India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் ஒரு வாரத்தில் 26 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. தொடர் குற்றங்களில் கைதான நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். அதன்படி, வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதற்கு கைதாகி சிறையில் இருந்த 26 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டால் ஓராண்டு சிறையில் இருக்க வேண்டியிருக்கும்.
திட்டங்களை வகுப்பதில் ரோஹித் ஷர்மா வல்லவர் என முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறியுள்ளார். டாஸில் பேட் செய்வதா அல்லது பந்து வீசுவதா என்பதை கூட சில நேரத்தில் ரோஹித் மறக்கலாம் என்ற அவர், ஆடுகளத்தில் கேப்டனாக செய்ய வேண்டியதை ஒருபோதும் மறக்க மாட்டார் என்றார். களத்திற்கு வெளியே நாம் யோசித்து முடிப்பதற்குள், களத்தில் அதை ரோஹித் செய்து முடித்திருப்பார் எனவும் புகழாரம் சூட்டினார்.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களின் வங்கி கடன்களை ரத்து செய்ய வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். வங்கிகள் கூட்டமைப்பு கூட்டத்தில் பேசிய அவர், வட்டித் தொகையில் தளர்வு அல்லது மாதாந்திர தவணை நீட்டிப்பு ஆகியவை நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான தீர்வாக இருக்காது என்றார். கடன்களை ரத்து செய்வதால் வங்கிகளுக்கு பெரிய அளவில் சுமைகள் ஏற்படாது எனவும் தெரிவித்தார்.
*மேஷம் – வெற்றி உண்டாகும்
*ரிஷபம் – நன்மை தேடி வரும்
*மிதுனம் – பயம் ஏற்படும்
*கடகம் – ஆக்கப்பூர்வமான நாள்
*சிம்மம் – சிக்கல் உண்டாகும்
*கன்னி – அன்பு அதிகரிக்கும்
*துலாம் – லாபகரமான நாள்
*விருச்சிகம் – களிப்பு ஏற்படும்
*தனுசு – உடல் நலம் மேம்படும்
*மகரம் – உயர்வான நாள் *கும்பம் – சோர்வு ஏற்படும் *மீனம் – பாசம் அதிகரிக்கும்
‘வாடிவாசல்’ படத்தின் வேலைகள் விரைவில் தொடங்கவுள்ளதாக கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையில் அலுவலகம் அமைத்து, அங்கு மாடுபிடி வீரர்களை சந்தித்து படத்திற்காக பயிற்சி அளிக்கவுள்ளதாக கூறினார். ஆரம்பத்தில் 3 நாள்கள் படப்பிடிப்பு நடந்ததாக கூறிய அவர், அதிலிருக்கும் ஆபத்துகளை உணர்ந்து பார்த்து பார்த்து செயல்படுவதால் காலதாமதம் ஏற்படுவதாக தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனிமொழி எம்.பி வலியுறுத்தியுள்ளார். பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், இனியும் இதுபோன்ற மனிதத் தன்மையற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும் கடுமையான நடவடிக்கை தேவை எனக் கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிவராமன் என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய காலத்தில் பலருக்கும் அறிகுறிகள் இல்லாமலே திடீர் மாரடைப்பு ஏற்படுகிறது. இருப்பினும் ஒரு சில அறிகுறிகளை வைத்து இதை நாம் அறிந்துகொள்ளலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். தொடர்ச்சியாக காரணமில்லாத சோர்வு, உடலில் எந்த இயக்கம் இல்லாதபோதும் மூச்சுவிடுவதில் சிரமம், உடலின் மேற்பகுதியில் வலி, வேலை செய்யாமல் இருக்கும்போதும் தொடர்ச்சியாக வியர்ப்பது போன்றவை மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என்கிறார்கள்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்க வேண்டுமென்று இபிஎஸ்சுக்கு திமுக சார்பில் அவரின் வீட்டிற்கு நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதிமுக சார்பில் இபிஎஸ்சோ அல்லது வேறு தலைவர்களோ பங்கேற்கவில்லை. இதேபோல், பாமக சார்பில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட யாரும் பங்கேற்கவில்லை.
முதுநிலை சட்டப்படிப்பு (LLM) மாணவர் சேர்க்கை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சட்டக் கல்லூரிகளில் 2 ஆண்டு முழுநேர சட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கான அவகாசம் இன்று வரை (ஆக.19) இருந்தது. இந்நிலையில் இந்த அவகாசம் வரும் 31ம் தேதி வரை சட்டக்கல்வி இயக்ககம் நீட்டித்துள்ளது. மேலும் தகவல்களுக்கு சட்டக்கல்வி இயக்கக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
கோலி மற்றும் ரோஹித் இருவரும் துலீப் கோப்பை தொடரில் ஏன் விளையாடவில்லை என கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால், இருவரும் வங்கதேச தொடரில் பயிற்சி எடுக்காமலேயே களமிறங்க உள்ளதாக கூறிய அவர், அணியின் நலனுக்கு அது உகந்ததாக இருக்காது என்றும் அதிருப்தி தெரிவித்தார். 35 வயதை கடந்த வீரர்கள் தொடர்ந்து விளையாடுவது, அவர்களின் தரத்தை உயர்த்த பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் கூறினார்.
Sorry, no posts matched your criteria.