
முதலீட்டாளர்கள் மத்தியில் தங்கப்பத்திரம் மீதான மவுசு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அதன் Real valueஐ விட சுமார் 10% அதிக விலைக்கு வர்த்தகமாகி வருகிறது. தங்க பத்திரங்களுக்கு ஆண்டுக்கு 2.5% வட்டி வழங்க வேண்டியுள்ளதால், இத்திட்டத்தை கைவிட மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பழைய SGBக்கு சந்தையில் டிமாண்ட் அதிகரித்துள்ளது. SGBக்கு முதிர்வு காலத்தில் LTCG கிடையாது.
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணி நாளை முதல் தொடங்குகிறது. போட்டோவுடன் கூடிய வோட்டர் லிஸ்ட் திருத்த பணிகளை எலெக்ஷன் கமிஷன் அறிவித்துள்ளது. இதற்காக நாளை முதல் அக்டோபர் 18ஆம் தேதி வரை, அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஓட்டர் லிஸ்ட் சரிபார்த்தல், முரண்பாடுகளை களைதல், தரமான PHOTO இணைத்தல் போன்ற பணிகள் செய்யவுள்ளனர். 2025 ஜனவரி 6ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
மம்தாவை விமர்சித்தால், அவர்களின் விரல்கள் உடைக்கப்படும் என மே.வங்க அமைச்சர் உதயன் குஹாவின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற நபர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்படாவிட்டால் மே.வங்கத்தை வங்கதேசமாக மாற்றிவிடுவார்கள் என்றும் விமர்சித்துள்ளார். பெண் பயிற்சி மருத்துவர் மரணத்திற்காக, அவர் பணியாற்றி மருத்துவமனை சூறையாடப்பட்ட போதும் அரசு துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என்றார்.
பிரபல பின்னணி பாடகி P.சுசீலா, ஹாஸ்பிட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். சுவாசக் கோளாறு பிரச்னையால் பாதிக்கப்பட்ட அவர், 2 நாள்களுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்யப்பட்டார். இதையடுத்து, இன்று டிஸ்சார்ஜ் ஆகியுள்ள அவர், சிறப்பான சிகிச்சை அளித்ததாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செயல்பட்டுவரும் இந்திய அஞ்சல் துறையில் மெயில் மோட்டார் சர்வீஸ் பிரிவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 18 -30 வயதிற்குட்பட்ட, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் www. indiapost.gov.in என்ற இணையதளம் மூலம் ஆக.30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் பணி நியமனங்களில் நேரடி நியமனத்திற்கு மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பணி நியமனங்களில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும் என்று கூறிய அவர், பாஜகவின் கூட்டணி கட்சியாக லோக் ஜனசக்தி இருந்தாலும் அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்றார். மத்திய அரசிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்ப உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டுக்கான சூப்பர் ப்ளூ மூன் இன்று வானில் தோன்றியுள்ளது. ப்ளூ மூன் என்றால், நீல நிறத்தில் நிலா இருக்கும் என அர்த்தமில்லை. நிலவின் சுற்று வட்டப்பாதை குறைந்து, பெளர்ணமி முழு நிலவாக காட்சியளிப்பதும், சில நேரங்களில் வளிமண்டல ஒளி சிதறலால், நீல நிறத்தில் நிலா தெரிவதுமே சூப்பர் ப்ளூ மூன். இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை இந்தியாவில் இதனை காணலாம். உங்களுக்கு சூப்பர் ப்ளூ மூன் தெரிந்ததா?
Sorry, no posts matched your criteria.