India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி கைது செய்யப்பட்டுள்ளார். ஆற்காடு சுரேஷ் தெவசத்தின் போது, கணவனை கொன்றவர்களை பழிவாங்க சபதமெடுத்த பொற்கொடி, அதற்காக தனது தாலிச்சரடை கழட்டிக் கொடுத்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. சுரேஷின் காதலி அஞ்சலையும் ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். ஆம்ஸ்ட்ராங்கை எதிரிகள் யானை (பிஎஸ்பி சின்னம்) என்றே குறிப்பிட்டு வந்துள்ளனர்.
காங்., ஒதுக்கியதை விட தமிழகத்திற்கு 7 மடங்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். காங்., ஆட்சியில் ₹879 கோடி ஒதுக்கீடு செய்ததாகவும், பாஜக ₹6,362 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் கூறிய அவர், நிலம் பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுத்தால் திட்டங்களை செயல்படுத்த முடியும் என்றார். போதிய நிதி ஒதுக்கும்படி CM ஸ்டாலின் கோரிய நிலையில், இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றவர் சுமித் அன்டில் (26). பாரிஸில் நடைபெறவிருக்கும் 17ஆவது பாரா ஒலிம்பிக்ஸில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர்கள் குழுவில், ஈட்டி எறிதலில் 3 முறை உலக சாதனை படைத்துள்ள அவரும் இடம்பெற்றுள்ளார். இது குறித்து பேசிய அவர், பாரிஸில் 75 மீ. தூரம் எறிந்து, புதிய உலக சாதனையுடன் மீண்டும் வெற்றி மகுடம் சூடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொடூர சம்பவத்தின் அதிர்வலைகள் ஓய்வதற்குள்ளாகவே, உபியில் மற்றொரு பயங்கரம் அரங்கேறியுள்ளது. சட்டத்தின் மீது துளியும் பயம் இல்லாததையே இது காட்டுகிறது. மொராதாபாத்தில் தனியார் மருத்துவமனையில் இரவுப்பணியின்போது, 20 வயது செவிலியரை, ஷா நவாஸ் என்ற மருத்துவர் கொடூரமாக தாக்கி பலாத்காரம் செய்துள்ளார். புகாரின் பேரில் அந்த மருத்துவரை, போலீஸார் கைது செய்தனர்.
செபி தலைவர் மாதபி புச் மீது ஹிண்டன்பர்க் கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்த மத்திய நிதித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அமைக்கப்படவுள்ள விசாரணைக் குழுவில் செபியின் பிரதிநிதிகளும் இடம் பெறுவார்கள் எனத் தெரிகிறது. இருப்பினும், மாதபியின் கட்டுப்பாட்டில் உள்ள செபியின் பிரதிநிதிகள் விசாரணையில் ஈடுபட்டால், உண்மை மறைக்கப்பட வாய்ப்புள்ளதாக, பலரும் சந்தேகிக்கின்றனர்.
பள்ளியில் படிக்கும்போது, தான் டீச்சரை லவ் பண்ணியதாக, இயக்குநர் அமீர் கூறியுள்ளார். மாரி செல்வராஜின் வாழை திரைப்பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அமீர், “இந்த படத்தில் டீச்சரை மாணவன் லவ் பண்ணுவது போல காட்டப்படுகிறது. நானும் படிக்கும்போது ஒரு டீச்சரை லவ் பண்ணேன். அவங்க சேலை முந்தானையை பிடிச்சு பார்ப்பேன். ஒருவாட்டி இதை பார்த்த இன்னொரு டீச்சர் என்னை முட்டிப்போட சொல்லிட்டாங்க” என நினைவுகூர்ந்தார்.
*பாகிஸ்தான்: கராச்சி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வேந்தர் பதவிக்கு அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் போட்டியிட முடிவு. *ஏமன்: ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தளபதி ஹுசைன் ரபித் உள்பட 3 பேர் சுட்டுக்கொலை. *வங்கதேசம்: மீன் வியாபாரி கொலை வழக்கில் ஷேக் ஹசீனா மீது மேலும் ஒரு கொலை வழக்குப்பதிவு. *பிலிப்பைன்ஸ்: தால் எரிமலை வெடித்து சிதறியதால், மணிலாவை சுற்றியுள்ள பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிப்பு.
இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 300 (தமிழகம் & புதுச்சேரி 160) பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. JNG ஸ்கேல்-1 ஆபிஸர்ஸ் பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: Any Degree. வயது வரம்பு: 20-30. தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு & நேர்காணல். விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்., 2. ஊதியம்: ₹85,920. கூடுதல் தகவல்களுக்கு <
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, திருத்தம் செய்வதற்கான பணி இன்று தொடங்குகிறது. 2025 ஜன.1க்குள் 18 வயது நிறைவடைவோரும் இப்போது வாக்காளர்களாக பதிவு செய்யலாம். இன்று முதல் அக்.18 வரை, அதிகாரிகள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளனர். 2025 ஜன.6ல் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
துணையுடன் வாழ்வது கஷ்டம்; துணை இல்லாமல் வாழ்வது அதைவிட கஷ்டம் என்று நடிகை கங்கனா ரணாவத் மனந்திறந்து பேசியுள்ளார். திருமணம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர், “எனக்கும் திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை இருக்கிறது. இருப்பினும், அது தானாக நடக்க வேண்டும். என் திருமணம் பற்றி எனது பெற்றோரும் கவலைப்படுகிறார்கள். இது பல சங்கடங்களை உருவாக்கி விடுகிறது” என பதிலளித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.