India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶ஆகஸ்ட் – 20 ▶ஆவணி – 04 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 07:45 AM – 08:45 AM & 04:45 PM – 05:45 PM ▶கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM & 07:30 PM – 08:30PM ▶ராகு காலம்: 03:00 PM – 04:30 PM ▶எமகண்டம்: 09:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 01:30 PM >▶திதி: பிரதமை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: திருவாதிரை.
தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோவை, குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் வானம் இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறியுள்ளது.
உலக நாடுகளில் குரங்கு அம்மை வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் எல்லைகளில் அதி தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமரின் முதன்மை செயலாளர் ஆர்.கே.மிஸ்ரா சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை மேற்கொண்ட நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.
*தோல்வியை ஒப்புக்கொள்ள பயப்படாதீர்கள். தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். *கற்றலானது ஒருபோதும் பிழைகள் மற்றும் தோல்வி இல்லாமல் செய்யப்படுவதில்லை. *திரும்பத்திரும்ப சொல்லப்படும் ஒரு பொய் உண்மையாகிறது. * மிகவும் விலைமதிப்பற்ற சுதந்திரம் கவனமாக பங்கிடப்பட வேண்டும். *நாத்திகம் என்பது பொதுவுடைமையின் இயல்பான மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகும். *நம்பிக்கை நல்லது, ஆனால் கட்டுப்பாடு சிறந்தது.
தமிழக ரயில்வே பணிகளுக்கு UPA அரசை விட NDA அரசு 7 மடங்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். CM ஸ்டாலின் விரைவாக நிலம் கையகப்படுத்தி கொடுத்தால் தான் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் நிதி குறைக்கப்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
அரசியலில் பயணித்து கொண்டே சினிமாவில் நடிக்க வாய்ப்பிருக்கிறதா என கேட்ட போது, நடிகர் விஜய் சிரித்து விட்டு பார்க்கலாம் என கூறியதாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். விஜயை திரையில் பார்ப்பது தன்னை போன்ற ஒரு சாதாரண ரசிகனின் ஆசை எனவும், இருப்பினும் அவரது முடிவுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டியது முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார். ‘தளபதி 69’ படத்துடன் விஜய் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளார்.
ரஷ்ய கடற்படை தளபதி அலெக்சாண்டர் நேற்று இந்தியா வந்தடைந்தார். இரு நாடுகளுக்கு இடையிலான கடல்சார் பாதுகாப்பு, ராணுவ ஒத்துழைப்பு குறித்து இந்திய முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் மற்றும் கடற்படை தளபதி தினேஷ் திரிபாதியுடன் அவர் நேற்று விரிவான ஆலோசனை மேற்கொண்டார். பிரதமர் மோடி வருகிற 23ஆம் தேதி உக்ரைன் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், ரஷ்ய தளபதி வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
▶1948 – இலங்கை குடியுரிமை சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 7 லட்சத்திற்கும் அதிகமான தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர். ▶1995 – உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற ரயில் விபத்தில் 358 பேர் உயிரிழந்தனர். ▶2006 – நமது ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் சி. சிவமகராஜா, யாழ்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு பல்வேறு அமைப்புகளிடம் இருந்து ₹16 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு அவரது கணவர் சோம்வீர் ரதி மறுப்பு தெரிவித்துள்ளார். வினேஷ் யாரிடம் இருந்தும் பணம் பெறவில்லை எனவும், மலிவான பிரபலத்திற்காக இந்த பொய்யான தகவல் பரபரப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இது தங்களை மட்டும் காயப்படுத்தாமல் சமூக மதிப்பை பாதிப்பதாக தெரிவித்துள்ளார்.
தேசிய கிரிக்கெட் அகாடமியின் அறிக்கையை பொறுத்தே இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விளையாடுவாரா என்பது குறித்து தெரியவரும் என BCCI செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். கணுக்கால் காயம் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் முதல் ஷமி எந்த போட்டியிலும் விளையாடவில்லை. தற்போது சிகிச்சை முடிந்து அவர் மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
Sorry, no posts matched your criteria.